tag:blogger.com,1999:blog-37061961.post6306280289176700431..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-4301958046289426022011-02-14T16:32:54.360+01:002011-02-14T16:32:54.360+01:00you can also grow your children to conquer eelam.you can also grow your children to conquer eelam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-41516343233531799562011-02-09T11:11:18.402+01:002011-02-09T11:11:18.402+01:00பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஸ்டாலின் காலத்தில் சோவ...பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியன் முழுவதும் கொண்டுவரப் பட்டது. நிலப்பிரபுக்கள், முதலாளிகள், கந்துவட்டிக் காரர்கள், பணக்கார விவசாயிகள், மதவெறியர்கள், இனவெறியர்கள், என்று புரட்சிக்கு எதிராக யார் நின்றார்களோ அவர்கள் குடும்பத்தோடு சைபீரிய முகாம்களுக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். அங்கே அவர்கள் சாதாரண தொழிலாளியின் வாழ்க்கை வாழ்ந்தார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் வர்க்க எதிரிகளாக கருதப்பட்டார்கள். அவர்கள் எந்த இனத்தை, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. சோவியத் யூனியன் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை தகுதி போதும். அவர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட்டன. <br /><br />எந்தவொரு சமூகத்திலும் எதிர்க் கருத்தாளர்களை முழுவதுமாக அழித்து விட முடியாது. ஒருவர் இனவாதியாக, மதவாதியாக, தேசியவாதியாக, முதலாளித்துவ வாதியாக, அத்தகைய கருத்துகளை மனதில் வைத்துக் கொண்டு வாழ முடியும். வெளியில் அரசுடன் ஒத்துழைப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் தமது பிள்ளைகளுக்கு தமது கொள்கைகளை போதிப்பார்கள். தம்மால் முடியாததை தமது பிள்ளைகள் சாதிப்பார்கள் என்று நம்புவார்கள். அவ்வாறு வளர்ந்த பிள்ளைகள் தான் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37454529548604252072011-02-09T10:55:18.392+01:002011-02-09T10:55:18.392+01:00சோவியத் இனங்களின் பிரச்சினையை புரிந்து கொண்டால், அ...சோவியத் இனங்களின் பிரச்சினையை புரிந்து கொண்டால், அரை வாசி உலகைப் புரிந்து கொள்ளலாம். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்க்க இரண்டு திட்டங்கள் கொண்டு வரப் பட்டன. ஒன்று: பொருளாதார சார்புத் தன்மை இரண்டு: பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் <br />தேசிய இனங்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் எல்லாம் சமூக-அரசியல் கட்டமைப்பு மட்டுமே. அவை தனியான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. பொருளாதாரக் கட்டமைப்பு ஒரே நாடு போன்றே இருந்தது. எல்லாம் மொஸ்கோ சென்று பின்னர் அங்கிருந்து விநியோகிக்கப்பட்டன. உதாரணத்திற்கு காசக்ஸ்தான், அசர்பைஜான் எண்ணெய் குழாய்கள் மொஸ்கோவை நோக்கி சென்றன. அங்கிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரை எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு குடியரசும் சிறப்புத் தன்மை கொண்ட பொருளாதார உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டது. உஸ்பெகிஸ்தானில் மித மிஞ்சிய பருத்தி உற்பத்தி காரணமாக நீர் நிலைகள் கூட காய்ந்தன. இன்று பிரிந்து சென்ற குடியரசுகள் பொருளாதார சார்புத் தன்மையில் இருந்து விடுபட கஷ்டப்படுகின்றன. ரஷ்யாவின் செல்வாக்கை மீறி செயற்பட முடியாமல் உள்ளன. பால்டிக் நாடுகள் ஒரு நல்ல உதாரணம். அவர்களுக்கு ரஷ்யா முதலாவது எதிரி. இப்போது ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவில் எல்லாம் சேர்ந்து விட்டார்கள். ஆனாலும் ரஷ்யா ஒரு நாள் எண்ணெய், எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால், அந்த நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்து விடும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83942232405943522432011-02-09T04:54:10.182+01:002011-02-09T04:54:10.182+01:00தேசியவாதம் பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரானது என்று த...தேசியவாதம் பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரானது என்று தேசியவாத அரசுகள் கலைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் அவை இணைக்கப்பட்ட போதும் அவை பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தை பெற்றிருந்தன. சோவியத் ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் பல்வேறு இனத்தவர்களும் வெவ்வேறு நாடுகளில் குடியேற்றப்பட்டனர் (சீனாவில் ஹான் சீனர்கள் குடியேற்றப்பட்டது போல) இது அந்தந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்காக என்பது புரிகிறது. இருப்பினும் அந்த நாடு பிரிந்து செல்ல விரும்பினால் பொதுவுடமை நாடாக இராமல், அதில் மத, இன தேசியம் வளர்ந்துவிட்டதாகத்தானே பொருள், அப்ப்டிப் பிரிந்த நாடுகள் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களை எதிரிகளாகக் காட்டும் அரசியல்தான் நடக்கும், இதனால் இனப்பிரச்சனை இரத்த ஆறு ஓடவைக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கும்தானே ? இதைத் தவிர்ப்பதற்கான தொலைநோக்காக எந்தத் திட்டமும் சோவியத் ஒன்றியத்திடம் இருந்ததா?sivakumarhttps://www.blogger.com/profile/00512621653278168114noreply@blogger.com