Showing posts with label முதலாளித்துவ எதிர்ப்பு. Show all posts
Showing posts with label முதலாளித்துவ எதிர்ப்பு. Show all posts

Sunday, July 09, 2017

G20: ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம்!



முதலாளித்துவத்திற்கு எதிராக போராடியவர்களை,
தெருவில் அடித்து நொறுக்கும் ஜெர்மன் பொலிஸ். 


G20 மகாநாட்டை எதிர்த்து நடந்த கலவரங்கள் தொடர்பாக நான் இட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு:
ஹம்பூர்க், ஜெர்மனி. G20, ஜேர்ம‌னி, ஹ‌ம்பூர்க்: முத‌லாளித்துவ‌த்திற்கு எதிரான‌ போர்க்க‌ள‌ம். 
- வானில் வ‌ட்டம‌டிக்கும் அமெரிக்க‌ இராணுவ‌ ஹெலிகாப்ட‌ர்க‌ள். 
- டிர‌ம்ப் த‌ங்குவ‌த‌ற்கு எந்த‌க் ஹோட்டேலிலும் இட‌ம் கிடைக்க‌வில்லை! (வ‌ர‌வேற்பில்லை) அத‌னால், அர‌ச‌ விருந்தின‌ர் மாளிகையில் த‌ங்க‌ வைக்க‌ப் ப‌ட்டுள்ளார். 
- வ‌ங்கிக‌ள் த‌ம‌து ஊழிய‌ர்க‌ள‌ விடுமுறை எடுக்க‌ச் சொல்லி இருக்கின்ற‌ன‌. 
- க‌டைக‌ள் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. 
(5 July at 07:29 )


 "Welcome to Hell", "ந‌ர‌க‌த்திற்கு ந‌ல்வ‌ர‌வு"! - ஜேர்ம‌னியில் ந‌ட‌க்கும் முத‌லாளித்துவ‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் ப‌ற்றிய‌ மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ள்: 

உல‌கில்‌ 20 தொழிற்துறை வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ நாடுக‌ள் ஒன்று கூடும் G20 ம‌காநாடு இன்று ஜேர்ம‌னி, ஹம்பூர்க் ந‌க‌ரில் ந‌டைபெறுகின்ற‌து. உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்று கூடி வ‌ர்த்த‌க‌ம் ப‌ற்றிப் பேச‌வுள்ள‌ன‌ர்.

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் பூட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ 
வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள். 
கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்று 
பலகை அடித்து மூடி இருக்கிறார்கள்.
ஜேர்ம‌னியின் இர‌ண்டாவ‌து ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், பார‌ம்ப‌ரிய‌மாக‌ ஒரு இட‌துசாரி ந‌க‌ர‌ம். பெருமள‌வில் க‌ம்யூனிஸ்டுக‌ள், அனார்க்கிஸ்டுக‌ள், தீவிர‌ இட‌துசாரிக‌ளைக் கொண்ட‌ ந‌க‌ர‌ம். 

முத‌லாம் உல‌க‌ப் போர் முடிவில், வெற்றிக‌ர‌மான‌ பாட்டாளிவ‌ர்க்க‌ப் புர‌ட்சி ந‌ட‌ந்து ஹ‌ம்பூர்க் சோவிய‌த் அமைக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. ஜேர்ம‌னியின் பிர‌தான‌மான‌ துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், இப்போதும் இட‌துசாரிக‌ளின் கோட்டையாக‌ க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து. 

ம‌காநாட்டுக்கும், முத‌லாளித்துவ‌த்திற்கும் எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்துவ‌த‌ற்காக‌ ஒரு இல‌ட்ச‌ம் ஆர்வல‌ர்க‌ள் ந‌க‌ர‌த்தில் கூடி இருக்க‌லாம் என்றும், அதில் ஆயிர‌க் க‌ண‌க்கானோர் வ‌ன்முறையில் ஈடுப‌ட‌லாம் என‌வும்‌ காவ‌ல்துறை க‌ண‌க்கிட்டுள்ள‌து. 

