tag:blogger.com,1999:blog-37061961.post3536630346012638488..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-37627735838421839512013-06-15T04:54:51.661+02:002013-06-15T04:54:51.661+02:00ஈழப் போராட்டத்தின் போது முஸ்லிம்கள் ஒதுங்கியிருந்த...ஈழப் போராட்டத்தின் போது முஸ்லிம்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்பது தவறான கருத்து. ஏனெனில், போராட்டம் ஆரம்பித்த கால கட்டங்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர், பல்வேறு காரணங்களின் நிமித்தம், போராட்டக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். முஸ்லிம் ஊர்களில் ஒரு கட்டத்தில் இத்தகைய முஸ்லிம் புலிகளின் ஆதிக்கமும் கட்டுப்பாடும் மிகவும் மேலோங்கிக் காணப்பட்டன. மார்க்க விஷயங்களில் கூட அவர்கள் தலை போட்டார்கள். ஊரில் என்ன பிரச்சினையென்றாலும் தீர்ப்புக் கூறும் நாட்டாமைகளாக இருந்தார்கள். முஸ்லிம் பொதுமக்களும் கூட, பல வழிகளில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளார்கள். தமிழினப் போராளிகள் பலரை, பல தடவைகளில் இந்திய, இலங்கை இராணுவத்தாரிடமிருந்து காப்பாற்றியுள்ளார்கள். தற்போதுள்ள கருணா அம்மானைக் கூட, இலங்கை இராணுவம் துரத்தி வந்த போது, அவருக்குத் தொப்பி அணிவித்து, சால்வை போர்த்திக் காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்களின் பெருமளவான பொருளாதாரம், அவர்களது அனுமதியுடனும் பெரும்பாலும் அனுமதியின்றியும் ஈழப் போராட்டத்திற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. <br />போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்புக் கணிசமாகக் குறைந்தமைக்கு பல காரணங்களுண்டு. போராட்டக் குழுக்கள், தமது ஈழப் போராட்டத்தில் முஸ்லிம்களுக்குப் பங்கெதுவுமில்லை என்ற சிந்தனையின் பிரகாரம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். போராட்டங்களின் போது, முஸ்லிம் இளைஞர்களை முன்னால் தள்ளி விட்டுப் பின்னால் பதுங்கிக் கொண்டனர். முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய கல்விமான்களைக் கடத்திச் சென்று கொன்றொழித்தனர். முஸ்லிம் கிராமங்களில் புகுந்து, அவர்களது பெண்களைக் கற்பழித்து, உயிர்களைக் காவு கொண்டு, வயிற்றிலிருந்த சிசுக்களையும் கீறியெடுத்துக் கோரதாண்டவம் ஆடினர். பள்ளிவாயல் என்று கூடப் பாராது, தனது மனித வேட்டைகளை அரங்கேற்றினர். இத்தனைக்குப் பின்பும் முஸ்லிம் இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்திருப்பதில் எந்த நியாயமுமில்லை. ஈழப் போராட்டத்தில் தமிழ் போராட்டக் குழுக்கள் தம்மை இணைத்துக் கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முஸ்லிம்களுக்கு சில வருடங்களாயின. அவர்கள் விழித்துக் கொண்ட போது, எண்ணற்ற உயிர்களையும் சொத்துகளையும் மானங்களையும் அவர்கள் இழந்திருந்தார்கள். தாம் ஏமாற்றப்பட்டு விட்டதைப் புரிந்து கொண்ட பின், முஸ்லிம் ஊர்களில் அம்மக்கள் செய்த முதலாவது பணி, இத்தகைய போராட்டக் குழுக்களில் இணைந்து செயற்பட்ட அத்தனை முஸ்லிம் இளைஞர்களையும் பொதுமக்களாகத் திரண்டு அழித்தொழித்தமையாகும். <br />எனவே, ஈழப் போராட்டத்தில் முஸ்லிம் ஒதுங்கியிருந்தார்கள் என்ற வாதம் மிகத் தவறானது. உண்மையில், முஸ்லிம்கள், தமிழ் போராட்டக் குழுக்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட பின், ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதே சரியான கூற்றாகும்.Anonymoushttps://www.blogger.com/profile/07432269566573366823noreply@blogger.com