tag:blogger.com,1999:blog-37061961.post3944227802273516861..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: You Tube தடை செய்த "காஸா படுகொலை வீடியோ"Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-28149239613212359732009-01-06T11:12:00.000+01:002009-01-06T11:12:00.000+01:00உலகின் சில பகுதிகளில் பல பத்தாண்டுகளாக குண்டுகள் வ...உலகின் சில பகுதிகளில் பல பத்தாண்டுகளாக குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும் போது, குண்டு போடுபவனை எதிர்த்து இயல்பாகவே உலகாளாவிய முரன்பாடுகள் எழவே செய்யும். அவை தனக்கான சரியான அரசியல் தளத்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் மறுக்கப்படும் போது இயல்பாகவே அவை பிற்போக்கு அடிப்படைவாதங்களில் போய் சேர்ந்து விடுகின்றன (எ-கா: மத பயங்கரவாதம்). இன்றைக்கு இந்தியாவில் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது எனில் அது அமெரிக்காவின் அல்லக்கையாக இந்தியா மேற்கொண்டுள்ள சர்வதேச நடவடிக்கைகளின் விளைவே ஆகும். அமெரிக்கா உலகம் முழுவதும் ஆண்டாண்டு காலமாய் விதைத்துள்ள பயங்கரவாதங்களை இந்தியாவும் சேர்ந்து இனிமேல் அறுவடை செய்யும் நிலையை அறிவிப்பதாகவே மும்பை பயங்கரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து தப்ப வேண்டுமெனில் உலகம் முழுவதும் நடைபெறும் விடுதலை போராட்டங்களின் ஆதர்ச நண்பனாக இந்தியா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் அல்லக்கையாக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவை ஒரு உண்மையான மத சார்பற்ற குடியரசாக மாற்ற வேண்டும். இந்து பயங்கரவாதாத்தை பாராமுகமாக தவிர்க்கும் போக்கை ஒழித்து, எல்லாவிதமான மத, இன அடிப்படைவாதங்களையும் ஒழிக்க வேண்டும்.<BR/><BR/>குண்டு வெடிப்புகளும், பயங்கரவாதங்களும் உருவாகுவதற்கான தோற்றுவாய்களை ஒழிக்காமல் வெறுமே சட்டங்களின் கோடூரத்தை அதிகப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழித்து விட முடியும் என்பது பித்தலாட்டம். <BR/><BR/>இதோ இங்கு கொடுக்கப்பட்டுள்ள மேற்கு ஆசியா, பால்ஸ்தீனத்தில் சிறிது காலம் முன்பு வரை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எதிர்ப்பை யாசர் அராபத் தலைமையிலான PLO எனப்படும் மதச்சார்பற்ற, புரட்சிகர அமைப்பு போராடி வந்தது. அதனை ஒடுக்குமூறையின் மூலம் அழித்து நாசமாக்கிவிடலாம் என்று நம்பினர் இஸ்ரேல் யூத வெறியர்களும், அமெரிக்க ஏகாதிபத்தியமும். விளைவு இன்று PLO ஒழிக்கப்பட்டது, ஆனால் மத அடிப்படைவாத ஹமாஸின் கைகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் மாட்டிக் கொண்டுள்ளது. <BR/><BR/>இதே போல உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களூம், ஒடுக்குமுறை ஆட்களும் நாசம் செய்த ஜனநாயக சக்திகளை பட்டியலிட்டால் பக்கங்கள் பத்தாது. இன்று அந்த போராட்டங்கள் எல்லாமே சீரழிவான பிற்போக்கு மத, இன அடிப்படைவாதிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு இரு பக்கமும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஆப்பிரிக்கா முதல், ஆப்கானிஸ்தான் வரை பொருந்தும் உண்மை.<BR/><BR/>மிக் சமீபத்திய எடுத்துக்காட்டு: ஈராக். இங்கு அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் முன்பு வரை மத அடிப்படைவாத சக்திகள் வலுவாக இல்லை. இன்றோ அங்கு ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னெடுத்து செல்வது மத அடிபப்டைவாத அமைப்புகளே. <BR/><BR/>உண்மைகள் சொல்லுவது இதுதான். நீங்கள் வேறைதையாவது நம்ப விரும்பினால், அது உங்களது உரிமை. ஆனால் உங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்பவே வரலாற்றில் கடந்த கால, எதிர்கால சம்பவங்கள் நடக்கும் என்று விரும்பி ஏமாறாதீர்கள். அப்படி நடப்பதில்லை. அவலை நினைத்து வெறும் உரலை இடித்தால் உரலும், உலக்கையும், நமது உழைப்பும்தான் வீணாகப் போகும். மாறாக, இந்த உண்மைகளை புரிந்து கொண்டு அதற்கு பொருத்தமான தீர்வுகளை நம்பினால், அதனை நோக்கி நாம் போராடி முன்னேறினால் நமது எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு அமைதியான உலகை விட்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76754829968259522242009-01-05T23:40:00.000+01:002009-01-05T23:40:00.000+01:00இதகூட டோண்டு வரவேற்பார்யாஇதகூட டோண்டு வரவேற்பார்யாAnonymousnoreply@blogger.com