அங்கு எந்த‌ நேர‌மும் க‌லவ‌ர‌ம் ந‌ட‌க்க‌லாம் என்ற‌ அச்ச‌ம் கார‌ண‌மாக‌ வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. பொதும‌க்க‌ளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்க‌ள். 

பொலிஸ் வ‌ண்டிக‌ள் தாக்க‌ப் ப‌ட்ட‌ன‌. ர‌யில் த‌ண்ட‌வாள‌ங்க‌ளை தொடுக்கும் மின்சார‌ வ‌ய‌ர்க‌ள் நாச‌மாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. இத‌னால் ந‌க‌ரில் ர‌யில் போக்குவ‌ர‌த்து பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. 
(6 July at 11:16)


"They are coming", "அவர்கள் வருகிறார்கள்" : 
போர்வெறி பிடித்த, நவ தாராளவாத 
கொடுங்கோலர்கள் வருகிறார்கள்.
முத‌லாளித்துவ‌ எதிர்ப்பு கிள‌ர்ச்சிக்கு அஞ்சி,  ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ப‌த‌ற்ற‌ம் நில‌வுகிற‌து. ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்த‌த் த‌டை. ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ந‌க‌ர‌ம் முழுவ‌தும் இராணுவ‌ம‌ய‌மாகிற‌து. பொலிஸ் வாக‌ன‌ங்க‌ளை விட‌ வேறெந்த‌ வாக‌ன‌மும் தெருவில் காண‌ முடிய‌வில்லை. 

அமைதியாக‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌விருந்த‌வ‌ர்க‌ளுக்கு பொலிஸ் அனும‌தி த‌ர‌ ம‌றுத்த‌து. த‌ண்ணீர் பீர‌ங்கிக‌ள் பொருத்திய‌ வாக‌ன‌ங்க‌ளை கொண்டு வ‌ந்திருந்த‌து. ஆர்ப்பாட்ட‌க் கார‌ர்க‌ள் பொலிசாரை தாக்கிய‌தாக‌ சொல்லி த‌ண்ணீர் பாய்ச்சி கூட்ட‌த்தை க‌லைத்த‌து. த‌ம்மை நோக்கி போத்த‌ல்க‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக,‌ பொலிஸ் த‌ன‌து தாக்குத‌லுக்கு நியாய‌ம் க‌ற்பித்த‌து. ஆனால் ஒரு குடிகார‌ன் ம‌ட்டுமே ஒரேயொரு போத்த‌லை வீசிய‌தாக‌ நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் தெரிவித்த‌ன‌. 

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் பொலிஸ் வ‌ன்முறையை எதிர்த்து பெரிய‌தொரு ஆர்ப்பாட்ட‌ப் பேர‌ணி ந‌ட‌ந்தது. இத‌ற்கிடையே, அய‌ல் நாடுக‌ளில் இருந்து ஜேர்ம‌னிக்கு செல்ல‌ முய‌ன்ற‌ அர‌சிய‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ள் த‌டுத்து வைக்க‌ப் ப‌ட்டு, பாஸ்போர்ட் ப‌றிமுத‌ல் செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிய‌ வ‌ருகின்ற‌து. 
(6 July at 23:00)


ச‌க்திவாய்ந்த‌ 20 உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்றுகூடியுள்ள‌ ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ச‌ட்ட‌ம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள‌து. தெருக்க‌ளில் த‌டைக‌ள் போட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் உடைத்து சூறையாட‌ப் ப‌டுகின்ற‌ன‌. பொலிசார் குறைந்த‌து நூறு பேரை கைது செய்துள்ள‌ன‌ர். 

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரின் சில‌ ப‌குதிக‌ளை பொலிஸ் க‌ட்டுப்பாட்டில் வைத்திருக்க‌ முடிய‌வில்லை. இராணுவ‌ம் வ‌ர‌வ‌ழைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கு இர‌ண்டாவ‌து நாளாக‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌க்கிற‌து. இட‌துசாரிக‌ளின் கோட்டைக‌ளாக‌ க‌ருத‌ப்ப‌டும் இட‌ங்க‌ளில் பொலிஸ் வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து வீதித் த‌டைக‌ள் போட‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. 

