Showing posts with label செம் படை. Show all posts
Showing posts with label செம் படை. Show all posts

Tuesday, December 31, 2019

சோவியத் செம்படையில் சேர்ந்து வரலாறு படைத்த பெண்கள்

ந‌வீன‌ போரிய‌ல் வ‌ர‌லாற்றில் முத‌ல் த‌ட‌வையாக‌, இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட சோவிய‌த் செம்ப‌டையில் ம‌ட்டும் தான் பெண்க‌ள் பெருமளவில் (சுமார் 800.000 பேர்.) போரிட்ட‌ன‌ர். 

போர் உக்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ 1943 ம் ஆண்டு, செம்ப‌டை வீர‌ர்க‌ளில் ப‌த்தில் ஒருவ‌ர் பெண். அதாவது மொத்த படையினரில் 10%. அதை விட‌ நாஸிக‌ள் ஆக்கிர‌மித்த‌ பிர‌தேச‌ங்க‌ளில் இய‌ங்கிய‌ கெரில்லா குழுக்க‌ளில் ஏராள‌மான‌ பெண் போராளிக‌ள் இருந்த‌ன‌ர். அன்று அவ‌ர்க‌ள் செம்ப‌டை வீர‌ர்க‌ளாக‌ க‌ண‌க்கெடுக்க‌ப் ப‌ட‌வில்லை. அதையும் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். 

செம்ப‌டையில் ப‌ல‌ பெண்க‌ள் லெப்டின‌ன்ட் போன்ற‌ உய‌ர் ப‌த‌விக‌ளிலும் இருந்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ர்க‌ளாக‌ அல்ல‌து தாதிக‌ளாக‌ ப‌ணியாற்றிய‌ பெண்க‌ள் கூட‌ இராணுவ‌ப் ப‌யிற்சி பெற்றிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் வைத்திருந்த‌ன‌ர். 

சோவிய‌த் வான் ப‌டையின் மூன்று ப‌டைய‌ணிக‌ள் முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளை ம‌ட்டுமே கொண்டிய‌ங்கின. பெண் விமானிக‌ள் செலுத்திய‌ குண்டு போடும் விமான‌ங்க‌ள் போர் முனையில் நாஸிப் ப‌டையின‌ரை துவ‌ம்ச‌ம் செய்த‌ன‌. 

சினைப்ப‌ர் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவ‌தில் பெண்க‌ளே வ‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ள‌வுக்கு சினைப்ப‌ர் ப‌டைப்பிரிவில் பெண்க‌ள் தான் பெரும்பான்மையாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் லியூட்மிலா ப‌விஷென்கோ. 309 நாஸிப் ப‌டையின‌ரை கொன்று உலக சாத‌னை ப‌டைத்தவர்.

Saturday, May 25, 2019

"ஸ்டாலின் விழுங்கிய போலந்து" - நடந்தது என்ன?

இன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் "போலந்து படுகொலைகள்" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழமை போலவே பல பிழையான வரலாற்றுத் தகவல்களையும், மிகைப்படுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளன. அத்துடன் இன்றைய லிபரல்-ஜனநாயகவாதிகள் கூட அன்றைய நாஸி பிரச்சார ஊடகங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்களை நம்பிப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட "கட்டின் காட்டில் நடந்த மர்மப் படுகொலைகள்" பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் இன்றைக்கும் பல 'அறிவுஜீவிகளால்" ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப் படுகின்றன. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் போலந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக அலசுவது அவசியம்.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்னர், அதாவது 1939 ம் ஆண்டிலிருந்து 1941 வரையில் நடந்த சம்பவங்கள் தான் இங்கு பேசுபொருளாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் நாஸி ஜெர்மனி அயலில் இருந்த நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து விட்டு சோவியத் யூனியன் மீதான படையெடுப்புக்கு தயாராக இருந்தது. ஜெர்மனியின் இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு சோவியத் யூனியன் பலமாக இருக்கவில்லை. ஆகையினால் தற்காலிகமாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் பெயரால் அழைக்கப்படும் மொலோடோவ் - ரிப்பன்டாப் உடன்படிக்கை குறித்த சர்ச்சைகளை தவிர்த்து விட்டு அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை இங்கு பார்ப்போம். அந்த உடன்படிக்கையில் போலந்தை பங்குபோடுவதற்கான "இரகசிய ஒப்பந்தம்" இருந்ததாக மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவுமில்லை. இது அன்றைய கள நிலவரத்தை கணக்கில் எடுக்காத முற்சாய்வான எண்ணக்கருவாக கருத இடமுண்டு.

