tag:blogger.com,1999:blog-37061961.post9209649345301615104..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு! Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-65940620404273931862015-07-06T10:28:52.623+02:002015-07-06T10:28:52.623+02:00தமிழர்கள் மேற்குலகிற்கு அகதிகளாக செல்வது, அவர்கள் ...தமிழர்கள் மேற்குலகிற்கு அகதிகளாக செல்வது, அவர்கள் எமது முந்திய காலனிய எஜமானர்கள் என்பதால் தான். ரஷ்யாவோ, சீனாவோ எங்களை காலனிப் படுத்தி இருந்தால் நாங்கள் அங்கே சென்றிருக்கலாம். பெரும்பான்மையான தமிழ் அகதிகள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்கள்? கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான். அதாவது, ஆங்கிலேய காலனியாதிக்க தொடர்பை இன்றைக்கும் நினைவுபடுத்தும் நாடுகளுக்கு செல்கிறார்கள். இந்த உண்மை முன்னாள் காலனிய எஜமானர்களுக்கும் தெரியும். அதனால் தான், பாவ விமோசனமாக அகதிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். காலனியாதிக்க ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, இன்று வரைக்கும், இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று, கடன் கொடுத்து, அந்த நாடுகளில் யுத்தங்களை உண்டாக்கி, அந்த நெருப்பில் குளிர் காய்வதும் இந்த மேற்கத்திய நாடுகள் தான். அவர்கள் தாம் செய்வது பாவம் என்று தெரிந்து கொண்டு தான் செய்கிறார்கள். பணம் வருகிறதே? அதனால், தாம் செய்து கொண்டிருக்கும் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுவது போன்று, மேற்கத்திய நாடுகளுக்கு வரும் தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்றைக்கு ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளில் பெரும்பான்மையானோர் யார் தெரியுமா? சிரிய நாட்டவர்கள். அமைதியாக இருந்த சிரியாவில் பிரச்சினையை தூண்டி விட்டு, அங்குள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உள்நாட்டுப் போரை ஏற்படுத்திய சக்திகள் யார்? இதே மேற்கத்திய நாடுகள் தான். <br />ஆகவே, முதலில் உண்மை நிலைமையை தெரிந்து கொண்ட பின்னர் கருத்தை தெரிவியுங்கள். அமெரிக்கா பணம் கொடுக்கிறது என்பதற்காக, கண்ணை மூடிக் கொண்டு அடிமை மாதிரி விசுவாசம் காட்டாதீர்கள். அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76334467000444882952015-07-06T03:44:56.070+02:002015-07-06T03:44:56.070+02:00தமிழ் இனத்தை அழித்தொழிப்பது என்று எழுதுகிறோமே, எவ்...தமிழ் இனத்தை அழித்தொழிப்பது என்று எழுதுகிறோமே, எவ்வளவு தமிழர்களுக்கு அகதிகள் என்ற ஒரே காரணத்துக்காக தங்க உரிமை கொடுத்து வாழ்வாதாரங்களை கொடுத்ததும் பேணுவது இந்த "மேற்கு" முதலாளித்துவ கொடுங்கோன்மையினர் தானே? எவ்வளவு பேர் ரஷியாவிலோ சீனாவிலோ தஞ்சம் புக முடிந்தது? தெரிந்தால் சொல்லுங்கள்nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.com