ப‌ல‌ இட‌ங்க‌ளில் BMW, பென்ஸ் போன்ற‌ ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ள் எரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. ந‌க‌ர‌ம் எங்கும் புகை மூட்ட‌மாக‌ காண‌ப் ப‌டுகின்ற‌து. ஜேர்ம‌ன் ஊட‌க‌ங்க‌ள் "உள்நாட்டுப் போர்" என்று வ‌ர்ணிக்கும் அள‌விற்கு நிலைமை மோச‌ம‌டைந்து வ‌ருகின்ற‌து. 
(7 July at 22:59)




ஹ‌ம்பூர்க் ந‌க‌ர‌ம் பற்றி எரியும் காட்சி. 
"முற்ப‌க‌ல் செய்யின் பிற்ப‌க‌ல் விளையும்." - பழமொழி 

 இல‌ங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற‌ நாடுக‌ளில் பேர‌ழிவு த‌ந்த‌ போர்களை உருவாக்கி, இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அக‌திக‌ளாக‌ அலைய‌விட்ட‌வ‌ர்க‌ள், G20 என்ற‌ பெய‌ரில் கூட்ட‌ம் போடுகிறார்க‌ள். இன்னும் எத்த‌னை பேரைக் கொன்றொழிக்க‌ திட்ட‌ம் போடுகிறார்க‌ளோ தெரிய‌வில்லை. 

அதைக் கண்டு இரத்தம் கொதிக்காதவர்கள், அதையெல்லாம் க‌ண்டுகொள்ளாத‌வ‌ர்க‌ள், "ஐயோ... காரை எரிக்கிறார்க‌ள். க‌டைக‌ளை உடைக்கிறார்க‌ள்." என்று கூப்பாடு போடுகிறார்க‌ள். த‌ங்க‌ள் ந‌ல‌னை ம‌ட்டும் பெரிதென‌ எண்ணும் ப‌ச்சையான‌ சுய‌ந‌ல‌வாதிக‌ள். 

 முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி காரணமாக, இல‌ட்ச‌க் கணக்கானோர் வ‌றுமையில் வாழ்கிறார்க‌ள். வேலை‌யிழ‌ந்த‌வ‌ர்க‌ள் எத்தனை இலட்சம்? அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கோப‌த்தை வெளிப்ப‌டுத்தும் போது இப்ப‌டித் தான் இருக்கும். இது இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தார்மீக‌க் கோப‌ம். த‌ங்க‌ளை இந்த‌ நிலைக்கு த‌ள்ளிய‌ முத‌லாளிக‌ள், அர‌சுக்கு எதிரான‌ கோபம். இது முத‌லாளித்துவ‌த்தின் அவமானகரமான தோல்வி.

"தினை விதைத்த‌வ‌ன் தினை அறுப்பான். வினை விதைத்த‌வ‌ன் வினை அறுப்பான்." - பழமொழி

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுச்சி கொள். 
சோஷலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்.

Friday, September 25, 2015

முதலாளித்துவத்தை எதிர்க்கும் போப்பாண்டவரின் பொன்மொழிகள்




முதலாளித்துவ சாத்தானுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு போப்பாண்டவர் அறைகூவல்! உலக கத்தோலிக்கர்களின் தலைவர், போப்பாண்டவர் பிரான்சிஸ் அண்மைக் காலமாக முதலாளித்துவத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றார். 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த பொழுது, 21 ம் நூற்றாண்டின் சோஷலிசத்தை பின்பற்றும் எக்குவடோர், பொலீவியா போன்ற நாடுகளுக்கே முதலில் சென்றிருந்தார். அது அந்த அரசுக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப் படுகின்றது.

பராகுவே நாட்டுக்கு சென்ற போப்பாண்டவர், தலைநகர் அசுன்சியோனில் பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவரது உரையில் முதலாளித்துவத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இருந்தன. "தற்போதைய பொருளாதாரம் பிசாசின் சாணம்... பணத்தின் மீது பேராசை கொண்ட சர்வாதிகார அமைப்பு..., காலனியாதிக்கம் போன்று ஆண்களையும், பெண்களையும் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது..." என்று அவர் முதலாளித்துவத்தை கடுமையான சொற்களின் மூலம் தாக்கினார்.