ஒப்பந்தம் போட்டவுடனே ஜெர்மனி போலந்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது. வார்சோ வரையிலான போலந்தின் மேற்குப் பகுதிகளை இரண்டு வாரங்களில் கைப்பற்றி ஆக்கிரமித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜெர்மன் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, சோவியத் செம்படை படையெடுத்து சென்று கிழக்கு போலந்து பகுதிகளை கைப்பற்றி ஆக்கிரமித்தது.

இந்த இடத்தில் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் படையெடுப்புக்கு எதிராக போலந்து இராணுவம் தீவிரமாகப் போரிட்டது. தலைநகர் வார்சோ கடும் இழப்புகளுடன் சரணடைந்தது. அதற்குக் காரணம் போலந்தின் மேற்குப் பகுதி போலிஷ் இனத்தவரின் தாயகப் பகுதியாக கருதப் படக் கூடியது. அதற்கு மாறாக, கிழக்குப் பகுதியில் போலந்து இராணுவம் மிகக் குறைந்தளவு எதிர்ப்பைக் காட்டியது. பெருமளவு இழப்புகள் ஏதுமின்றி சோவியத் செம்படை அந்தப் பகுதிகளை கைப்பற்றியது. அதற்கு என்ன காரணம்? அதைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான போலந்து ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. அதற்குள் பல சிறுபான்மை இனங்களது பிரதேசங்களும் அடங்கி இருந்தன. முதலாம் உலகப்போர் வரையில் போலந்து ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. லெனின் தலைமையிலான கம்யூனிச அரசு உள்நாட்டுப் போர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தது. அதே நேரம் மேற்கில் இருந்து ஜெர்மனியும் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியது.

1919 ம் ஆண்டு, முதலாம் உலகப்போர் இன்னமும் முடிந்திராத காலகட்டத்தில், ஜெர்மனியின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து, ரஷ்யா தனது பல்லாயிரம் சதுரமைல் பரப்புடைய பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. குறிப்பாக இன்றைய பெலாரஸ், உக்ரைனின் மேற்குப் பகுதிகள் அதற்குள் அடங்கும். பிற்காலத்தில் ஜெர்மனி போரில் தோற்கடிக்கப் பட்டதால், போலந்து என்ற புதிய தேசம் உருவானது. புதிய போலந்து குடியரசில் ரஷ்யா விட்டுக் கொடுத்த பகுதிகள் உள்ளடக்கப் பட்டிருந்தன.

இப்போது மீண்டும் 1939 ம் ஆண்டுக்கு வருவோம். முதலாம் உலகப்போர் முடிந்து இருபது வருடங்களுக்குப் பின்னர், ரஷ்யா பறிகொடுத்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் நம்பினார். பெலாரஸ், உக்ரைனிய சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், கிழக்குப் போலந்தை கைப்பற்றியதாக படையெடுப்புக்கு காரணம் கூறப்பட்டது. உண்மையில் நடந்ததும் அது தான்.

அந்தக் காலகட்டத்தில் சோவியத் செம்படையினர் ஆக்கிரமித்த கிழக்குப் போலந்து பிரதேசத்தில் 13 மில்லியன் போலந்து பிரஜைகள் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே போலிஷ் இனத்தவர்கள். சுமார் 8 மில்லியன் மக்கள் பல்வேறு மொழிகளை பேசும் சிறுபான்மை இனத்தவர்கள். குறிப்பாக பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள். அவர்கள் சோவியத் செம்படையினரின் படையெடுப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். போலிஷ் பேரினவாத நுகத்தடியில் இருந்து தம்மை விடுதலை செய்ய வந்தவர்களாக கருதி சோவியத் படைகளை வரவேற்றனர்.

