tag:blogger.com,1999:blog-37061961.post6985488513082412985..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இந்து மத சம்பிரதாயங்களை மாற்றிய விடுதலைப் புலிகள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-45965397468095231942014-02-16T21:32:12.884+01:002014-02-16T21:32:12.884+01:00இந்தப் பதிவுக்கு, முகநூலில் வந்த இரண்டு எதிர்வினைக...இந்தப் பதிவுக்கு, முகநூலில் வந்த இரண்டு எதிர்வினைகள்:<br /><br />Shoba Sakthi: செல்லாது.. செல்லாது! <br /><br />புலிகள் இயக்கத்தின் தலைமையிலிருந்தவர்களே மத நம்பிக்கையாளர்கள்தான். தலைவர் திருப்பதியில் முடி இறக்கியிருக்கிறார். கிட்டுவின் காலத்தில் ஆயுதங்கள் வரும்போது அவை முதலில் நல்லூர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுவதுண்டு. புலிகளின் படகுகள் தொடர்சியாக கடலில் மூழ்கடிக்கப்பட்டது தெய்வ குற்றமெனக் கருதி தெல்லிப்பளை துர்கையம்மன் ஆலயத்தில் கொள்ளையிடப்பட்ட நகைகள் மீள ஒப்படைக்கப்பட்டன. புலிகளின் சிறைக்கைதிகள் ஒரு பிள்ளையார் படத்தை வைத்திருந்து கும்பிட்டதை புலிகள் தடை செய்ததை மணியம் தனது சிறைக்குறிப்புகளில் குறிப்பிடுகிறார். அதாவது கைதிகள் ஏதாவது கோரிக்கை வைத்து அதைப் பிள்ளையார் ஏற்றுக்கொண்டு விடலாம் என்ற பயத்திலேயே அது நடந்தது என்கிறார் மணியம். LTT என்றிருந்த இயக்கத்தின் பெயர் LTTE என மாற்றப்பட்டதே எண்கணித சாஸ்திர நம்பிக்கையின்படிதான்.முக்கியமாக அய்ரோப்பாவிலும் கனடாவிலும் புலிகள் நிறுவி நடத்திவரும் இந்துக் கோயில்களை நீங்கள் கவனம் கொள்ளவில்லையே தல!<br /><br />Ganeshalingam Kanapathipillai: புலிகள் எண்கணித சாஸ்திரத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள். தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்த எண் 13 இந்தத்திகதிகளிலேயே பல தாக்குதல்களை நடாத்தியிருக்கிறார்கள். வெற்றிகரமாக என்று சொல்லமாட்டேன். காரணம் புலிகள் வெற்றி எனக்குறிப்பிடுவது எதிர்த்தரப்பில் எத்தனை தலைகள் வீழ்கிறது என்பதைத்தான். eprlf மீதான தாக்குதல்கூட பதிமூன்றில்தான் நடாத்திமுடித்தார்கள். அடுத்து மதநம்பிக்கையற்ற நாஸ்தீகர்களென்றுகூட கூறமுடியாது. காரணம் ஆரம்பகாலங்களிலிருந்தே பாதிரிகளின் ஆளுமை புலிகளுக்குள் இருந்திருக்கிறது. வங்கிக்கொள்ளையில் கைதான புலிகளுள் பிரதானமானவர் சிங்கராசர் பாதிரியாராவார். இதற்குள் என்னமோதெரியவில்லை இந்துக்குருக்கள் சம்மந்தப்படுவதில்லை அதனால்த்தான் இறுதிக்காலங்களில் இந்துக்குருமாரை புலிகள் தேடியளித்தார்கள். என்னைப்பொறுத்தவரை எம்து கடந்தகாலப்போராட்டத்தில் திடீரென மதக்கலாச்சாரங்களுக்குள் கட்டுப்பட்டுக்கிடக்கின்ற மக்களை பிரித்தெடுக்கமுடியாது. சோவியத்யூனியனில் லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைபோல ஈழப்போராட்டத்தி உடனே சாத்தியமாகவில்லை என்பதுதான் உண்மை.......Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.com