கத்தோலிக்க போப்பாண்டவருக்கு, கம்யூனிச சின்னம் பொறித்த பரிசுப்பொருள் வழங்கப் பட்டது! சிலுவையுடன், அரிவாளும், சுட்டியலும் சேர்ந்த வித்தியாசமான பரிசுப் பொருள் ஒன்றை, பொலிவிய ஜனாதிபதி ஏவோ மொராலேஸ், போப் பிரான்ஸிஸிடம் கொடுத்தார்.

எண்பதுகளில் பொலிவியாவை ஆண்ட வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் Luis Espinal, அதே மாதிரியான சின்னம் ஒன்றை வைத்திருந்தார். ஸ்பெயினில் பிறந்த பாதிரியார் லூயிஸ், பொலிவிய குடியுரிமை பெற்று, அந்நாட்டு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார்.

எசுயிஸ்ட் கத்தோலிக்க பாதிரியாரான லூயிஸ், பொலிவியாவின் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளராகவும், இடதுசாரி பத்திரிகையாளராகவும் இருந்தார். 21 மார்ச் 1980, வீட்டுக்கு வரும் வழியில் அவரைக் கடத்திச் சென்ற வலதுசாரி துணைப் படையினர், பல மணிநேரம் சித்திரவதை செய்த பின்னர் சுட்டுக் கொன்றனர்.

இடதுசாரி பாதிரியார் லூயிஸின் பிரபலமான கூற்று ஒன்று, அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளப் போதுமானது.
 "மற்ற மனிதர்களுக்காக பேசும் தைரியமற்ற யாரும், கடவுளுடன் பேசுவதற்கு உரிமையற்றவர்கள்."



"அமெரிக்க ஜனாதிபதியாக ஒரு கருப்பரும், போப்பாண்டவராக ஒரு லத்தீன் அமெரிக்கரும் வரும் காலத்தில், அமெரிக்கா எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தும்." என்று 1973 ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ கூறிய தீர்க்கதரிசனம் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஆனால், போப்பாண்டவர், நேரடியாகவே தனது வீட்டுக்கு வந்து வாழ்த்துவார் என்று, பிடல் காஸ்ட்ரோ எதிர்பார்த்திருக்க மாட்டார். 

"நான் இடதுசாரி என்றால், ஏசு கிறிஸ்துவும் இடதுசாரி தான்!" - அமெரிக்க வலதுசாரிகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் பதிலடி.

கியூபாப் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்காவுக்கு சென்ற போப்பாண்டவர் பிரான்சிஸ், பிரபல வலதுசாரி வார இதழான டைம்ஸ் நிருபரால் பேட்டி காணப்பட்டார். அப்போது, போப்பாண்டவரின் இடதுசாரி, மார்க்சியக் கருத்துக்கள் குறித்து, அமெரிக்க வலதுசாரிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்கப் பட்டது.

அமெரிக்காவில் உண்மையான இடதுசாரிக் கட்சி எதுவும் வெகுஜன அரசியலில் இல்லாத படியால், லிபரல்கள் இடதுசாரிகள் போன்று கருதப் படுகின்றனர். பிற உலக நாடுகளில் எல்லாம் "இடதுசாரி" என்ற சொற்பதம் பாவனையில் இருந்தாலும், அமெரிக்காவில் பொதுவாக "லிபரல்" என்று தான் அழைப்பார்கள்.
Pope Francis: I Am Not a Liberal 
http://time.com/4044971/pope-francis-i-am-not-a-liberal/


"பல சக்தி வாய்ந்த மனிதர்கள் சமாதானத்தை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் யுத்தத்தால் வாழ்கிறார்கள். ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்று, ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்கு எதிராக திருப்பி விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்." - போப்பாண்டவர் பிரான்சிஸ் 
http://theantimedia.org/10-things-pope-francis-said-that-may-signal-dark-sides-demise/%EF%BB%BF

Friday, March 20, 2015

வங்கி முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி! பிராங்பேர்ட் நகரம் எரிகின்றது!


