Showing posts with label பாசிஸ்டுகள். Show all posts
Showing posts with label பாசிஸ்டுகள். Show all posts

Saturday, September 30, 2017

பாசிசம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் - ஓர் அறிமுகம்

அமெரிக்காவில் பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்து கௌரவித்த  முதலாளிய வர்க்கம்.

"பாசிசம் என்பது ஒரு மதம். அது சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால் சோஷலிசம் தேசிய ஒற்றுமையை குலைக்கும் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துகின்றது."  

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், முசோலினி எழுதிய பாசிச கொள்கை விளக்கத்தில் இருந்து சில பகுதிகள்:

//பாசிசம் என்பது ஒரு மதக் கோட்பாடு. அது ஒரு தனி மனிதனை உன்னதமான ஆன்மீக சமுதாயத்தின் உறுப்பினராக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாசிசம் என்பது அரசு மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை முறையும் தான். தேசம் என்பதற்கு அப்பால், எந்தவொரு அரசியல் கட்சிகளோ, குழுக்களோ, வர்க்கங்களோ இருக்க முடியாது.

பாசிசம் சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால், சோஷலிசம், வரலாற்றுப் போக்கை வர்க்கப் போராட்டமாக வரையறை செய்கின்றது. வர்க்க ஐக்கியம் மூலம் கட்டப்படும் ஒரே முனைப்பான பொருளாதார, தார்மீக அரசமைப்பதை, அது புறக்கணிக்கின்றது./
- முசோலினி (The Doctrine of Fascism, 1932)

பாசிசக் கொள்கை, "ரோமர்களின் பொற்காலத்திற்கு திரும்பும் இத்தாலிய தேசியவாதம்" ஆக முசோலினியால் அதிகாரத்திற்கு வந்தது. அதனை, "பணக்கார மேல்தட்டு வர்க்கம் (Patricians), பெரும்பான்மை ஏழை மக்களை (Plebs) அடக்கி ஆளும் சர்வாதிகார ஆட்சி" என்றும் சொல்லலாம். (ரோமர்கள் காலத்தில் மேட்டுக் குடியினர் Patricians என அழைக்கப் பட்டனர். ஏழைகள் Plebs என அழைக்கப்பட்டனர்.)

இல்லாவிட்டால் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சிஞ்சினாத்தி (Cincinnati) நகரில் பாசிசத்திற்கு சிலை வைப்பார்களா? அமெரிக்கப் புரட்சியின் போது, இங்கிலாந்து மன்னரிடமிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரத்தை, அமெரிக்க முதலாளிய வர்க்கம் கைப்பற்றி இருந்தது. முதலாளிய வர்க்கத்தினர் தமது வெற்றியின் அடையாளமாக பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்தார்கள்.

ரோமர்கள் காலத்தில், அவசர கால நடைமுறையாக மன்னரின் இடத்தில் இருந்து இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரியின் பெயர் Cincinnatus. (அமெரிக்க Cincinnati என்ற ஊரின் பெயர் அதை நினைவுபடுத்துகிறது.) அவரது கையில் சட்டத்தை நிலைநாட்டும் ஆயுதமாக "பாசெஸ்" (Fasces) என்ற ஒரு வகை கோடரி இருந்தது. (படத்தை பார்க்கவும்)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரி முசோலினியின் கட்சியின் பெயர் பாசிசக் கட்சி. பண்டைய பாசெஸ் ஆயுதத்தில் இருந்து தான் பாசிசம்(Fascism) என்ற சொல் உருவானது.

முசோலினி அந்த சொல்லை தெரிவு செய்வதற்கு காரணம் இருந்தது. பாசிசம் என்பது மன்னராட்சிக்கு எதிரான மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. அது மட்டுமல்ல, "பண்டைய கால பழம் பெருமை பேசும் தேசியவாதம்" பாசிசத்தின் அடிநாதமாக இருந்தது.

"ரோமர்கள் காலத்தில் எம்மவர்கள் (இத்தாலியர்கள்) உலகை ஆண்டார்கள். லத்தீன் மொழியில் இருந்து தான் பிற மொழிகள் வந்த படியால், உலகில் தோன்றிய மூத்தகுடி லத்தீன் பேசினார்கள். அத்தகைய பெருமைக்குரிய இத்தாலி இனம் மீண்டும் தலைநிமிர வேண்டும்....." இவ்வாறான தீவிர தேசியவாதக் கருத்துக்கள், முசோலினியாலும், பாசிசக் கட்சியினராலும் இத்தாலி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் பட்டன.

பாசிசம் தனது சொந்த இன மக்களின் நலன்களை கூடப் பேணப் போவதில்லை. இன்றுள்ள அதே முதலாளித்துவ சுரண்டல் சமுதாயத்தை தொடர்ந்தும் வைத்திருக்கும். அதற்கு உலகின் முதலாவது பாசிச அரசு அமைந்த இத்தாலியின் உதாரணத்தை பார்ப்போம்.

இத்தாலியில் முசோலினி வாழ்ந்த காலத்திலும், மார்க்சிய, சோஷலிச அமைப்புகள் வளர்ந்து கொண்டிருந்தன. தொழிலாளர்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி வந்தன. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர், அதுவும் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் ஊடாடும் ஒருவர், மார்க்சியத்தை பற்றி அறியாமல் விட்டிருக்க முடியாது.

சோஷலிஸ்டுகள் நடத்திய பத்திரிகை ஒன்றில், ஊடகவியலாளராக பணியாற்றிய முசோலினி, ஆரம்பத்தில் தன்னையும் ஒரு சோஷலிஸ்ட் மாதிரி காட்டிக் கொண்டார். இல்லாவிட்டால் அந்த வேலை கிடைத்திருக்காது. ஆனால், அவரது எழுத்துக்கள் இத்தாலி இனப் பெருமை பேசுவதாகவும், அரசின் போர்வெறியை ஆதரிப்பதாகவும் இருந்தன. அவரது தேசியவெறி நிலைப்பாடு காரணமாக பத்திரிகையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

முசோலினி பாசிசக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்கி, "இத்தாலியர்களின் இழந்த இனப்பெருமையை மீட்டுத் தருவதாக" பிரச்சாரம் செய்தார். இனப்பற்று, மொழிப்பற்று, தேசியம் என்று வலதுசாரியம் பேசிக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களை கவர்வதற்காக கொஞ்சம் இடதுசாரியம் பேசினார். அதனால் தான் பொதுத் தேர்தலில் பாசிசக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இத்தாலி மன்னர் இம்மானுவேல் அழைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் அளவிற்கு முசோலினி ஆளும் வர்க்கத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

முசோலினியின் பாசிச ஆட்சிக் காலத்தில் ரயில்கள் நேரம் தவறாமல் ஓடியதாக சொல்வார்கள். அது மட்டுமல்ல, ரயில் டிக்கட் விலையும் குறைக்கப் பட்டது. இதனால், பொதுவாக தமது ஊரை விட்டு வெளியே சென்றிராத உழைக்கும் வர்க்க மக்கள், தூர இடத்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வர முடிந்தது.

பாசிச காலகட்டத்தில் தான் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக கிடைத்து என்பதை மறுக்க முடியாது. அதனால் ஓய்வு நேர பொழுதுபோக்குகளும் அதிகரித்தன. சினிமாத் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்ப்பது, உதைபந்தாட்ட விளையாட்டுகளை கண்டுகளிப்பது என்று, பொது மக்கள் ஒன்று கூடி பொழுது போக்கினார்கள்.

இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகும். இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிக்கட்டுமானம் பாசிச ஆட்சியில் போடப் பட்டு விட்டது. நாங்கள் இன்றைக்கும் ஒரு நவ பாசிச கலாச்சாரத்திற்குள் வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. நாங்கள் யாரோ ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்து எடுக்கும் சம்பளத்தை, ஓய்வு நேர பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்னொரு முதலாளிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மேம்போக்காக பார்த்தால், பாசிசம் மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்ததாக தெரியும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. 1921 ம் ஆண்டு பாசிசம் ஆட்சிக்கு வந்தது. 1939 ம் ஆண்டு முசோலினியின் வீழ்ச்சி ஆரம்பமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் சம்பளத் தொகை வீழ்ச்சி கண்டது. ஒன்றில் சம்பளம் குறைந்தது அல்லது வாங்குதிறன் குறைந்தது. சம்பளம் மாறாமல் அப்படியே இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.

