tag:blogger.com,1999:blog-37061961.post4038057235054783298..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37061961.post-69282109440534542722015-07-13T20:21:59.999+02:002015-07-13T20:21:59.999+02:00இதுவும் ஒரு தலைப்பட்சமான பார்வை தான். இலங்கையில் இ...இதுவும் ஒரு தலைப்பட்சமான பார்வை தான். இலங்கையில் இனப் பகை அரசியல் தீவிரமடைந்த காலத்தில், இடதுசாரிகளும் தேசியவாதிகளாக மாறி இருந்தனர். புலிகள் உட்பட, ஆரம்ப கால ஈழ விடுதலை இயக்கங்களில் ஏராளமான இடதுசாரிகள் சேர்ந்திருந்தனர். மறு பக்கத்தில் சிங்களவர்கள் மத்தியிலும் அது போன்றதொரு போக்குக் காணப்பட்டது. அதாவது சிங்கள இடதுசாரிகள் பலர் சிங்கள தேசியவாதிகள் ஆனார்கள். பிற்காலத்தில் ஈழப்போரில் இந்தியா, அமெரிக்காவின் தலையீடு அதிகரித்த படியால், இரண்டு பக்கமும் இடதுசாரிகள் ஒதுக்கப் பட்டனர். வலதுசாரிகளின் கை ஓங்கியது. அதன் விளைவு இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-15876962770332943572015-07-13T11:09:20.856+02:002015-07-13T11:09:20.856+02:00தோழர் 2009 வரை புலிகள் எதிர்ப்பும் ராணுவ எதிர்ப்பு...தோழர் 2009 வரை புலிகள் எதிர்ப்பும் ராணுவ எதிர்ப்பும் தேவை என சொன்ன சில இடதுசாரி குழுக்கள் மற்றும் மற்ற போராளி அமைப்புகள் - இலங்கை ராணுவத்தை விட புலிகளின் மீதான விமர்சனத்தை கொண்டிருந்தன ஆனால் தற்போது புலிகள் இல்லை என்கிற நிலமை இருப்பதால் .<br /><br />அங்கே இடது சாரி அமைப்புகளை கட்டும் வேலையை செய்யலாமே - அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா ? thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76584850183168142015-07-13T10:48:43.864+02:002015-07-13T10:48:43.864+02:00//வலதுசாரி சிந்தனைதான் தற்போதைய முன்னாள் புலி போரா...//வலதுசாரி சிந்தனைதான் தற்போதைய முன்னாள் புலி போராளிகளுக்கும் இருக்கிறது .<br />முன்பு எப்போதோ இடது சாரி சிந்தனை கொண்ட புலிகள் இருந்தார்கள் என்பது தற்போதைய நிலமைக்கு பொருத்தி பார்க்க முடியுமா?//<br /><br />நான் இங்கே தனித் தனியான புலி உறுப்பினர்களைப் பற்றிப் பேசுகிறேன். தனிப்பட்ட முறையில் சிலரிடம் இடதுசாரிக் கருத்துக்கள் இருந்தன. அது முன்பு எப்போதோ அல்ல. எல்லாக் காலங்களிலும் இருந்தது. ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் மத்தியில் வலதுசாரிக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணத்தை ஏற்கனவே கூறி விட்டேன். மேலாதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண சமூகத்தின் மனநிலை வலதுசாரித் தனமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. இரண்டாவது காரணம்: அன்றைய புலிகளின் அரசியல் கொள்கை விளக்கங்களை எழுதியவர்களின் வலதுசாரித் தன்மை. ஈழமுரசு போன்ற புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகைகளில் வலதுசாரிக் கருத்துக்கள் தான் இருந்தன. இருப்பினும், ஒரு சில இடதுசாரிப் புத்திஜீவிகளின் கருத்துக்கள் சிறு சஞ்சிகைகளில் வந்து கொண்டிருந்தன. வன்னி மாநிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இருந்த நிலைமையை கருப்பு-வெள்ளையாக பார்க்க முடியாது. புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் போன்ற தமிழக சஞ்சிகைகள் கூட அங்கே கிடைத்தன. <br /><br />//மேலும் நீங்கள் சொல்வதுபோல முதலாளி வர்க்கம் புலிகளுக்கு உதவி செய்ததுபோல செய்து பின்பு ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்தது என்பது இந்த போராளிகள் புரிந்து கொண்டார்களா ? அவர்களது கருத்துக்கள் எதாவது தளத்தில் வெளி வந்து இருக்கிறதா??//<br />சாதாரண பாமர மக்களைப் போன்று தான், போராளிகளும் நடைமுறை சார்ந்த அரசியல் தான் பேசுவார்கள். தாங்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப் பட்டோம் என்பதை பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆயினும், ஊடகங்கள் யாவும் இதே முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள படியால் அவர்களது அனுபவக் கதைகள் வெளிவராமல் தடுக்கப் பட்டன. இணையத் தளங்கள் நடத்துவோரும், இணையத்தில் எழுதுவோரும் கூட மத்தியதர வர்க்க அரசியல் ஆர்வலர்கள் தான். அவர்களும் தமது வர்க்க நலன் சார்ந்து சிந்திப்பதால், அவற்றைப் பற்றிப் பேசவில்லை. வறுமையில் வாடும் முன்னாள் போராளிகளுக்கு இணைய வசதி கிடைப்பதில்லை. இருந்தாலும் அதைப் பயன்படுத்த தெரியாதவர்களாக உள்ளனர். <br /><br />//அப்படி இல்லாமல் - ஜனநாயக புலிகளும் தமிழர் ஆதரவு சிங்கள விரோத வர்க்கமற்ற அரசியல் நடத்துவார்கள் எனில் வேஸ்டுதான்.//<br />அவர்கள் அரசால் புனர்வாழ்வு அளிக்கப் பட்டவர்கள். அதன் அர்த்தம் இராணுவம் பச்சைக்கொடி காட்டிய பின்னர் தான் அரசியலில் குதித்தார்கள். அவர்களை புலனாய்வுத்துறை பின்னால் நின்று இயக்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில், இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், TNA உட்பட, புலனாய்வுத்துறையின் கண்காணிப்பின் கீழ் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இராணுவ ஆட்சி நடக்கும் வடக்கு கிழக்கில், அது இன்னும் அதிகமாக உள்ளது. தமிழர் ஆதரவு, சிங்களவர் எதிர்ப்பு அரசியல் செய்வதும், முதலாளித்துவ சிறிலங்கா அரசின் நலன்களை பாதுகாப்பது தான். அப்படி நடந்தால், இதுவும் எமக்கு ஏற்கனவே தெரிந்த, முன்னர் ஜேவிபி சென்ற அதே சீரழிவுப் பாதை தான். <br /><br />//நீங்கள் சொன்னதுபோல இவர்களும் ஜேவிபி மாதிரி நீர்த்துபோவதற்கு வாய்ப்பு இருக்கு//<br />ஆமாம். தீவிரமாக பாராளுமன்ற சாக்கடை அரசியலில் இறங்கினால் அதுவும் சாத்தியமே.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63024793001941592382015-07-13T06:36:54.163+02:002015-07-13T06:36:54.163+02:00//வலதுசாரி சிந்தனை பொதுவாக சமூகத்தின் அனைத்து மட்ட...//வலதுசாரி சிந்தனை பொதுவாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காணப்படும். புலிப் போராளிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. இருப்பினும், இடதுசாரி சிந்தனை கொண்ட புலிப் போராளிகளும் இருந்தார்கள். புலிகள் போரிட்டுக் கொண்டிருந்த காலத்திலும் இருந்தார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமைக்கு காரணம், அன்றைய நாட்டு நிலைமையும், உலக நிலைமையும் வலதுசாரி சார்பானதாக இருந்தது. //<br /><br />வலதுசாரி சிந்தனைதான் தற்போதைய முன்னாள் புலி போராளிகளுக்கும் இருக்கிறது .<br />முன்பு எப்போதோ இடது சாரி சிந்தனை கொண்ட புலிகள் இருந்தார்கள் என்பது தற்போதைய நிலமைக்கு பொருத்தி பார்க்க முடியுமா?<br /><br />மேலும் நீங்கள் சொல்வதுபோல முதலாளி வர்க்கம் புலிகளுக்கு உதவி செய்ததுபோல செய்து பின்பு ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்தது என்பது இந்த போராளிகள் புரிந்து கொண்டார்களா ? அவர்களது கருத்துக்கள் எதாவது தளத்தில் வெளி வந்து இருக்கிறதா??<br /><br />அப்படி இல்லாமல் - ஜனநாயக புலிகளும் தமிழர் ஆதரவு சிங்கள விரோத வர்க்கமற்ற அரசியல் நடத்துவார்கள் எனில் வேஸ்டுதான்.<br /><br />நீங்கள் சொன்னதுபோல இவர்களும் ஜேவிபி மாதிரி நீர்த்துபோவதற்கு வாய்ப்பு இருக்குthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-71129286955903421832015-07-11T17:52:43.357+02:002015-07-11T17:52:43.357+02:00//முன்னாள் புலி போராளிகளுக்கு பாட்டாளிவர்க்கம்தான்...//முன்னாள் புலி போராளிகளுக்கு பாட்டாளிவர்க்கம்தான் ஆனால் அவர்களுக்கு வலது சாரி சிந்தனைதானே இருக்கிறது காம்ரேட் இல்லையென்றால் தமிழ் கூட்டமைப்போடு ஏன் சேரவேண்டும்.//<br />வலதுசாரி சிந்தனை பொதுவாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காணப்படும். புலிப் போராளிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. இருப்பினும், இடதுசாரி சிந்தனை கொண்ட புலிப் போராளிகளும் இருந்தார்கள். புலிகள் போரிட்டுக் கொண்டிருந்த காலத்திலும் இருந்தார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமைக்கு காரணம், அன்றைய நாட்டு நிலைமையும், உலக நிலைமையும் வலதுசாரி சார்பானதாக இருந்தது. <br /><br />உதாரணத்திற்கு ஒன்றைக் கூறலாம். புலிகளின் போராட்டம் நடந்த காலத்தில் தான், வெளிநாடுகளுக்கு ஒடுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. சாதாரண குடம்பங்களை சேர்ந்த பலர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று, தமது குடும்பத்தின் பொருளாதார நிலைமயை உயர்த்தி விட்டனர். இது சமூகத்தில் வலதுசாரி சிந்தனை பரவுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. மேலும் புலிகள் இயக்கத்தினுள், வெளிநாட்டில் இருந்து வரும் உதவிகள் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணம் நின்று விட்டால் என்ன நடக்கும்? என்ற கேள்வியை சிலர் எழுப்பி இருந்தாலும், அன்றைய நிலையில் அது கற்பனைக்கும் எட்டாத விடயமாக இருந்தது. <br /><br />முன்னாள் புலிப் போராளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம், அது முன்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்பது தான். தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈபிஆர்எல்ப் ஆகிய அரசியல் கட்சிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அந்த ஒற்றுமை மிக இலகுவாக எட்டப் படவில்லை. <br /><br />ஒரு காலத்தில் அவை யாவும் புலி எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தன. போர் நடந்த காலத்தில், புலிகள் அந்தக் கட்சிகளுக்குள் ஊடுருவி களையெடுத்தார்கள். தமது ஆட்களை அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் போன்று ஊடுருவ வைத்தனர். தம்முடன் இணங்கக் கூடியவர்களை அடையாளம் கண்டு, மிரட்டியோ அல்லது வேறு சலுகைகளை செய்து கொடுத்தோ விலைக்கு வாங்கினார்கள். அவ்வாறு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. இது அன்று புலிகளுக்குள் இருந்த எல்லோருக்கும் தெரியும். போர் முடிந்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் அதே அரசியலை ஜனநாயக வழியில் முன்னெடுக்கிறது என்று பலர் நம்பி இருந்தார்கள். <br /><br />புலிகள் தமது தேவைகளுக்காக எவ்வாறு முதலாளிகளை உருவாக்கினார்கள் என்பது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதே மாதிரித் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வலதுசாரிக் கட்சியையும் உருவாக்கினார்கள். வலதுசாரிகளும், முதலாளிகளும் எப்போதும் தமது வர்க்க நலன் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். தருணம் பார்த்துக் காத்திருந்து காலை வாரி விடுவார்கள். அன்றிருந்த நிலைமையில், இவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள் என்று தான் புலிகள் நம்பினார்கள். புலிகள் தமது ஆயுத பலத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், வலதுசாரிகளும், முதலாளிகளும், புலிகளுக்கு உதவுவதாக நாடகமாடி ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தார்கள். ஏகாதிபத்தியம் என்பது சிறிலங்கா அரசின் பாதுகாவலன் என்பதை அன்று புலிகள் உணர்ந்திருக்கவில்லை. Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49532413705637127802015-07-11T14:28:35.890+02:002015-07-11T14:28:35.890+02:00முன்னாள் புலி போராளிகளுக்கு பாட்டாளிவர்க்கம்தான் ஆ...முன்னாள் புலி போராளிகளுக்கு பாட்டாளிவர்க்கம்தான் ஆனால் அவர்களுக்கு வலது சாரி சிந்தனைதானே இருக்கிறது காம்ரேட் இல்லையென்றால் தமிழ் கூட்டமைப்போடு ஏன் சேரவேண்டும் .<br /><br />thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.com