1939-1941 வரையில், ஓரிரு வருடங்கள் நீடித்த சோவியத் இராணுவத்தின் போர்க்கால நிர்வாகத்தின் கீழ் நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. குறிப்பாக, போலிஷ் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். ஒரு காலத்தில் மேலாதிக்கம் செலுத்திய பெரும்பான்மை இனமாக இருந்த போலிஷ்காரர்கள், திடீரென ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாக மாறிவிட்டனர். அதற்கு மாறாக, முன்னர் போலிஷ் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டு வந்த சிறுபான்மை இனங்கள், தற்போது மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கின.

சோவியத் படையெடுப்புக்கு முன்னர் இருந்த போலந்து குடியரசில், உரிமைகள் மறுக்கப் பட்ட சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருந்த பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள், தற்போது விடுதலை பெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அதனால், சோவியத் செம்படையினருடன் ஒத்துழைத்தனர். முன்னர் தம்மை ஒடுக்கி வந்த போலிஷ் அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களை காட்டிக் கொடுத்தனர்.

முன்பிருந்த போலந்து குடியரசின் நிர்வாகம், இராணுவம், போலிஸ், நீதிமன்றம் ஆகிய அரச நிறுவனங்கள் அனைத்திலும் போலிஷ்காரர்களே அமர்த்தப் பட்டிருந்தனர். அப்போது போலந்தை ஒரு சர்வாதிகாரி ஆண்டு வந்தார். ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. சிறுபான்மையினத்தவரின் உரிமைகள் மதிக்கப் படவில்லை. 

ஆகவே, போலிஷ் பேரினவாதக் கொள்கை அடிப்படையில் போலந்தை ஆண்ட, வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவரின் வெறுப்புக்கு உள்ளானதில் வியப்பில்லை. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலிஷ் அரச நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் சோவியத் செம்படையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

மேலும், ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கிழக்குப் போலந்தில் இயங்கிய சோவியத் புலனாய்வுத்துறைப் பிரிவுகள், போலிஷ் வர்க்க எதிரிகளை தேடிப் பிடித்து கைது செய்து கொண்டிருந்தன. முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமல்லாது, போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, தீவிர போலிஷ் தேசியவாதிகளாக சந்தேகிக்கப் பட்டனர். அவர்கள் எல்லோரும் பிற்போக்கான எதிர்ப்புரட்சியாளர்களாக கருதி கைது செய்யப் பட்டனர். 

அது மட்டுமல்ல, நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள் எல்லோரும் பெரும்பாலும் போலிஷ் ஆதிக்க இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அத்தனை போரையும் ஒருவர் விடாமல் கைது செய்து சைபீரிய குலாக் முகாம்களுக்கு அனுப்பப் பட்ட சம்பவங்களை தான் இன்று பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் இரைமீட்கிறார்கள். அவர்களில் பலருக்கு விசாரணையின் பின்னர் மரணதண்டனை விதிக்கப் பட்டிருக்கலாம். அதை மிகைப் படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், கட்டின் காட்டில் நடந்த போலிஷ் இராணுவ வீரர்களின் படுகொலை பற்றிய தகவலையும் பார்க்க வேண்டும். சோவியத் செம்படையினர் வருவதற்கு முன்னரே பெரும்பாலான போலிஷ் படையினர் வெளியேறி விட்டனர். அவர்கள் ருமேனியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று விட்டனர். 

எஞ்சியிருந்த போலிஷ் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் செம்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டனர். அவர்களைத் தான், பிற்காலத்தில் ஜெர்மன் படையெடுப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்டின் காட்டில் சுட்டுக் கொன்று புதைத்ததாக சொல்கிறார்கள். அதுவும் நாஸி ஜெர்மனி வழங்கிய தகவல் தான். அந்தக் காலத்திலும் எதிரிப் படையினரின் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது சர்வசாதாரணமான விடயம்.