உழைக்கும் வர்க்க மக்கள் சோளம் மாவில் செய்த உணவை மட்டுமே உட்கொண்டார்கள். இறைச்சி அரிதாகக் கிடைத்தது. ஒரு நல்ல சைக்கிள் வாங்குவதென்றால் கூட மூன்று வருடங்கள் சேமிக்க வேண்டும். அத்தகைய அவல வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளர்கள், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை நாடிச் சென்றதில் வியப்பில்லை.

பாசிச ஆட்சிக் காலம் முழுவதும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டிருந்தது. இருப்பினும், தலைமறைவாக இயங்கி வந்தனர். இரகசிய கெரில்லாக் குழுக்களும் இயங்கின. கம்யூனிச கெரில்லாக்கள் பாசிச அரச நிலைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, தொழிற்சாலைகளில் ஊடுருவி இருந்த கம்யூனிஸ்டுகள், வேலைநிறுத்தப் போராட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, இத்தாலியில் முசோலினியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. வடக்கு இத்தாலியில் பல இடங்கள் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வந்து விட்டன. அத்தகைய குழப்பகரமான சூழ்நிலையில், மீண்டும் மன்னர் இமானுவேல் "இத்தாலியை காப்பாற்றும் பொறுப்பை" கையில் எடுத்தார்.

1943 ம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் முசோலினி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போதே இத்தாலி பாதுகாப்புப் படைகளில் பிளவு உண்டாகி விட்டது. முசோலினிக்கு விசுவாசமான பாசிசப் படையும், மன்னருக்கு விசுவாசமான படையும் மோதிக் கொண்டன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தில் ஜெர்மன் நாஸி இராணுவம் படையெடுத்தது. தெற்கு இத்தாலி மட்டும் மன்னரின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் நேச நாட்டுப் படைகளும் வந்திறங்கின.

ஜெர்மன் படைகள் முசோலினியை சிறையில் இருந்து விடுவித்து, தமக்குக் கீழே ஒரு பொம்மை அரசை வைத்திருந்தன. இருப்பினும், பெரிய நகரங்களான மிலான், தூரின் போன்றன கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த படியால், முசோலினியால் அங்கு செல்ல முடியவில்லை. ஒதுக்குப் புறமான அல்ப்ஸ் மலையடிவார சிறிய நகரம் ஒன்றில், புதிய பாசிச அரசு அமைந்தது.

அப்போதே இத்தாலி முதலாளிகள் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டனர். கார் தயாரிக்கும் இத்தாலி பன்னாட்டு நிறுவனமான FIAT கம்பனிக்கு தூரின் நகரில் தொழிற்சாலை இருந்தது. FIAT தலைமை நிர்வாகி சுவிட்சர்லாந்து சென்று, அமெரிக்க பிரதிநிதியை சந்தித்தார். "இத்தாலியில் அமெரிக்கா முதலிட வேண்டுமென்றும், அங்கு தொழிலாளர்களின் சம்பளம் மிகக் குறைவு என்றும்" பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்காவுடனான இத்தாலி முதலாளிகளின் இரகசிய உறவு, ஓரளவு பயனைத் தந்தது எனலாம். 1945 ம் ஆண்டு, போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள் சம்பந்தப் பட்ட FIAT நிர்வாகியை கைது செய்ய தேடி வந்தனர். அங்கே எதிர்பாராத விதமாக அமெரிக்க நிர்வாகி ஒருவரைக் கண்டு ஆச்சரியப் பட்டனர்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேச நாடுகளின் அணியில் இருந்தன. ஆகையினால், கம்யூனிஸ்டுகள், இத்தாலியை கைப்பற்றிய அமெரிக்கப் படையினருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அமெரிக்கா மிகவும் தந்திரமாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இத்தாலியை தனது செல்வாக்கு மண்டலத்தின் கீழ் கொண்டு வந்தது. பாசிச ஆட்சிக் காலத்தில் ஒத்துழைத்த இத்தாலி முதலாளிய வர்க்கத்தினர், போர் முடிந்த பின்னர் அமெரிக்கர்களுடன் ஒத்துழைத்தனர். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு அன்றும் இன்றும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது.
1945 ம் ஆண்டு, இத்தாலியின் தென் பகுதியில் நேச நாடுகளின் படையணிகள் வந்திறங்கி இருந்தன. கிழக்கே யூகோஸ்லேவிய பிரதேசங்களை, மார்ஷல் டிட்டோவின் கெரில்லா இராணுவம் கைப்பற்றி இருந்தது. இத்தாலியின் பெரும்பான்மையான இடங்களை, இத்தாலி கம்யூனிச கெரில்லாக் குழுக்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

தோல்வியின் விளிம்பில் நின்ற முசோலினி, தனக்கு விசுவாசமான பத்துப் படையினரைக் கூட திரட்ட முடியாமல், நாஸி ஜெர்மன் படையினரின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை நோக்கி தப்பியோடினார். ஜெர்மன் படையினரின் டிரக் வண்டியொன்றில், ஜெர்மன் இராணுவ சீருடையில் மாறுவேடம் பூண்டிருந்த முசோலினி, கம்யூனிச கெரில்லாக்களின் சோதனைச் சாவடி ஒன்றில் அடையாளம் காணப் பட்டார். 

முசோலினியும், அவரது காதலியும், விசுவாசமான நண்பர்களும், பிடிபட்ட ஒரு சில தினங்களிலேயே சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களது இறந்த உடல்கள் மிலானோ நகர மத்தியில் தலை கீழாக கட்டித் தொங்க விடப் பட்டன. 28 ஏப்ரல் 1945 அன்று இந்த மரண தண்டனை விதிக்கப் பட்டது.

¡No pasarán! Fascism shall not pass. பாஸிசம் எம்மைக் கடந்து செல்ல முடியாது.


Sunday, August 14, 2016

இலங்கையில் இந்து - பௌத்த பாசிஸ்டுகளின் இன நல்லிணக்க கூட்டமைப்பு!

இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு அடிபணிகிறார்கள். தீவிர புலி விசுவாசிகளும், சிங்களப் பேரினவாதிகளும் ஒன்று சேர்கிறார்கள். ஒன்றிணைந்த இந்து - பௌத்த இலங்கைக்காக, இந்துத்துவா கொள்கையை பின்பற்ற உறுதி பூணுகின்றனர். அவர்களது  முதலாவது எதிரிகள் முஸ்லிம்கள். இரண்டாவது எதிரிகள் இடதுசாரிகள். மூன்றாவது எதிரிகள் தாழ்த்தப் பட்ட சாதியினர். 

இது ஒரு காலத்திலும் நடக்கவே முடியாத விடயம் அல்ல. இன்று எம் கண்முன்னால் அது தான் நடக்கிறது. (இன/மத) அடிப்படைவாத சித்தாந்தமும், வலதுசாரிய சார்புத்தன்மையும், அவர்களை ஒன்று சேர்க்க போதுமானது. கடந்த பத்து வருட காலமாக, இந்திய இந்த்துவா சக்திகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எல்லாம் மிக இரகசியமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராமல் நடந்த விபத்து ஒன்று அவர்களின் திட்டத்தை அம்பலப் படுத்தி விட்டது.

சில நேரம் எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் இரகசியங்களை வெளிப்படுத்துவதுண்டு. துருக்கியில் ஒரு தடவை சாலையில் வாகன விபத்தொன்று நடந்தது. அந்தக் காரில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் கொல்லப் பட்டு விட்டனர். அவர்கள் யாரென்ற விபரம் வெளியான நேரம், அந்தத் தகவல் துருக்கியை மட்டுமல்ல ஐரோப்பா முழுவதையும் உலுக்கியது. மாபியா குழுத் தலைவர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள், இவர்களுடன் ஓர் அழகு ராணியும் அந்த விபத்தில் சிக்கி இறந்தனர். அரசியல்வாதிகளுக்கும், மாபியாக் குழுக்களும் இடையிலான இரகசிய உறவை அது பகிரங்கப் படுத்தியது.

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் வேலாயுதம் முரளிதரன் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அந்தத் திடீர் மரணம் பல இரகசியங்களை அம்பலப் படுத்தியது. காலமான முரளிதரன், "இந்து - பௌத்த ஒற்றுமையை கட்டியெழுப்ப பாடுபட்டவர்" என்று புகழும் அஞ்சலிச் சுவரொட்டிகள் கொழும்பு நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்தன. 

இலங்கையில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், அவரது மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மற்றும் ஒரு தமிழ் அமைச்சரும் அரசு தரப்பில் கலந்து கொண்டனர். அதை விட பொது பல சேனா தலைவர் ஞானசார தேரோவும் மரணச் சடங்கிற்கு வந்திருந்தார். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த சக்தி எது? இந்துத்துவா சித்தாந்தம்.

பொதுபல சேனா பற்றி நான் இங்கே அதிக விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களை தூண்டி விடும் நோக்கில் உருவாக்கப் பட்ட பாஸிச, பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் தான் பொது பல சேனா. சிங்கள - பௌத்த பேரினவாத சித்தாந்தம் இலங்கையின் ஆட்சியாளர்களினால் நடைமுறைப் படுத்தப் பட்டாலும், இவ்வளவு காலமும் அது நிறுவன மயப் படுத்தப் படாமல் இருந்தது.

அதாவது, இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் தமது அரசியல் சுயநலத்திற்காக பௌத்த மதத்தை பயன்படுத்தி வந்தன. அதற்காக சக்திவாய்ந்த பெரிய மடாலயங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ஆன்மீகத் தலைவர்களும் இவர்களை ஆட்டிப் படைத்தார்கள். ஆனால், இலங்கையில் உருவான, அல்கைதா பாணியிலான பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் பொதுபல சேனா தான். நடைமுறை அரசியலில் தாக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த ஆன்மீக மதகுருக்களுக்கு போட்டியாக மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப் பட்டது.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அரசுக்கும், புலிகளுக்கும் நடுவில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே, இலங்கையின் இனப்பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்தது. "வெளியுலகில் தமிழர்களின் பிரச்சினை தெரிந்த அளவிற்கு, சிங்களவர்களின் பிரச்சினைகள் தெரிந்திருக்கவில்லை." என்று சில நோர்வீஜிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நோர்வே புலிகளுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. அவர்களது அத்துமீறல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஏராளமான பணம் கொடுத்ததுடன் ஆயுதங்கள் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால், போருக்குத் திரும்புவதில் புலிகள் பிடிவாதமாக இருந்த படியால், நோர்வேயின் "தீர்வுத் திட்டம்" கைவிடப் பட்டது.

போர் முடிந்து சில வருடங்களின் பின்னர், நோர்வே வேறொரு அணுகுமுறையை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இம்முறை அது அரசுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. ஒரு பக்கம் முன்னாள் அனுசரணையாளர்கள் ராஜபக்சே ஆட்சியின் கொடுங்கோன்மையை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம் ராஜபக்சே உருவாக்கிய பொதுபல சேனாவை ஒரு NGO போன்று அங்கீகரித்து நிதியுதவி செய்தனர்.

2011 ம் ஆண்டு, ஒஸ்லோ நகரில் ஓர் இரகசியமான மகாநாடு நடந்தது. பொதுபல சேனாவின் முக்கிய தலைவர்கள் வந்திருந்தனர். நோர்வேயில் இயங்கும் புலி ஆதரவு அமைப்புகளை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டனர். நோர்வீஜிய அரச பிரதிநிதிகள் அங்கும் அனுசரணையாளராக இருந்தனர். மகாநாட்டில் விவாதிக்கப் பட்ட விடயங்களை வைத்து அதை யாரும் தவறாக கணிப்பிட முடியாது. அதாவது, இலங்கையில் இன நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்தி போன்றவற்றை பற்றி கலந்துரையாடப் பட்டதாக சொல்லப் பட்டது.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகவராக செயற்படும் நோர்வேக்கும், இலங்கையின் பௌத்த பாஸிச இயக்கமான பொது பல சேனாவுக்கும் இடையிலான உறவு என்ன? அவர்களது எதிர்கால திட்டங்கள் எவை? அதற்கு விடை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். இலங்கையின் சிங்கள ஊடகங்கள் சில, நோர்வேக்கும், பொதுபல சேனாவுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப் படுத்தின. நோர்வீஜிய அரசு அதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. (பார்க்க: Statement regarding the alleged connection between Bodu Bala Sena and Norway; http://www.norway.lk/News_and_events/News/Statement-regarding-the-alleged-connection-between-Bodu-Bala-Sena-and-Norway/#.V7Ajx_mLSUk)

இந்தியாவின் இந்துத்துவா சக்திகள், நோர்வே மாதிரி ஒளிந்து மறைந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி செயற்பட்டு வருகினர். இந்தியாவில் தீய வழியில் பிரபலமான இரண்டு இந்து மத அடிப்படைவாத அமைப்புகள் உள்ளன. ராஷ்ட்ரிய சுயம் சேவாசங் (RSS) பெரும்பாலும் இந்தியாவிற்குள் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) இலங்கையிலும் கிளை பரப்பியுள்ளது.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் VHP அமைப்பாளர்கள் வடக்கு, கிழக்கிற்கு சென்று சில ஈழத் தமிழ் இந்து ஆதரவாளர்களை வென்றெடுத்தனர். அவர்கள் புலிகளையும் சந்தித்துப் பேசி, இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புலிகள் அந்த வேண்டுகோளை உதாசீனப் படுத்தி விட்டனர். அநேகமாக, தமக்கு பக்கபலமாக இருந்த கத்தோலிக்க திருச்சபையை பகைக்க விரும்பாமை காரணமாக இருந்திருக்கலாம்.

இந்திய இந்துத்துவா பாசிஸ்டுகள் ஈழத்தமிழ் இந்துக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது எப்படி? அது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஈழப்போர் தொடங்கிய காலத்தில், "நாம் இந்துக்கள் என்பதால் இந்தியா படையனுப்பி தமிழீழம் பிரித்துத் தரும்" என்று அப்பாவித்தனமாக நம்பியோர் பலருண்டு. பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் அப்படி நம்பினார்கள். போர் முடிந்த பின்னர், ஈழப் போராட்டத்தை இந்து மயமாக்கும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு இந்து அடிப்படைவாதி. அவர் இந்தியா சென்று RSS, VHP ஆகிய மதவாத அமைப்புகளை சந்தித்துப் பேசினார். ஈழப்போரில் இந்துக்கள் எந்தளவு பாதிக்கப் பட்டுள்ளனர். எத்தனை இந்துக் கோயில்கள் அழிக்கப் பட்டன என்றெல்லாம் எடுத்துரைத்ததாக அவரே சொல்லி இருக்கிறார். இருப்பினும், ஈழத்தில் இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதற்கு சிவாஜிலிங்கமும் ஒத்துழைத்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஈழத் தமிழ் இந்துக்களை இந்துத்துவா நலன்களுக்கு சாதகமாக வென்றெடுப்பதற்கு இலகுவாக, முஸ்லிம்களுடனான இனப்பிரச்சினை உள்ளது. இன்றைக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் இந்துத் தமிழர்கள் பலருண்டு. சமூகவலைத் தளங்களில் அவர்களது கருத்துக்களை காணலாம். 

அண்மையில் காத்தான்குடியில் புலிகள் முஸ்லிம்களை படுகொலை செய்த சம்பவம் பற்றி ஒருவர் முகநூலில் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் காத்தான்குடிப் படுகொலைகள் பற்றி நான்கு வரிகள் எழுதி, அதற்கு ஏற்கனவே புலிகள் மன்னிப்புக் கேட்டு விட்டார்கள் என்று முடித்துக் கொள்கிறார். ஆனால், அதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகளை பட்டியலிட்டு விலாவாரியாக எழுதி இருந்தார்.