ஜெர்மனி, பிராங்க்பெர்ட் நகரில் அமைந்துள்ள, ஐரோப்பிய மத்திய வங்கிக்கு (ECB) எதிரில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. 20,000 க்கும் அதிகமான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. பொலிசாரின் கண்மூடித் தனமான தாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக் காரர்கள், பதிலடியாக பல பொலிஸ் வாகனங்களை எரித்து நாசமாக்கியுள்ளனர். 


பிராங்பேர்ட் நகரில் நடந்த, முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம் தொடர்பான பின்னணித் தகவல்கள்:

"முதலாளித்துவம் கொல்லும்!"
ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) பிராங்பெர்ட் நகரில் அமைந்துள்ளது. மார்ச் 18 ம் தேதி, ECB பெரும் பொருட்செலவில் கட்டிய புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கவிருந்தது. கிரீஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளில் தலையிடுவதில் ECB முக்கிய பங்குவகிக்கிறது. 

அதாவது, IMF மாதிரி, ஐரோப்பிய மத்திய வங்கியும் கடன் கொடுப்பது, வட்டி வீதம் தீர்மானிப்பது போன்ற பல பொருளாதாரத் திட்டங்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து விட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிப்பது வழமை.

ஜெர்மனியில், "Blockupy" என்ற ஐக்கிய முன்னணி ஒன்று இயங்கிவருகிறது. ஜெர்மனியின் தீவிர இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகள் ஒன்று சேர்ந்து, Blockupy கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. புதிய கட்டட திறப்புவிழாவை இடையூறு செய்யும் வகையில், பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு Blockupy அறைகூவல் விடுத்திருந்தது. கடன்சுமையால் மக்கள் கஷ்டப் படுகையில் திறப்புவிழா கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்பது அவர்களின் வாதம்.

பெருமளவு மக்கள் கலந்து கொண்டஆர்ப்பாட்டம், இறுதியில் கலவரத்தில் முடிந்தது. முன்னூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டார்கள். நூற்றுக்கணக்கான பொலிசாரும், ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர். பொலிஸ் வாகனங்கள் எரிக்கப் பட்டன. வங்கிகள் அடித்து நொறுக்கப் பட்டன. 

(Klasse gegen klasse) வர்க்கத்திற்கு எதிராக வர்க்கம் 

முகமூடி அணிந்த அனார்க்கிஸ்ட் இளைஞர்களின் குழு ஒன்று முதலாளித்துவ இலக்குகளை தாக்கும் வன்முறைகளில் இறங்கினார்கள். அவர்கள் இதற்கென்றே பயிற்சி பெற்றவர்கள் போன்று, குறுகிய நேரத்திற்குள் மில்லியன் யூரோக்கள் சேதம் உண்டாக்கி விட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக் காரர்கள், தெருக்களில் தடையரண்கள் போட்டு பொலிசாருடன் மோதினார்கள். ECB கட்டிடத்தை சுற்றி போடப்பட்ட தடையரண்களில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. பொலிசாரை நெருங்க விடாமல் தடுப்பதற்கு பல வகையான உத்திகளை பயன்படுத்தினார்கள். 

பொலிஸ் வாகனங்களை நோக்கி கற்கள் வீசப் பட்டன. வர்ணப் பூச்சுக் கலவைகள் விசிறியடிக்கப் பட்டன. இதனால் எழுந்த புகை மண்டலம் காரணமாக, நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். பொலிசார் தமது சேவைக் காலத்தில், இது போன்றதொரு கலவரத்தை காணவில்லை என்று, பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.