22-06-1941 அன்று, அப்போது யாரும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சோவியத் யூனியன் மீது போர் தொடுப்பதாக நாஸி ஜெர்மனி அறிவித்தது. கிழக்குப் போலந்திற்கு ஜெர்மன் படைகள் வருவதற்கு முன்னர், செம்படையினர் அவசர அவசரமாக வெளியேறி விட்டனர். குறிப்பிட்ட காலம் அங்கு யாருடைய நிர்வாகமும் இருக்கவில்லை. அதாவது, சோவியத் இராணுவமோ, ஜெர்மன் இராணுவமோ இல்லாத காலகட்டம் ஒன்று கிழக்கு போலந்தில் ஏற்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் போலிஷ் மொழி பேசும் மக்கள் ஜெர்மன் இராணுவம் வருவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியாக காத்திருந்தார்கள். அதற்கிடையில், அவர்கள் "ரஷ்யர்களுக்கு காட்டிக் கொடுத்த" யூதர்களை பழிதீர்க்க எண்ணினார்கள். உண்மையில் சில யூதர்கள் ரஷ்யர்களுடன் ஒத்துழைத்தனர். அன்று சோவியத் போல்ஷேவிக் கட்சியின் தலைமையில் பல யூதர்கள் இருந்த படியால், போலந்து யூதர்கள் செம்படையினர் மீது அனுதாபம் கொண்டிருந்தமை ஒரு சாதாரணமான விடயம். அதற்காக எல்லா யூதர்களும் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், ரஷ்யர்கள் மீதிருந்த போலிஷ் மக்களின் வெறுப்புணர்வு யூதர்கள் மீது திரும்பியது. பல போலிஷ் கிராமங்களில் இருந்த யூதர்கள் போலிஷ்காரர்களால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அங்கிருந்த கத்தோலிக்க பாதிரியார்களும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தனர். போலிஷ்காரர்களால் கொல்லப் பட்ட யூதர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஏனெனில் பல தசாப்த காலமாக இந்த விபரங்கள் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. அண்மைக் காலமாகத் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சில தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. குறிப்பாக Jedwabne எனும் கிராமத்தில் பல நூறு யூதர்கள் கொல்லப் பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையால், அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (பார்க்க: Neighbors, The Destruction of the Jewish Community in Jedwabne, Poland)

ரஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்த நேரம், அதனை பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் போல்ஷெவிக்குகள் மத்தியில் இருந்தது. அருகில் இருந்த போலந்திலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடிக்க வேண்டும் என்று லெனின் எதிர்பார்த்தார். அதற்காக செம்படையை அனுப்பி வைத்தார். ஆனால், ஸ்டாலினிடம் போலந்து குறித்து மாறுபட்ட கருத்து இருந்தது. "பொதுவாக போலிஷ்காரர்கள் பிற்போக்கான தீவிர தேசியவாதிகள், கத்தோலிக்க மத அடிப்படைவாதிகள்... அவர்களிடமிருந்து தற்போதைக்கு ஒரு வர்க்கப் புரட்சியை எதிர்பார்க்க முடியாது..." என்பது ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. இன்று வரையிலான போலந்து வரலாறும் அதையே நிரூபித்து வருகின்றது.

இன்று வரையில் போலிஷ் சமூகம் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நீண்ட காலமாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாத அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. எண்பதுகளின் இறுதியில் கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த பின்னர், அனைவரும் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 

அத்துடன் ரஷ்ய எதிர்ப்பு என்பது போலந்தில் ஒரு தேசியக் கலாச்சாரமாக உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு போன்று அயல் நாடுகளுக்கு இடையிலான தேசியப் பகை உணர்வு. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட, "ஸ்டாலின் நடத்திய போலிஷ் படுகொலைகள்" பற்றிய கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பரப்புரைகளும், போலந்து தேசியவாதிகளால் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன.

Friday, December 29, 2017

எழுபதுகளில் இத்தாலியை உலுக்கிய கம்யூனிச கெரில்லா இயக்கம்


எழுபதுகளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் இயங்கின. பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் ஆதரவுத் தளம் கொண்டிருந்த இயக்கங்கள், அரசுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. இத்தாலியில் இருந்த இயக்கத்தின் பெயர் பிரிகாட்டே ரோசே (Brigate Rosse : செம் படைப் பிரிவு). 1970 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட இயக்கம் மாரியோ மொறேத்தி என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.

