Tuesday, April 30, 2024

தமிழ்த் தேசிய மே நாள்!

 


இவ்விரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ஒரு கட்சி "தமிழ்த் தேசிய மே நாள்" என்று பிரிவினை பேசுகிறது.
மற்ற கட்சியும் அதே பாணியில் "தமிழ்த் தேசத்து தொழிலாளர்" என்று பிரிவினை அரசியலை பேசுகிறது.

முதலாளிகள் ஒற்றுமையை இவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ் தொழிலாளர்கள் சிங்களத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.
அதற்கு தான் தமிழ்த் தேசியம் என்ற மாயத் திரை தேவைப் படுகிறது.

உலகில் எந்த நாட்டிலும், இப்படியான மோசடியான மே தினத்தை பார்க்க முடியாது. ஒரு காலத்தில் ஜெர்மனியில் ஹிட்லரின் Nazi கட்சி இதே மாதிரி "ஜெர்மன் தேசிய மே நாள்", அல்லது "ஜெர்மன் தேசத்து தொழிலாளர்" பற்றி பேசியது. அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போது யாரும் அப்படி பேசத் துணிய மாட்டார்கள். உழைக்கும் மக்களுக்கு தேசியம் கிடையாது. இன, மத பேதமின்றி ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தொழிலாளர்களை தேசியம் பேசி பிரிப்பது அயோக்கியத்தனமானது.

அது போகட்டும்.
இவர்கள் சொல்லும் தமிழ் தேசத்தில் இன்றைக்கும் உள்ள தொழிற்சாலைகளை விரல் விட்டு எண்ணலாம். பெரும்பாலானவை சிறிய தொழிலகங்கள். அதனால் அமைப்பு ரீதியாக அணிசேரா தொழிலாளர்கள் சிறு முதலாளிகளின் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். 
அந்த சிறு முதலாளிகள் செய்யும்  கொடுமைகள் எண்ணில் அடங்காதவை:
- மிகக் குறைந்த கூலி கொடுப்பது.
- அதிக நேரம் வேலை வாங்குவது.
- ஓய்வு நாட்களிலும் வேலை செய்ய நிர்ப்பந்திப்பது. 
- தினசரி வேலைக்கு வரச் சொல்வது.
- ஆபத்தானவை வேலைக்கு பாதுகா‌ப்பு கவசங்கள் கொடுக்க மறுப்பது.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இவற்றை எல்லாம் இந்த முதலாளித்துவ கட்சிகள் மேதின கோரிக்கைகளாக வைக்க மாட்டார்கள்.

காரணம்: மேற்படி கொடுமைகளுக்கு காரணமான தமிழ் பேசும் சிறு முதலாளிகள் தான் இந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு நிதி வழங்குகிறார்கள். அதாவது தமிழ் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டி அவர்களிடம் இருந்து திருடிய பணத்தில் தான் இந்த முதலாளித்துவ கட்சிகள் அரசியல் நடத்துகின்றன!
பணம் பேசுகிறது!


No comments: