tag:blogger.com,1999:blog-37061961.post2570141625157010568..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: கொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா?Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-19565849320482326872020-04-08T14:12:57.408+02:002020-04-08T14:12:57.408+02:00புரட்சி தானாய் வெடிக்காது. அதற்கென்று சரியான பின்ப...புரட்சி தானாய் வெடிக்காது. அதற்கென்று சரியான பின்புலங்கள் அமைய வேண்டும். உயிர்களின் படிநிலை வளர்ச்சி போல் அமைவதே பொருத்தம். <br /><br />சாதாரண மக்களை விட, பணம் படைத்த புள்ளிகள் எப்படி கொரோனாவை வைத்து இன்னும் அள்ளலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அவர்கள் கைக்குள் இருக்கிறார்கள். இன்றைய பொருளியல் வல்லுநர்கள் அதற்கு ஏற்றபடி கொள்கைகள் வகுக்கப் போகிறார்கள். பொருளியல் கொள்கைகள் மாறினால் அன்றி எதுவும் சாத்தியம் இல்லை. <br /><br />மில்ட்டன் பிரெய்மன் மற்றும் பிரடெரிச் ஹயேக் கொள்கைகளை உலகம் என்று ஒதுக்குமோ அன்று தான் பொருளாதாரமும் சமுதாயமும் உருப்படும். இன்றைய நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வாக மீண்டும் பொருளியலாளர் கெயின்சின் கொள்கைகளுக்குத் திரும்புவதே புத்திசாலித்தனம். அவரும் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற யோசித்தவர் தான். ஆனால் சோஷலிசம் என்பதே கெட்ட வார்த்தையாகப் போய்விட்ட இந்தக் காலத்தில் கொஞ்சமாவது மக்களைப் படிப்படியாக அந்த சோஷலிச உலகத்தை நோக்கி நகரச் செய்ய இது உதவலாம். <br /><br />அதற்கு முன்னே பணம் என்பதை சீர்திருத்தம் செய்ய வேண்டும். பணம் என்பது சேர்ப்பதற்கல்ல. அது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கருவி மட்டுமே என்கிற நிலைக்கு வரவேண்டும். பணத்துக்கு வட்டி இல்லை என்பதை சட்டம் மூலம் உறுதி செய்ய வேண்டும். பொருள்கள்/சேவைகள் எப்படி காலம் செல்லச் செல்ல மதிப்பை இழக்கின்றனவோ அது போல் பணமும் மதிப்பை இழக்கும் நிலை வருமானால் தான்<br />இன்று நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களுக்கு முடிவு கட்டலாம்.thisanhttps://www.blogger.com/profile/01986110285088919633noreply@blogger.com