அதாவது, "சிங்களவர்கள் மாதிரி, முஸ்லிம்களும் தமிழர்களை பூண்டோடு அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள். அதற்கு எதிர்வினையாக நடத்தப் பட்டது தான் காத்தான்குடிப் படுகொலை." என்பது அவர் முன்வைக்கும் நியாயம். இந்தக் கட்டுரை முகநூலில் நூற்றுக் கணக்கில் பகிரப் பட்டு, நூற்றுக் கணக்கில் லைக் செய்யப் பட்டது. 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. சிங்கள இனவாதிகளும், முஸ்லிம் இனவாதிகளும் இதே பாணியில் தான் வெறுப்புப் பிரச்சாரம் செய்வார்கள். இனவாதத்தை தூண்டி விட்டு மக்களை பிரித்து விடுவதன் மூலம் தான் தமது மேலாதிக்கத்தை திணிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இலங்கையில் மூவின மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தம்மின மக்களின் இழப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிரி இனத்தின் இழப்புகளை உதாசீனப் படுத்துவார்கள். இது உலகம் முழுவதும் உள்ள இனவாதிகளின் வழமையான அரசியல் தான். எல்லா சமூகங்களிலும் உள்ள இனவாதிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை. ஆனால், அவர்களால் பேரழிவைத் தரும் நாசங்களை ஏற்படுத்த முடியும். 

இந்துத் தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ் இனவாதிகள், எவ்வாறு இந்துத்துவாவாதிகளின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தான் இங்கே எடுத்துக் காட்டினேன். இந்தியாவிலும் இந்துத்துவா வாதிகளின் எதிரி முஸ்லிம்கள். இலங்கையில் பொது பல சேனாவின் எதிரியும் முஸ்லிம்கள். ஈழத்தில் தமிழினவாதிகளின் எதிரியும் முஸ்லிம்கள். ஆகவே "பொது எதிரிக்கு" எதிராக ஒன்றிணைவது நடைமுறைச் சாத்தியம் இல்லாததா?

யுத்தம் முடிந்த பின்னர், வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் புதிதாக புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் கட்டப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் இராணுவ முகாம்களில் இருந்த பௌத்த மத படையினர் வழிபடுவதற்கு சிறிய அளவில் கட்டப் பட்டன. போர் முடிந்த பின்னர் நகர மத்தியில் பெரியளவில் கட்டப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் அதற்கு எதிரான தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களது கண்டனங்களில் "இந்துக்களின் பூமியில் அத்துமீறும் பௌத்த மத சின்னங்கள்" பற்றி சிலாகிக்கின்றனர்.

மலையகப் பகுதியில் வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அங்கு மிக நீண்ட காலமாகவே இந்திய அரசின் தலையீடு அதிகமாக இருந்து வந்துள்ளது. ரம்பொட எனுமிடத்தில் மலையுச்சியில் ஐந்து மீட்டர் உயரமான, பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும், அதனருகில் கோயிலும் கட்டப் பட்டுள்ளது. இலங்கையில் இந்துத்துவாவாதிகள் ஊடுருவதற்கு அதுவே அடிகோலியது எனலாம். அனுமார் சிலை கட்டப் பட்டதில் இருந்து இந்த்துவா நடவடிக்கைகளும் அதிகரித்து வந்துள்ளன. அதற்கு சிறிலங்கா அரசும் அனுமதிக்கின்றது. அனுமார் சிலை கட்டுவோர், அதை ஆதரிப்போர், புத்தர் சிலைகளை எதிர்க்கும் தார்மீகப் பலத்தை இழந்து விடுகின்றனர்.

இலங்கை அரசின் மத அரசியல் இவ்வாறு தான் இயங்கி வருகின்றது. அரசு இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடு என்று அறிவித்து விட்டு, பௌத்த மடாலயங்களுக்கு நிதி அள்ளிக் கொடுக்கும். அதே நேரம், இந்து ஆலயங்களுக்கும் நிதி வழங்கும். அதற்காக இந்து அறநிலைத் துறை என்றொரு தனியான அமைச்சு இயங்குகின்றது.

புலிகளால் துரோகியாக சபிக்கப் பட்ட டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்ட காலம் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இடிந்த கோயில்களை புனரமைப்பதற்கும் டக்லஸ் நிதி வழங்கிய வேடிக்கையும் நடந்துள்ளது. (சில சமயம் புலிகள் தலையிட்டு தடுத்த சம்பவங்களும் உண்டு.)

விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்த்துவா பாஸிச அமைப்புகள், "இந்துக்களின் பூமியில் அத்துமீறும் புத்தர் சிலைகளை" எதிர்க்க முன்வருவார்களா? அப்படி யாராவது எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள். இந்தியாவில் புத்த சமயத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகப் பார்க்கும் போக்கு உள்ளது. புத்தர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறும் புராணக் கதையும் பிரபலமாக உள்ளது. வட இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் மகர் சாதியினர் பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர். இன்று இந்துத்துவாவாதிகள் அம்பேத்காரை தூக்கிப் பிடிக்கிறார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதுவராலயம், அம்பேத்காரின் நூறாண்டு நினைவு தினத்தை விமரிசையாக கொண்டாடியது. அதற்கு ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஆதிக்க சாதியினர், இதன் மூலம் தமிழகத்து தலித் அரசியல் யாழ்ப்பாணத்திற்கு வந்து விடும் என்று அஞ்சினார்கள். 

தமிழ் நாட்டில் தலித்திய இயக்கங்கள் அம்பேத்காரை போற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய அரசு அம்பேத்காருக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என்று சிந்தித்தார்களா? ஆதிக்க சாதி பார்ப்பனர்களினால் நிர்வகிக்கப் படும் இந்திய அரசு தலித்தியத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பது அறியாமை.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் போக்கை தீர்மானிப்பதில் மேலாண்மை பெற்றுள்ள தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு பொதுவான தன்மையைக் காணலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினை எழும் போதெல்லாம் திடீரென "நடுநிலைவாதி" வேஷம் போடத் தொடங்கி விடுவார்கள். தீக்கோழி மாதிரி மண்ணுக்குள் தலையை புதைத்து வைத்துக் கொள்வார்கள். தமிழ் தேசியத்தை உடைப்பதற்கு சிங்களத்தின் சதி என்று ஒப்பாரி வைப்பார்கள். 


இப்போது அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? ஈழத்தில் இந்துத்துவா மத அடிப்படைவாதிகள் வளர்வதற்கு சாதகமான சமூகக் காலநிலையும் அது தான். "வர்க்கப் பிரச்சினை பற்றி பேசக் கூடாது. சாதிப் பிரச்சினை பற்றிப் பேசக் கூடாது. இடதுசாரியம் தீங்கானது. தலித்தியம் நஞ்சானது....."

இப்படியே அது கூடாது, இது கூடாது என்று, எந்தவொரு முற்போக்கான அரசியல் சிந்தனையும் ஈழத் தமிழரை நெருங்க விடாமல் தடுப்புச் சுவர் எழுப்பி வருகின்றனர். அதே நேரம், இந்து மத அடிப்படைவாதம், தமிழ் இனவாதம் போன்ற பிற்போக்கான அரசியல் கோலோச்சுவதற்கு எந்தத் தடையும் விதிக்க மாட்டார்கள்.


இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை இரண்டு மொழி பேசும் இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் புரிந்து கொள்ளப் படுகின்றது. அங்கு மதப் பிரச்சினை இல்லையென்று பொதுவாக நம்பப் படுகின்றது. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதால் மதம் ஒரு பிரச்சினை அல்ல என்ற முடிவுக்கு வருவதும் தவறானது. சிங்கள - தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வதற்கு மாறாக, மொழிப்பிரச்சினை கடந்த நூறாண்டுக்குள் உருவான புதிய தோற்றப் பாடு. அதற்கு முன்னர், சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் சகோதர பாசத்துடன் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழ் தேசியத்தின் பிதாமகர்களில் ஒருவராக மதிக்கப் படும் சேர் பொன் இராமநாதன் ஒரு சாதிவெறியராக இருந்தார். அது மட்டுமல்லாது, முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்புணர்வும் கொண்டிருந்தார். 1915 ம் ஆண்டு, சிங்கள பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. அப்போதிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு கலவரத்திற்கு காரணமான சிங்கள அரசியல் தலைவர்களை சிறையிலடைத்தது. அவர்களில் சிலர் பிற்கால வரலாற்றில் தமிழருக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுக்கவிருந்தனர்.

தமிழ்த் தேசியத் தலைவர் சேர் பொன் இராமநாதன் என்ன செய்தார்? "பிசாசின் வழக்கறிஞர்" போன்று நடந்து கொண்டார். பிரிட்டனுக்கு சென்று வழக்காடி தனது வாதத் திறமையால் சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார். தாயகம் திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் காவிச் சென்று நன்றி தெரிவித்தனர். சேர் பொன் இராமநாதனுக்கு சிங்களவர் வைத்த சிலை இன்றைக்கும் காலி முகத் திடலில் உள்ளது.

இன்றைய தமிழ்த் தேசியவாதிகளின் கொள்கைப் படி, சேர். பொன் இராமநாதனுக்கு துரோகி முத்திரை குத்தியிருக்க வேண்டும். ஆனால், இன்றும் கூட "துரோகி" இராமநாதனை போற்றிப் புகழும் ஈழத் தமிழ்த் தேசியவாதிகள், எந்தவொரு தருணத்திலும் அவரது இனத்துரோகம் பற்றிப் பேசுவதில்லை. அதற்குக் காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு "இனத் துரோகத்திற்குள் அடங்காது!" இந்த விடயத்தில் சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இனம் இனத்தோடு தானே சேரும்? அதிலென்ன ஆச்சரியம்?

ஆகவே, இலங்கையில் தமிழ் இந்துக்களும், சிங்கள பௌத்தர்களும், எந்தக் காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்று யாரும் வாதாட முன்வர வேண்டாம். "இனிமேல் சிங்களவரும், தமிழரும் சேர்ந்து வாழமுடியாது" என்று சொல்வதெல்லாம் பசப்பு வார்த்தைகள். சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள - தமிழ் வலதுசாரிகளும், கொள்கை வேறுபாடின்றி ஒன்று சேரக் கூடியவர்கள். அதுவே இந்துத்துவா சக்திகள் வளர்வதற்கு உரமாக அமைய முடியும்.

இதற்கெல்லாம் ஆதாரம் எங்கே என்று கேட்டு நச்சரிக்காதீர்கள். RSS, VHP  ஆகிய மதவாத அமைப்புகள், ஏற்கனவே சில ஈழத் தமிழ் கைக்கூலிகளுக்கு நிதி கொடுத்து சமூக வலைத் தளங்களில் இயங்க வைத்துள்ளன. முகநூலில் பல்வேறு போலிப் பெயர்களில் வந்து தாக்குதல் நடத்தும் கருத்துக் கந்தசாமிகள் பலருண்டு. இவர்கள் சிலநேரம் "புலிகளின் தீவிர விசுவாசிகள்" போன்று நடிப்பதால் யாரும் சந்தேகப் படுவதில்லை. ஆனால், அவர்களது குறிக்கோள் எப்போதும் இனவாதம், மதவாதத்தை தூண்டி விடுவதாக இருக்கும். உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்லாது, உலக முஸ்லிம்களுக்கு எதிராகவும் கொந்தளிப்பார்கள்.

இந்து மத அடிப்படைவாதம் பேசும் ஈழத் தமிழரின் முகநூல் பக்கங்கள் தனியாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அதற்கும், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முகநூல் பக்கத்திற்கும் தொடர்பிருப்பதை காணலாம். இவர்கள் தமக்குள் ஒரே மாதிரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மையில் கொழும்பு நகரில் பௌத்த - இந்து ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கான மகாநாடு ஒன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய அறிஞர்கள், "இலங்கையில் எவ்வாறு பௌத்தர்களும், இந்துக்களும் ஆயிரமாயிரம் வருடங்களாக சகோதரர்களாக வாழ்ந்தார்கள்" என்று போதித்தார்கள்.

இலங்கையில் புத்தர் சிலைகள் கட்டுவதற்கும் இந்துக்கள் உதவியுள்ளனராம். ஆகவே, இனிமேல் யாராவது "இந்து பூமியில் அத்துமீறும்" புத்தர் சிலைகளை கண்டால், அதை மத நல்லிணக்க அடையாளமாக கருத வேண்டும் என்று போதிக்கிறார்கள். புத்தர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? ஒன்றும் சொல்ல மாட்டார்கள். வழமை போல கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

ஜெர்மனியில் நாஸி கட்சியினர் வளர்ந்து வந்த பொழுது, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜெர்மன் மக்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்: "நமது எதிரி வேறு யாருமல்ல. அவன் எமக்குள்ளே இருக்கிறான்." தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் சிங்களவர்களோ, முஸ்லிம்களோ அல்ல. உலகம் முழுவதும் மக்களின் உண்மையான எதிரிகள் பாசிஸ்டுகள் தான். ஒரே மொழி பேசினாலும், ஒரே மதத்தை பின்பற்றினாலும், பாசிஸ்டுகள் எப்போதும் மக்கள் விரோதிகள் தான்.


மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள ஆதாரங்களை பார்க்கவும்:










Tuesday, March 11, 2014

உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்

(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல்   தவிர்ப்பது நல்லது.)


சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அது யாருடைய சின்னம் என்பது தெரியுமா? 1941 ம் ஆண்டு, உக்ரைனில் யூதர்களை இனவழிப்புச் செய்த, "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN) என்ற உக்ரைனிய நாஸிகளின் சின்னம்! இன்றைய ஜெர்மனி, ஹிட்லரின் ஸ்வாஸ்திகா சின்னத்தை, தனது தேசிய சின்னமாக்கிக் கொண்டால், அது உலகில் எத்தகைய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும்? சோவியத் ஒன்றியத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த உக்ரைனில், பழைய நாஸி சின்னம், இன்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. உலகில் யாரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. 

ஒரு யூதப் பெண்ணை வீதியில் போட்டு அடிக்கும் உக்ரைன் இனவெறியர்கள் 

இன்றைய உக்ரைனிய ஆட்சியாளர்களை, மேற்கத்திய நாடுகள் மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றன. 1941 ம் ஆண்டு,ஐயாயிரம் யூதர்களை இனப் படுகொலை செய்த, அதே உக்ரைன் தேசியவாத இயக்கம், இன்று ஆட்சி அமைத்துள்ளது. ஜனநாயக பண்பு நிறைந்த மேற்கத்திய கனவான்கள், அந்த அரசைத் தான், "சட்ட பூர்வமான உக்ரைனிய அரசு" என்று அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இது ஒன்றும் புதுமை அல்ல. 2 ம் உலகப்போரின் முடிவில், உக்ரைன் மீண்டும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாகியது. உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றனர். 

உக்ரைன் நாஸி தலைவருடன் கை குலுக்கும் ஜோர்ஜ் புஷ் 

OUN தலைவர்களில் ஒருவரான Yaroslav Stetsko, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை சந்தித்து இருந்தார். அப்போது பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சோவியத் யூனியனுக்குள் நுழைந்து, உளவுத் தகவல்கள் திரட்டுவதற்கும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும், உக்ரைனிய நாஸிகள் அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தார்கள். அந்தப் பழைய நட்பு, இப்போதும் தொடர்கின்றது. ஒரு பக்கம், யூதர்களை இனப் படுகொலை செய்தவர்களுடன் கை குலுக்கிக் கொண்டே, மறு பக்கம் இஸ்ரேலுக்கு உதவுவது, அமெரிக்கர்களுக்கு ஒரு முரண்பாடாகத் தெரியவில்லை. அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு கிடையாது.

வீதியில் ஒரு யூதப்  பெண்ணை ஓட ஓட அடிக்கும் ஒரு பாசிஸ்ட் சிறுவன்  
உக்ரைனில் யூத இனவழிப்பு, 1941 ம் ஆண்டு லிவிவ் (Lviv) நகரில் ஆரம்பமாகியது. லிவிவ் அல்லது லிவோவ் என்று அழைக்கப் படும் நகரம், மேற்கு உக்ரைனில் உள்ளது. போலந்து மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உருவானது. இன்றைக்கும் அதுவே உக்ரைனிய தேசியவாதத்தின் பிறப்பிடமாக கருதப் படுகின்றது. (உக்ரைனிய மொழி, ரஷ்ய மொழிக்கும், போலிஷ் மொழிக்கும் இடைப்பட்ட மொழி ஆகும்.) அண்மையில், உக்ரைனிய தலைநகர் கீவில் நடந்த, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மக்களில் பெரும்பான்மையானோர், லிவிவ் நகரில் இருந்து சென்றவர்கள் தான். கடந்த எழுபதாண்டு காலமாக, லிவிவ் மாநிலம், உக்ரைனிய தேசியவாதத்தின் கோட்டையாக இருந்து வந்துள்ளது.

"ஒப்பெறேஷன் பார்பரோசா" என்ற பெயரில், ஜேர்மனிய நாஸிப் படைகள், சோவியத் உக்ரைன் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தின. ஜெர்மனியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட சோவியத் இராணுவம் பின்வாங்கிச் சென்றது. 1941, ஜூலை மாதம், முதலாம் தேதி, உக்ரைனின் லிவிவ் மாநிலம் ஜெர்மனியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டது. 

வீதிகளை கைகளால் சுத்தம் செய்யும் யூதர்கள். உக்ரைனிய இனவெறிக் கும்பல் சுற்றி வர நின்று வேடிக்கை பார்க்கின்றது. 

லிவிவ் நகரில், NKVD (கேஜிபி யின் முன்னோடி) பல சிறைச்சாலைகளை நிர்வகித்து வந்தது. ஜெர்மன் படைகள் வருவதற்கு முதல் நாள், சிறையில் இருந்த கைதிகள் அவசர அவசரமாக சுட்டுக் கொல்லப் பட்டனர். அநேகமாக, அந்தக் கைதிகளில் பல தேசியவாதிகள் இருந்திருக்கலாம். ஜெர்மன் ஆக்கிரமிப்பின் பின்னர், வெளியே தலை காட்டிய உக்ரைனிய தேசியவாதிகளின் முதலாவது நடவடிக்கை, யூதர்களுக்கு எதிரானது தான். சிறையில் கொல்லப்பட்ட கைதிகளின் சடலங்களை அப்புறப் படுத்தவும், துப்பரவு செய்யவும், யூதர்களை பிடித்து பலவந்தமாக வேலை வாங்கினார்கள்.

பாசிஸ்டுகள் உடைத்து வீழ்த்திய லெனின் சிலையை முத்தமிடுமாறு ஒரு யூதனை வற்புறுத்துகிறார்கள். 

ரஷ்ய சாம்ராஜ்யத்தில், சார் மன்னன் காலத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனமான யூதர்கள், போல்ஷெவிக் புரட்சியின் பின்னர் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தனர். அதனால், தேசியவாதிகளினால், யூதர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று பொதுமைப் படுத்திப் பேசப் பட்டனர். அது உண்மையா, பொய்யா என்பதை விட, யூதர்கள் மீதான இனத் துவேஷத்தின் இன்னொரு வடிவமாக அது இருந்தது. அதனால், பாசிஸ்டுகளால் உடைக்கப் பட்ட லெனின் சிலைகளை முத்தமிடுமாறு, யூதர்களை துன்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

நடுத் தெருவில் ஆடை களைந்து அவமானப் படுத்தப் படும் யூதப் பெண் 

உக்ரைனில், யூத இனவழிப்பு ஒரு கேளிக்கை நிகழ்வு போன்று தொடங்கியது. பொது இடங்களில் ஒன்று கூடிய கும்பல்கள், பல்வேறு வழிகளில் யூதர்களை துன்புறுத்தின. தெருவில் யூதர்கள் ஓட ஓட கல்லால் அடித்து விரட்டினார்கள். தெருக்களில் முழங்காலால் நடந்து போகுமாறு கட்டளையிட்டார்கள். ஆண்கள், பெண்கள் பேதம் பாராது, பட்டப் பகலில், நடுத் தெருவில் உடைகளை களைந்து அம்மணமாக்கி அவமானப் படுத்தினார்கள். கேளிக்கை முடிந்த பின்னர் அடித்து, சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். அன்றைய இனப் படுகொலையில் பலியான அப்பாவிகள் செய்த ஒரேயொரு குற்றம், யூதர்களாகப் பிறந்தது தான். 

கும்பல் வன்முறைக்கு பாதிக்கப்பட்ட ஒரு தாயும் மகளும் 

காலங்காலமாக தங்கள் அயலில் வாழ்ந்த யூதர்களை, உக்ரைனிய காடையர்கள் துன்புறுத்தி, சித்திரவதை செய்து கொன்றார்கள். இன்றைய உக்ரைனை ஆளும், அதே "உக்ரைன் தேசியவாத இயக்கம்" (OUN), அன்று உக்ரைனிய மக்களுக்கு இனவெறியூட்டி, யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது. அன்று இந்த சம்பவங்களை எல்லாம், ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். உக்ரைனில் அன்று நடந்த யூத இனப் படுகொலையில், குறைந்தது ஐயாயிரம் உக்ரைன் யூதர்கள், உக்ரைனிய இனவெறியர்களினால் கொல்லப் பட்டனர்.
தெருவில் முழங்காலால் நடந்து செல்ல வற்புறுத்தப் பட்ட யூதப் பெண் 


அன்று உக்ரைனில் நடந்த யூத இனப் படுகொலையை, இன்றைய உலகம் மறந்து விட்டது. அதனால் வரலாறு திரும்புகின்றது. உக்ரைன் நாட்டில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக, அங்கு வாழும் யூதர்கள் அச்சத்தில் உள்ளனர். கீவ் நகர யூத தலைமை மதகுரு, யூதர்களை லிவிவ் நகரை விட்டு, முடிந்தால் உக்ரைனை விட்டு வெளியேறுவது நல்லது என்று அறிவுரை கூறியிருக்கிறார். இந்த தகவல் எந்த ஊடகத்திலும் வந்திருக்காது.  இன்று வரைக்கும், உக்ரைன் ஆட்சியாளர்களை, "நாஸிகள்/பாசிஸ்டுகள்" என்று குறிப்பிட மறுக்கும் ஊடகங்களிடம் இருந்து, நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இன்றைய உக்ரைன் பிரச்சினையில், மேற்கத்திய ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை மிகவும் கேவலமானது. இப்படித் தானே, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நேரமும் நடந்து கொண்டிருந்திருப்பார்கள்?

ஒரு உக்ரைனிய வன்முறைக் கும்பல், அப்பாவி யூதர்களை தெருவில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலில் பங்கு பற்றிய ஒருவரின் அடையாள அட்டை வலது புறம் உள்ளது. அதில் "உக்ரைனிய துணைப் படை உறுப்பினர்" என்று ஜெர்மன், உக்ரைனிய மொழிகளில் எழுதப் பட்டிருப்பதை வாசிக்கலாம்

இன்றைக்கும், உக்ரைன் பேரினவாதிகளின் பாசிச அரசாங்கத்தை ஆதரிக்கும் வகையில், தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உக்ரைனில், யூதர்களையும், போலிஷ் மக்களையும் இனப்படுகொலை செய்த உக்ரைனிய பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது, தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பேரினவாதிகளை ஆதரிப்பதற்கு சமமானது. ஆனாலும், தமிழ் தீவிர வலதுசாரிகள், மிகவும் துணிச்சலுடன் உக்ரைனிய நாஸி இனப் படுகொலையாளர்களை ஆதரித்து வருகின்றனர். பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு சரியான தகவல்கள் போய்ச் சேராத படியால், "தங்களது பிரச்சாரங்களை மட்டுமே தமிழ் மக்கள் நம்புவார்கள்" என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

இன்றைக்கு பலர், "தாங்கள் உக்ரைன் அரசை ஆதரிக்கவில்லை(?)" என்று சொல்லிக் கொண்டே, பாஸிசத்தின் மீள் வருகையை புறக்கணித்து வருகின்றனர். ஹிட்லர் காலத்திலும் அது தான் நடந்தது. அன்று, மேற்கத்திய அரசாங்கங்களும், ஊடகங்களும் ஹிட்லர் மீது நம்பிக்கை வைத்து புகழ்ந்து கொண்டிருந்தன. சிவபெருமானை எண்ணி தவம் செய்து வரம் கேட்டுப் பெற்ற பஸ்மாசுரன், சிவன் தலை மீதே கை வைக்க முயன்ற போது தான், சிவபெருமானுக்கு தான் செய்த தவறென்ன என்று புரிந்ததாம். இன்று, உக்ரைன் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி வருபவர்களின், எதிர்காலமும் அது தான். பஸ்மாசுரனுக்கு பயந்து சிவபெருமான் தலை தெறிக்க ஓடியது போன்று, இவர்களும் நாஸிகளுக்கு பயந்து ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.





உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

1.மேற்குலக ஜனநாயகம் ஆதரித்த உக்ரைனிய நாஜிகளின் சதிப்புரட்சி
2.கிரீமியா, ஈழம் : ஒரே இனப் பிரச்சினை, இரண்டு பரிமாணங்கள்
3.உக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்



Thursday, February 27, 2014

மேற்குலக ஜனநாயகம் ஆதரித்த உக்ரைனிய நாஜிகளின் சதிப்புரட்சி

கீவ் நகரசபை கட்டிடத்தில் தொங்கவிடப் பட்டுள்ள, உக்ரைனிய - நாஜி இனப்படுகொலையாளி ஸ்டெபன் பண்டேராவின் உருவப் படம்.

உக்ரைனில் "புரட்சி" நடந்துள்ளதாக, மேற்கத்திய ஊடகங்கள் படம் காட்டிக் கொண்டிருந்தன. தமிழ் வலதுசாரிகளும் அந்தப் "புரட்சியை" வரவேற்றார்கள். உண்மையில் யார் அந்தப் புரட்சியாளர்கள்? உக்ரைனின் நவ நாஸிகள், நவ பாசிஸ்டுகள் தான் மேற்குலகம் ஆதரித்த "புரட்சியாளர்கள்". உக்ரைனின் தலைநகரம் கீவை தமது கட்டுப்பாடுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், நகர சபைக் கட்டிடத்தில் "பல புரட்சிக் கொடிகள்" பறந்தன. நாஜி, பாசிசக் கொடிகள் மட்டுமல்ல, அமெரிக்க வெள்ளையின நிறவெறியர்களின் கொடியும் அங்கே பறந்தது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து எழுபதாயிரம் போலிஷ் மக்களையும், யூதர்களையும் இனப் படுகொலை செய்த, உக்ரைனிய தேசியவாதிகளின் தலைவர் ஸ்டெபன் பண்டேராவின் ஆளுயர உருவப்படம், கீவ் நகரசபை மண்டபத்தினுள் வைக்கப் பட்டது. உலகம் முழுவதும், தாம் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவும், பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும், உக்ரைனில் ஜனநாயக விரோத பாசிஸ்டுகளை ஆதரித்தார்கள். இதெல்லாம் பகிரங்கமாக நடந்து கொண்டிருந்தது. தற்காலத்தில் பாசிஸ்டுகளும், பாசிச அனுதாபிகளும் வெளிப்படையாகவே நடந்து கொள்கிறார்கள். யாருக்கும் வெட்கமில்லை.

கடந்த சில வாரங்களாக, கீவ் நகர வீதிகளை மறித்து, கூடாரங்களை அமைத்து தங்கியிருந்த பாசிசப் புரட்சியாளர்கள், அந்தப் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்று அறிவித்திருந்தனர். அந்தக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள், நவ நாஜிகள், அல்லது உக்ரைனிய தேசியவாதிகளை மட்டுமே அனுமதித்தார்கள். மேற்கத்திய ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

"பாசிச ஆர்ப்பாட்டக்காரர்களை சாதாரண மக்கள் போன்றும், அவர்கள் உக்ரைனிய பொலிஸ் படையை மட்டுமே எதிர்த்துப் போராடுவது போன்றும்", மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால், உண்மை நிலைமை வேறு. பாசிஸ்டுகள், "உக்ரைனிய பொலிசை மட்டுமே, தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அனுமதிக்கவில்லை" என்று நினைப்பது தவறு. உக்ரைன் அரசுக்கு எதிரான இடதுசாரிகளையும் தான் அனுமதிக்கவில்லை. சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப் பட்டோர் கடுமையாக தாக்கப் பட்டனர்.

பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கீவ் நகரப் பகுதிகள், கம்யூனிஸ்டுகள் செல்ல முடியாத ஆபத்தான இடங்களாக கருதப் பட்டன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, வேறெந்த கொள்கையை பின்பற்றும் இடதுசாரி அங்கே சென்றிருந்தாலும், அடித்துக் கொன்றிருப்பார்கள். ஆர்ப்பாட்டம் செய்த நவ நாஜிகளிடம் தாராளமாக பணம் புழங்கியது. (எல்லாம் மேற்குலக ஜனநாயகவாதிகள் அளித்த நன்கொடை தான்.) பலர் இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள். ஹிட்லர் காலத்து, நாஜி இராணுவ ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். அவர்களிடம் கத்தி, பொல்லு, கோடாலி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. 

அனார்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்லர். எந்தவொரு அரச கட்டமைப்பையும் எதிர்க்கும், புரட்சிகரமான இடதுசாரி கொள்கையை பின்பற்றுபவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில், நடைமுறையில் உள்ள எல்லா அரசாங்கமும் எதிரி தான். அதனால் தான், தமிழில் "அராஜகவாதிகள்" (அரசு அற்றவர்கள்) என்றும் அழைக்கப் படுகின்றனர்.

சுமார் முப்பது உக்ரைனிய அனார்கிஸ்டுகள், கீவ் நகர ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள சென்றனர். ஆனால், பாசிஸ்டுகள் அவர்களை அங்கே அனுமதிக்கவில்லை.
"இது எமது கட்டுப்பாட்டுப் பிரதேசம். வெளியே போங்கள்!" என்று கத்தினார்கள்.
"நாங்கள் அனார்கிஸ்டுகள். அரசை எதிர்ப்பவர்கள். நாங்களும் உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறோம்..."பதிலளித்தனர் அனார்கிஸ்டுகள்.
"அனார்கிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், ரஷ்யர்கள், யூதர்கள் என்று யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது." என்று பாசிஸ்டுகள் தமது சுயரூபத்தைக் காட்டினார்கள்.

ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி யனுகோவிச், ஒரு நவ லிபரல்வாதி என்பதற்காக, அவரை எதிர்க்கும் அனார்கிஸ்டுகள், ஒரு சில நாட்கள் அங்கே நின்று அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென ஒரு நாள், நூற்றுக் கணக்கான பாசிஸ்டுகள் அவர்களை சுற்றிவளைத்தார்கள். அவர்கள் கைகளில் கத்தி, கோடாலிகள் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், யனுகோவிச் அரசை ஆதரித்தவர்களின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை, இங்கே சொல்லத் தேவையில்லை.

"அமைதி வழியில்" ஆர்ப்பாட்டம் செய்த யனுகோவிச் அரசு எதிர்ப்பாளர்கள் கூட, போலிஸ், மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்று பலரைக் கொலை செய்திருக்கிறார்கள் என்ற தகவல், எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்காது. ஒரு இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக வெளியேறிய அனார்கிஸ்டுகள், அதற்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அப்போது தான், அனார்கிஸ்ட் குழுவினருக்கு ஒரு உண்மை உறைத்தது. உக்ரைனில் நடந்தது ஒரு மக்கள் எழுச்சி அல்ல. மாறாக, பாசிஸ்டுகளின் சதிப்புரட்சி. இதைத் தான், "உக்ரைன் மக்களின் ஜனநாயகத்திற்கான புரட்சி" என்று மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் புளுகிக் கொண்டிருக்கின்றன.

உக்ரைன் நாட்டின் இனப்பிரச்சினை : ரஷ்ய, உக்ரைனிய இனப் பாகுபாடும், அரசியல் பிரிவினையும். 

உக்ரைன் நாட்டில், தற்போது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்து விட்டன. ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி யனுகோவிச் பதவி விலகி உள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. எல்லாம் சுபமாக முடிந்து விட்டது என்று, மேற்கத்திய நாடுகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளன. ஆனால், உக்ரைன் நாட்டின் பிரச்சினை இன்னும் தீரவில்லை. உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில், மேற்கில் உக்ரைனிய மொழி பேசுவோரும், தென் கிழக்கில் ரஷ்ய மொழி பேசுவோரும் வாழ்கின்றனர். இரண்டு இனங்களுக்கு இடையிலான பிளவு அதிகமாகி உள்ளது.

ரஷ்ய, உக்ரைன் இனப் பிரச்சினையும் ஒரு மொழி அடிப்படையிலான பிரச்சினை தான். இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம், தமிழும், மலையாளமும் அளவிற்கும் இல்லை. தமிழகத் தமிழும், ஈழத் தமிழும் மாதிரி, இரண்டு மொழிகளும் மிகவும் நெருக்கமானவை. ஆனால், மொழியியல் அறிஞர்கள், உக்ரைனியனை தனித்துவமான மொழியாக வளர்த்தெடுத்து விட்டனர். இருபதாம் நூற்றாண்டில், இரண்டு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான முரண்பாடு, இரு தரப்பு அரசியல்வாதிகளால், அவர்களது குறுகிய நலன்களுக்காக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. அது இன்னமும் தொடர்கின்றது.


இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஜி ஜெர்மனி படையெடுத்த நேரம், உக்ரைனிய தேசியவாதிகள் நாஜிப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, ரஷ்யர்களும், உக்ரைனியர்களும் ஒருவரை ஒருவர் எதிரிகளாக கருதிக் கொள்கின்றனர். இரண்டு மொழிப் பிரிவினருக்கு இடையிலான இனக் குரோதம், சகல இடங்களிலும் வெளிப்படுகின்றது. உக்ரைனியர்கள், ரஷ்யர்களை "ஏகாதிபத்தியவாதிகள்" என்று குற்றம் சுமத்துவார்கள். ரஷ்யர்கள், உக்ரைனியர்களை "பாசிஸ்டுகள்/ நாஜிகள்" என்று குற்றம் சாட்டுவார்கள்.

சோவியத் கூட்டமைப்பில் இருந்து, உக்ரைன் பிரிந்து சென்று தனி நாடான பின்னர், இனப் பிரச்சினை முன்னரை விட அதிகமாக கூர்மையடைந்துள்ளது. தலைநகரமும், அரசும் எந்த இனத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதிலான இழுபறி நிலைமை தான், தற்போது அந்த நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம். மேலதிகமாக, உலக வல்லரசுகளான ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் கயிறிழுப்புப் போட்டியும், நிலைமையை மோசமடைய வைக்கிறது.

உக்ரைனில் இருந்து இறுதியாகக் கிடைத்த தகவலின் படி, ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரீமியா தீபகற்பம், உக்ரைனில் இருந்து பிரிவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது. ரஷ்ய உல்லாசப் பிரயாணிகளை கவரும், அழகிய கடற்கரைகளை கொண்ட கிரீமியா, அறுபது வருடங்களுக்கு முன்னர், உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது. அப்போது எல்லாம் சோவியத் யூனியன் என்ற ஒரே நாட்டின் கீழ் இருந்த படியால், அன்று அது பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை வேறு. 

தலைநகர் கீவில் ஆட்சி மாறிய உடனேயே, கிரிமியாவில் பறந்த உக்ரைனிய தேசியக் கொடி இறக்கப் பட்டது. அங்கே தற்போது ரஷ்யக் கொடி பறக்கின்றது. அதைத் தவிர, சட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்கள் உருவாக்கப் படுகின்றன. அவற்றில் தொண்டர்களாக சேரும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப் படுகின்றது. உக்ரைன் ஒரு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

உடைக்கப் பட்ட லெனின் சிலை இருந்த இடத்தில், நாஜி சுலோகங்களும், பாசிச சின்னங்களும் கிறுக்கப் பட்டுள்ளன. 
உக்ரைனில் மேற்குலக சார்பான அரசாங்கம் பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? லெனின் சிலைகளையும், பிற சோவியத் கால சின்னங்களையும் உடைப்பது. அநேகமாக, உக்ரைனிய மொழிப் பெரும்பான்மை சமூகம் வாழும் பகுதிகளில், பரவலாக சிலை உடைப்புகள் நடக்கின்றன. "ஆஹா... மீண்டும் லெனின் சிலைகளை உடைக்கிறார்களா? நல்ல விடயம் தானே!" என்று சில தமிழ் வலதுசாரிகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள்....

இந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். வீழ்த்தப் பட்ட சிலை வைக்கப் பட்டிருந்த, அடித் தளத்தில் ஏதோ கிறுக்கி இருக்கிறார்கள். சில சின்னங்களையும் வரைந்திருக்கிறார்கள். அவை என்ன? ஆமாம், நாகரிக உலகில் தடை செய்யப்பட்ட, "நாஜி/பாசிச சின்னங்கள்" தான் அவை.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். லெனின் சிலைகளை விழுத்தியவர்கள் வேறு யாருமல்ல. உக்ரைனிய நவ நாஜிகள். சோவியத் யூனியன் வீழ்ந்த காலத்தில், லெனின் சிலைகளை உடைத்தவர்களும் அவர்கள் தான். இரண்டாம் உலகப்போர் காலத்தில், 1941 ம் ஆண்டு சோவியத் யூனியனின் பல பகுதிகளை ஆக்கிரமித்த நாஜிப் படையினர் தான், முதன் முதலாக லெனின் சிலைகளை உடைத்துக் காட்டினார்கள்.

இன்று நவ நாஜிகளும், நவ பாசிஸ்டுகளும் லெனின் சிலைகளை காணுமிடங்களில் எல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பரம்பரைத் தொழில் போலும். அதனை உலகம் முழுவதும் உள்ள, நாஜி / பாசிச அனுதாபிகள் வரவேற்கிறார்கள். இவர்களுக்காக இன்னொரு ஸ்டாலின்கிராட் காத்துக் கொண்டிருக்கிறது.


Neo-Nazi threat in new Ukraine


Thursday, December 09, 2010

இஸ்ரேல் ஆதரவாளர்களான இனவெறி பாசிஸ்டுகள்

இனவெறியர்களும், பாசிஸ்டுகளுமே இஸ்ரேலின் ஆதரவாளர்கள், என்பதற்கு இங்கேயுள்ள இரண்டு வீடியோக்களும் சாட்சியம். அண்மையில் ஐரோப்பிய இனவெறிக் கட்சிகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு நேரே சென்று தமது ஆதரவை தெரிவித்தனர். வெகுஜன அரசியல் கட்சிகள் என்ற போர்வையின் கீழ் இயங்கும் நவ- நாஸிகள். தாம் சார்ந்த ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அரசியலை நடத்தி வருகின்றனர். தமது இனவெறிக் கொள்கைகளை மறைப்பதற்காக, புதிதாக "யூத- கிறிஸ்தவ சித்தாந்தம்" என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தின் வில்டர்ஸ், பெல்ஜியத்தின் டெ வின்டர் ஆகியோர் இஸ்ரேல் சென்ற தீவிர வலதுசாரிக் கட்சிகளின் குழுவில் முக்கியமானவர்கள். (பார்க்க: வீடியோ 1)

வில்டர்ஸ் இஸ்ரேலில் உரையாற்றும் பொழுது, "பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டான் என்ற தேசம் இருக்கின்றது." என்று கூறி யூத இனவெறியர்களின் கருத்தை பிரதிபலித்துள்ளார். (பார்க்க: வீடியோ 2) இலங்கையில் சிங்கள இனவெறியர்களும் அதே போன்ற பிரச்சாரம் செய்வது ("தமிழர்களுக்கு ஈழம் வேண்டுமானால் தமிழ் நாட்டுக்கு போகலாம்.") குறிப்பிடத் தக்கது.