இத்தாலிய செம்படை தோன்றிய காரணத்தை புரிந்து கொள்வதற்கு, நாம் இத்தாலிய வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலேயே, இத்தாலிய கம்யூனிஸ்ட் போராளிகள் வட இத்தாலியின் பல பகுதிகளை சொந்தப் பலத்தில் விடுதலை செய்திருந்தனர். சிலநேரம், பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள் வந்திரா விட்டால், அன்றே இத்தாலியும், அயல்நாடான யூகோஸ்லேவியா போன்று ஒரு சோஷலிச நாடாகி இருக்கும்.

அப்போது இலட்சக்கணக்கான துடிப்பான இளைஞர்கள் சோஷலிசப் புரட்சிக்குத் தயாராக இருந்த போதிலும், திருத்தல்வாதிகளாக மாறியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அதற்கு உடன்படவில்லை. இத்தாலி சோஷலிச நாடானால், நேட்டோ இராணுவம் படையெடுத்து புரட்சியை நசுக்கி விடும் என்று காரணம் கூறினார்கள். அன்றிலிருந்து, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசுக்கு ஆதரவாக முண்டுகொடுக்கும் திருத்தல்வாதப் பாதையை தேர்ந்தெடுத்தது.

உலகப்போருக்கு பிந்திய காலங்களில், குறிப்பாக ஐம்பதுகளுக்கு பின்னர் வளர்ந்து கொண்டிருந்த இத்தாலி பொருளாதாரம், எழுபதுகளில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டது. நாடு முழுவதும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. குறிப்பாக, படித்து முடித்த வாலிபர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். 

படித்தாலும் வேலை கிடைக்காது என்ற விரக்தி காரணமாக பல மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தினார்கள். அத்தகைய சமூகப் பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயார் படுத்துவது எப்படி என்று பலர் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இத்தாலி முழுவதும், மாணவர்கள் மத்தியில் மார்க்ஸ், லெனின் நூல்களைப் படிப்பதும், அதைப் பற்றி விவாதிப்பதும் பிரதானமான செயற்பாடானது. பல்கலைக்கழகங்களில் அடிக்கடி நடந்த மார்க்சிய வகுப்புகள், கூட்டங்களில்  பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தான், ஆயுதமேந்திய கம்யூனிச இயக்கம் ஒன்றுக்கான ஆதரவுத் தளம் உருவானது.

திரிபுவாத இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் இணக்க அரசியலில் நம்பிக்கையிழந்த மாணவர்கள், புதிதாக ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பித்து ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதைப் பேச்சளவில் வைத்துக் கொள்ளாது நடைமுறையில் கொண்டு வர விரும்பினார்கள். அப்போது உருவாக்கப் பட்டது தான் பிரிகாட்டே ரோசே. அதற்கு நாடு முழுவதும் குறைந்தது ஆயிரம் உறுப்பினர்கள் இருந்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக இயங்கினார்கள்.

எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, இத்தாலியிலும் இடதுசாரி, வலதுசாரி வேற்றுமை, ஒரு கட்டத்தில் பகை முரண்பாடாக மாறி வன்முறை வடிவமெடுத்தது. ஆர‌ம்ப‌த்தில், வ‌ல‌துசாரிக‌ளான‌,  (முசோலினியின் பாசிச கட்சியை பின்பற்றும் புதிய தலைமுறை) நவ- பாசிஸ்டுகள், இடதுசாரி மாணவர்களை தாக்குவதும், அவர்களது கூட்டங்கள், பேரணிகளை குழப்புவதும் நடந்து கொண்டிருந்தது. சிலநேரம், நவ- பாசிஸ்டுகள் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. 1980ம் ஆண்டு, போலோய்னா நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப் பட்ட சம்பவம் பாசிச வன்முறையின் உச்சம் எனலாம்.

தொடக்கத்தில் பாசிச வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய செம்படை இயக்கம், சில வருடங்களில் துணிகரமான தாக்குதல்கள் நடத்தும் அளவிற்கு வளர்ந்தது. தமது எதிராளிகளான பாசிஸ்டுகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றவர்கள், பிற்காலத்தில் அரசு இயந்திரத்தை ஆட்டிப் படைத்தனர். 

நேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். ஒரு தடவை, அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரையும் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்தார்கள்.  இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோரை கடத்திச் சென்று கப்பம் கேட்பதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தன. நிதித் தேவைக்காக வங்கிகளை கொள்ளையடித்தார்கள். அப்போது தடுக்க முயன்ற காவலர்களை சுட்டுக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பத்து வருட போராட்டக் காலத்தில், 73 கொலைகள் நடந்துள்ளன.

16 மார்ச் 1978 ம் ஆண்டு, இத்தாலிய வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த இத்தாலிப் பிரதமர் அல்டோ மோரோ, தலைநகரில் பட்டப் பகலில் கடத்திச் செல்லப் பட்டார். ரோம் நகரின் பிரதான வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த பிரதமரின் வாகனத்தை வழிமறித்த ஆயுதபாணிகள், மெய்ப்பாதுகாவலர்களை சுட்டுக் கொன்று விட்டு பிரதமரை கடத்திச் சென்றனர். தாக்குதல்தாரிகள் அலித்தாலியா விமான நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த படியால் யாரும் அவர்களை சந்தேகப் படவில்லை.

ஏற்கனவே, பிரிகாட்டே ரோசே வங்கிக் கொள்ளையடித்த பணத்தில் ஒரு வீட்டை வாங்கி மறைவிடமாக வைத்திருந்தனர். அந்தப் புதிய வீட்டில் தான் பிரதமர் பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். அவர் வாசிப்பதற்கு மார்க்ஸ், லெனின் நூல்கள் கொடுக்கப் பட்டன. அந்த வீட்டில், கடத்தியவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் தத்துவார்த்த வாதங்களும் நடந்தன. பிரதமரின் மார்க்சிய அறிவு அவர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது.

எது எப்படியோ, பிரதமர் அல்டோ மோரோ தன்னைக் கடத்தியவர்களுடன் முரண்டு பிடிக்காமல் இணக்கமாக நடந்து கொண்டார். எப்படியும் ஒரு சில நாட்களில் தான் வெளியே வந்து விடுவேன் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், அரச மட்டத்தில் தனக்கெதிராக சதி நடக்கிறது என்ற விடயத்தை அன்று பிரதமர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிகாடே ரோசே பிரதமரின் கடத்தலுக்கு உரிமை கோரினார்கள். il Messaggero பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், போட்டோகொப்பி இயந்திரத்தின் அருகில் ஒரு கடிதமும், அல்டோ மோரோவின் புகைப்படமும் இருப்பதாக அழைத்த குரல் கூறியது.

அந்த உரிமை கோரும் கடிதத்தில், "பிரதமர் மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி விசாரிக்கப் படுவார்" என்று எழுதப் பட்டிருந்தது. மேலும், அல்டோ மோரோவை விடுதலை செய்வதென்றால், சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் தமது இயக்க உறுப்பினர்களை, அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

பணயக் கைதியான பிரதமர், தனது குடும்பத்தினருக்கும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கும் உருக்கமான கடிதங்கள் எழுதி அனுப்ப அனுமதிக்கப் பட்டார். குறைந்த பட்சம், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக, அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் என்று நம்பினார்கள்.

ஆனால், பிரிகாடே ரோசே எதிர்பார்த்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தன. "பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என்று அரசு ஒரேயடியாக மறுத்து விட்டது. அரசுடன் நல்லுறவு பேணிய, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அதையே எதிரொலித்தார். ஆளும் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர், தமது பிரதமர் தானே என்று கூட எந்த நெகிழ்வுப் போக்கையும் காட்டவில்லை.

அல்டோ மோரோ பணயக்கைதியாக தடுத்து வைக்கப் பட்டு ஐம்பது நாட்களாகியும் இத்தாலி அரசு எந்தவொரு சமரசத்திற்கும் வரவில்லை. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்று பிரதமரும் தனது இறுதிக் கணங்களில் கலங்கி நின்றார். குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை. 