Thursday, December 26, 2013

பின்லாந்தில் முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம்


பின்லாந்து நாட்டில், தம்பாரே (Tampere) எனும் நகரில், வரலாறு காணாத கலவரம் ஒன்று நடந்துள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பின்னிஷ் இளைஞர்கள், முதலாளித்துவத்திற்கும், தேசியவாதத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, கலவரத் தடுப்பு பொலிசார் குவிக்கப் பட்டனர். இதனால் அந்த நகரில் கலவரம் வெடித்தது. நகரில் காணப்பட்ட முதலாளித்துவ சின்னங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. பொலிஸ் வாகனங்களும் தாக்கப் பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப் பட்டனர். டிசம்பர் 6, பின்லாந்து நாட்டின் சுதந்திர தினமாகும். அன்று தம்பாரே நகரில் ஐஸ் ஹொக்கி விளையாட்டுப் போட்டி நடந்த மைதானத்தின் அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 


இந்தக் கலவரம் டிசம்பர் 6 ம் தேதி இடம்பெற்ற போதிலும், இன்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. உலகில் எங்காவது முதலாளித்துவ எதிர்ப்பு கலவரங்கள் நடந்தால், அந்த செய்திகளை தணிக்கை செய்வதை வாடிக்கையாக கொண்ட ஊடகங்கள் இதைப் பற்றி தெரிவிக்காததில் அதிசயமில்லை.

இந்த தகவல் பின்லாந்து ஊடகங்களில் மட்டுமே வெளியாகியது. சர்வதேச ஊடகங்கள் எதுவும் கவனம் செலுத்தவில்லை. கீழே ஒரு வீடியோவை இணைத்துள்ளேன். 

மேலதிக தகவல்களுக்கு:

Alternative Independence Day: Riots and shadow celebrations

Saturday, May 22, 2010

மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்!


Enric Duran - Robin Hood of the Banks
இதோ ஒரு நவீன ராபின் ஹூட்! ஸ்பெயினை சேர்ந்த என்றிக் டூரன் (Enric Duran ). பார்செலோனா நகரை சேர்ந்த பிரபல முதலாளித்துவ எதிர்ப்பு போராளி. நாடு முழுவதும் பேசப் படும் அளவு புகழ் பெற அவன் செய்த காரியம் ஒன்றே ஒன்று தான். ஸ்பெயின் வங்கிகளில் பெரிய தொகை கடன்களை எடுத்தான். 39 வங்கிகளில் சுமார் அரை மில்லியன் யூரோக்கள் கடனாக எடுத்த போதிலும், அதை திருப்பிச் செலுத்தும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. தான் எடுத்த பணத்தை ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தான். மிகுதியை முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் அமைப்பிற்கு வழங்கினான். ஒரு வருடம் தலைமறைவாக இருந்து விட்டு நாடு திரும்பிய போது, காவல்துறை கைது செய்தது. ஆனால் மக்கள் ஆதரவு அவன் பக்கம் இருந்தது. நீதிபதிகளும் செயலின் நியாயத் தன்மை கருதி விடுதலை செய்ய நேர்ந்தது. "உண்மையில் வங்கிகள் அன்றாடம் மக்களை கொள்ளையடித்து வருகின்றன. நான் மக்களின் பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுத்தேன்." இவ்வாறு கூறுகிறார் Enric Duran.

ஸ்பெயினுக்கு வெளியே ஒரு சிலரே அறிந்த "முதலாளித்துவ எதிர்ப்பு வங்கிக் கொள்ளை" பற்றி சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துள்ளன. உலக மக்கள் எல்லாம் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அல்லல் படும் நேரம், ஸ்பெயின் உதாரணத்தை பிறரும் பின்பற்றக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை. இருப்பினும் ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்று Enric Duran னை, லட்சக்கணக்கான பார்வையாளர் முன்னிலையில் பேட்டி கண்டது. நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அதனை மறு ஒளிப்பரப்பு செய்திருந்தது. என்றிக் டூரன் வழங்கிய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

- நீ வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 5000000 யூரோக்கள். இந்த விபரம் சரியா?
- ஆமாம்
- அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கப் போகிறாயா?
- இல்லை
(பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கரகோஷம்!)
- உன்னை ஒரு ராபின் ஹூட் ஆக கருதிக் கொள்கிறாயா?
- இல்லை. நான் நானாகவே இருக்கிறேன்.