tag:blogger.com,1999:blog-37061961.post2850462262289792086..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப் பாடம் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-19240297077390696632014-11-19T09:11:01.496+01:002014-11-19T09:11:01.496+01:00இந்தக் கட்டுரை தொடர்பாக முகநூலில் பகிரப் பட்ட கருத...இந்தக் கட்டுரை தொடர்பாக முகநூலில் பகிரப் பட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்:<br /><br />Villa Anandaram:<br />//விஜெயவீர தலைமையில் இருந்த ஜெ.வி.பி க்கும் தற்போதய கட்சிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை, பெயரைத்தவிர. கட்சி துவங்கிய காலத்தில் கொழும்பிலிருந்த இடதுசாரி பல்கலைகழக மாணவர்களில் ஒருவனாக அவர்களுடன் எனது நட்பும் எதிர்ப்பும் பல பரிணாமங்கள் கொண்டது. அக்காலத்தில் தொழிளாளர் புரட்ச்சி பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்த கட்சி சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. தொழிற்சங்கம் மூலம் சில வன்முறை போராட்டங்களையும் நடத்தினார்கள். அனால் அவர்களால் அப்போராட்டத்தை தொடர்ந்து நாடு தளாவிய ஆயுத போராட்டமாக வளர்த்தெடுக்க முடியவில்லை. இதை சண்முகதாஸன் தனது அரசியல் நினைவுகளில் "ஒரு தெளிவான புறட்சீகர தொலை நோக்கின்றி தொழிற்சங்க வேலை செய்து வந்துள்ளேன்" என்று ஒப்புக்கொண்டு சுயவிமர்சனம் செய்கிறார். அது மட்டுமல்ல மவோவின் சிந்தனைகளின் அடிப்படையில் நீண்டகால தொழிளளர் போராட்டம் என்ற கோட்பட்டில் சிக்கிக்கொண்டு படித்த வேலையற்ற இளைஞர்களின் பிரச்சனையை கவனியாது விட்டார்கள். <br /><br />இந்த இளைஞார்களின் உணர்வை, தேவையை விஜயவீர பிரதிபலித்தார். பொறுமையிழந்த இளைஞர் கூட்டத்தை அவர் பிரதிநிதிப்படுத்த முனைந்ததால் அவர் கட்சியமைப்பு ஒரு கற்பனாவாத, தனிநபரின் சாகச்செயலில் நம்பிக்கை வைத்த கட்சியாக உருவானது. இவர்கள் ஒரு ஆயுதம் தாங்கிய அர்ப்பணிப்பான குழு அதிகாரத்தை திடீர் புரட்ச்சி மூலம் கைப்பற்றுவதன் பின்னர் வெகுஜனங்களை அதை நோக்கி கவரலாம் என்ரு கருதியது. இந்த தனிநபர்வாதப் போக்கால் இதன் முக்கிய உறுப்பினர்களாக கிராமப்புற ஆசிரியர்கள், ஏழை இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள் சேர்ந்தார்கள். தொழிளரோ, விவசாயிகளோ அதிகம் பங்கு பெறவில்லை. அவர்களது ஆதரவு தங்கள் பிள்ளைகளை ஆதரிக்கும் நிலைக்கு அப்பால் போகவில்லை. மாறாக பௌத்த குருமாரின் ஆதரவு கிராமமட்டத்தில் கிடைத்தது. இதே போன்ற ஒற்றுமைகளை புலி அமைப்பின் சித்தாந்தத்துடனும் வளர்ச்சியுடனும் பார்க்க முடியும். விஜயவீர 5 வகுப்புகளில் அரசியல் கற்பித்து இளைஞர்களை போராட்டத்திற்க்கு தயாராகினார். அதில் முக்கியமாக "இந்திய விஸ்தரிப்பு வாத" எதிர்பு என்னும் தேஸீயவாத கருத்தை முவைத்தார். இது தமிழருக் கெதிரானதாக இல்லாவிட்டாலும் தோட்டத் தொழிளாரை இந்தியாவின் ஏஞெண்டுகளாக கற்பிப்பதன் மூலம் வகுப்புவாதத்தை வளர்த்துவிட்டார்.<br /><br />சீனசார்பு கட்சியுடன் தொடர்பிலிருந்த பல்கலைகழக மாணவனான எனக்கு அப்போது தனிநபர் சாகச்செயலின் கவர்சியாலும் விரைவில் பலன் காணவேணும் என்ற எண்ணத்தாலும் எனது சக மாணவர்களான ஜே.வி.பி இளைஞர்களுடானா தொடர்பாலும் அவர்கள்பால் கவரப்பட்டேன். வேறு பல்கலைகழக மாணவர் போராட்டங்களில் அவர்கள் சிங்களத்தில் பேசுவதை தமிழில் மொழிபெயர்கவும் செய்திருக்கிறேன். அதேசமயம் நடுத்தர வர்க்க சிந்தனையோடிருந்த எங்களை தொழிற்சங்கத்தில் உள்ள தொழிலாளர்களை வர்க்க உணர்வு மிக்க போராளிகளாக மாற்றுவது பற்றி தெளிவான சிந்தனையுடன் விமல்யாப்பாவின் தலைமையில் சண்முகதாஸனின் கட்சிக்குள் உண்டானபிரிவு தெளிவடைய வைத்தது. ஆனால் இதை தொடர்ந்து நடந்த ஜெ.வி.பி யின் அவசர ஆயத்த மற்ற போராட்டத்தால் தொழிளாளரிடையே வேலைசெய்ய முடியாமல் போனது மட்டுமல்லாமல் பல முன்னணி செயல்பாட்டாளர்கள் ஜெ.வி.பி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். ஜெ.வி.பி யின் இந்த செயலால் புரட்சி ஆரம்பத்திலேயே காட்டிக்குடுக்கப்பட்டு அரசையும் புரட்சிக்கு எதிராக வலிமையான ஆயுதம்தாங்கியாக மாற்றிவிட்டது. <br /><br />கருத்து வேறு பட்டாலும் அக்காலத்தில் மிக அருமையான சிங்கள ஜெ.வி,பி நண்பர்கள் வாய்த்தார்கள். இவர்களில் சிலர் கிளர்ச்சியின் போது மரணமானார்கள். சில சிறைபிடிக்கப் பட்டவர்களை பிற்காலத்தில் சந்திக்க நேர்தது. இவர்கள் சிரிமாவோ தங்களுக்கு பொது மன்னிப்பு அளித்ததை நன்றியோடு நினைவுகூர்ந்து அரசாங்க ஆதரவாளராக மாறி விட்டிருந்தார்கள். 5 நாள் மட்டும் அரசியல் கற்பித்தன் விளைவு அது. இவையெல்லாம் 80 களுக்கு முந்திய நினைவுகள்.//Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-16578013626384640872014-11-19T09:09:45.100+01:002014-11-19T09:09:45.100+01:00இந்தக் கட்டுரை தொடர்பாக முகநூலில் பகிரப் பட்ட கருத...இந்தக் கட்டுரை தொடர்பாக முகநூலில் பகிரப் பட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்:<br /><br />Villa Anandaram: <br />//"பிரேமதாச, புலிகள் அமைப்பில் இருந்த வலதுசாரி சக்திகளுடன் தந்திரோபாய கூட்டணி அமைத்துக் கொண்டார். அதன் மூலம், இலகுவாக ஜேவிபி இனை அழிக்க முடிந்தது" - உண்மை. ஜெ.வி.பி யை அழிக்கும் வரை புலிகள் அரசாங்கத்திடம் உறவாடிக் கொண்டிருந்தார்கள்.//<br /><br />Ganeshalingam Kanapathipillai:<br />//ஜே வி பியும் பிரேமதாச அரசும் புலிகளும் இந்தியஎதிர்ப்புக்கோட்பாட்டில் ஒருபுள்ளியில் இணைந்திருந்தாலும் ஒருவரோடு ஒருவர் குறைந்தபட்ச ஐக்கியம் கூட இருக்கவில்லை. இந்தியப்பொருட்களுக்கு பிரேமதாசவும் தடைவிதித்திருந்தார் அதேவேளை ஜேவிபியும் அதனைச்செய்தது. இந்தியாவிலிருந்து சீனி இறக்குமதிசெய்த சண்முகம் முதலாளியை பிரேமதாசவின் புலனாய்வு அமைப்பு கொன்றது. இதில் புலிகளுக்கும் பங்குண்டு. இலங்கை இராணுவத்தின் குடும்பங்களை பிரேமதாச புலிகளின் உதவியோடு கொன்றுவிட்டு ஜேவிபிதான் செய்தது என்று பிரச்சாரம் செய்யப்பட்டன. இதில் பிரேமதாச வெற்றியும் கண்டிருந்தார். பிரேமதாசவிற்கும் பிரபாகரனுக்கும் ஒப்பந்தம் ஒன்று நடந்தது. அது என்னவெனில் தெற்குப்பகுதியான கொழும்பைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஈழவிடுதலையின் மாற்று அமைப்புக்கள் மறைந்து வாழ்ந்தபோது அவர்களைக்கொல்வதற்கு அரசு உதவி செய்யவேண்டும் எனப்புலிகளும் தெற்குப்பயங்கரவாதிகளை(ஜேவிபி) அழிக்க புலிகள் அரசிற்கும் உதவிசெய்ய வேண்டுமென்பதே அந்த ஒப்பந்தமாகும் இதனடிப்படையில் கொல்லப்பட்ட இளைஞர்கள் களனிகங்கையிலே கண்கள் புடுங்கப்பட்டும் சிறுநீரக உறுப்பு எடுக்கப்பட்டும் சடலங்களாகக்காணப்பட்டனர். இந்த இளைஞர்கள் வேறுயாருமல்ல தமிழர்களே! இங்கே எதிரியும் எதிரியும் இணைந்துகொண்டனர் வர்க்கநலன் அடிப்படையில்.//Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.com