இடையில் ஒரு தடவை, பிரதமர் கொல்லப் பட்டு விட்டார் என்று வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பிப் பார்த்தனர். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் எதுவும் நடக்காது என்பது உறுதியானதும், 54 வது நாள் அல்டோ மோரோ சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது சடலம் வைக்கப் பட்டிருந்த கார், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காணப்பட்டது.

எதற்காக ஒரு பிரதமரை உயிரோடு விடுதலை செய்வதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? உண்மையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்குள் கூட அவர் வேண்டாப் பொருளாகக் கருதப் பட்டார். அவர் கொல்லப் பட வேண்டும் என்று அதிகாரத்தில் இருந்தவர்கள் பலர் எதிர்பார்த்தனர். இத்தாலி அரசில் இருந்த தீவிர வலதுசாரிகளும், நேட்டோ இராணுவத் தலைமையும் அல்டோ மோரோ அகற்றப் படுவதை விரும்பினார்கள்.

என்ன காரணம்?

உண்மையில் அல்டோ மோரோ ஒரு நேர்மையான அரசியல்வாதி. பொருளாதாரப் பிரச்சினைகளால் சீரழிந்து கொண்டிருந்த நாட்டை காப்பாற்றும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைக்க முன்வந்தார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தனது கட்சிக்குள் இருந்த கடும்போக்கு கம்யூனிச எதிர்ப்பாளர்களையும் ஒத்துக் கொள்ள வைத்திருந்தார்.

இத்தாலி வரலாற்றில் முதல் தடவையாக, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்து, உடன்படிக்கை கைச்சாத்திடுவது மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக வழியில் வைத்து அல்டோ மோரோ கடத்தப் பட்டார்.

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், இத்தாலி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுப்பதை நேட்டோ தலைமை விரும்பவில்லை. அதே நேரம், இத்தாலி அரசியல் மட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டரசாங்கம் அமைப்பதை, தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, தீவிர இடதுசாரிகளும் விரும்பவில்லை. பிரதமர் கடத்தல் சம்பவத்தின் நேரடி விளைவாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒருபோதும் கைச்சாத்திடப் படவில்லை. இது உண்மையில் கடும்போக்காளர்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றி.

"கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கம்யூனிசத்திற்கு அடிபணிந்து விட்டது" என்று தீவிர வலதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். அதே நேரம், "கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்து விட்டது" என்று தீவிர இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். பிரிகாடே ரோசேயின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. முதலாளித்துவ அரசுக்கு முண்டு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை துரோகிகளாக பார்த்தனர். கூட்டரசாங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கை துரோகத்தின் உச்சமாக கருதப் பட்டது.

பிரதமர் அல்டோ மோரோவின் கடத்தலும், கொலையும், பிரிகாடே ரோசே இயக்கத்தின் அழிவுக்கு வித்திட்டது எனலாம். அதற்குப் பிறகு நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். பிரிகாடே ரோசெயின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இதே நேரம், பிரிகாடே ரோசே இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை எதிரியாக்கியதால், தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவையும் இழந்தது. குறிப்பாக தொழிற்சங்க தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்ற படியால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான தொழிலாளர்களை பகைத்துக் கொண்டனர்.

1980 ம் ஆண்டு, பிரிகாடே ரோசே இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டு விட்டனர். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சில நூறு உறுப்பினர்கள், அயல் நாடான பிரான்சுக்கு தப்பிச் சென்று அகதித் தஞ்சம் கோரினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களை நாடுகடத்துமாறு இத்தாலி அரசு, பிரெஞ்சு அரசிடம் கோரி இருந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் இறுக்கமாக வந்திருக்கவில்லை என்பதால் பிரெஞ்சு அரசு மறுத்திருந்தது. 

குறைந்தது முன்னூறு பிரிகாடே ரோசே உறுப்பினர்களாவது, பொலிஸ் கையில் அகப்படாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். சிலர் கியூபாவிலும், மெக்சிகோவிலும், அன்று சோஷலிச நாடாக இருந்த   நிகராகுவாவிலும் தஞ்சம் கோரியிருந்தனர். இப்போதும் அவர்கள் இத்தாலிக்கு திரும்பி வந்தால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்பதால் புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர். 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: