tag:blogger.com,1999:blog-37061961.post2812453429989902077..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-37215827097565485522012-09-18T11:35:25.113+02:002012-09-18T11:35:25.113+02:00ராசய்யா இளந்திரையனா ? அவர் போரின் இறுதி நாட்களில் ...ராசய்யா இளந்திரையனா ? அவர் போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டதாகத்தான் படித்த நினைவிருக்கிறது. அடுத்து தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தவர்கள், கருணாநிதி, திருமாவளவன், வைகோ, ராமதாஸ் என அனைவருமேதான். சொல்லப்போனால் புலிகள் ஈழத்தைக் கிட்டத்தட்ட வென்றே விட்டனர். 2009 போரில் பிரபாகரன் அழிக்கப்பட்டதை கடாஃபி, சதாம், ஆசாத் ஆகியோர் எதிர்கொண்ட போரைப்போலத்தான் பார்க்கிறேன். இரண்டரை டஜன் தேசிய இனங்களின் விடுதலையை ஏப்பம் விட்டுத்தான் இந்தியா என்ற இல்லாத தேசியமே உருவாக்கப்பட்டுக் கட்டிக் காக்கப்படுகிறது. இதில் காஷ்மீர் என்ற தனக்கு சொந்தமே இல்லாத பகுதியை பல ஆயிரம் கோடிகள் செலவுகளில் இராணுவத்தை வைத்து கட்டிக் காத்து வருகிறது. இந்தியாவின் காலுக்குக் கீழே ஒரு இயக்கம் விமானப்படையை வைத்துக் கொண்டு இலங்கை ராணுவத்தை நசுக்கி ஒரு ஈழம் உருவாகி விட்டால், அதை இந்தியாவும் அங்கீகரித்தால் தலையில் இருக்கும் காஷ்மீரும், கையில் அணைத்து வைத்திருக்கும் வட கிழக்கு மாநிலங்களும் கொந்தளிக்கும். இது பாரதமாதா தனது முந்தானையில் தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது. தனக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழும் தமிழ்தேசிய மூளைகளுக்கு இது உறைக்காது. இவர்களுக்கு காங்கிரஸ் வேறு, யாழ்குடா முற்றுகையின்போது இராணுவத்தை அனுப்பப்போவதாக மிரட்டிய பாஜக வேறு. இந்திராவும், மகோ ராமச்சந்திரனும் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என பிதற்றித் திரியும். உலகின் தலை சிறந்த கொரில்லா இயக்கம் என்று அறியப்பட்ட புலிகள் தம்மை அழிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும், காலம் இருந்தும் கடைசி வரை கொரில்லாப் போர் நடத்தாது, தந்திரோபாயப் பின்வாங்கல் என்றும், தற்காப்புத் தாக்குதல் என்றும் வேண்டுமென்றே எதிரிகளுக்குத் தோதாக போரை நடத்தினார்கள். தேர்தலில் காங்கிரஸ் தோற்று பாஜக வென்றால், சிங்கள ராணுவம் பீரங்கிகளை ரிவர்ஸ் கியர் போட்டு திரும்பிப் போயிரும் என்று வைக்கோ சொன்னதை நம்பியும், இத்தனை மில்லியன் செலவு செய்து போரை நடத்தி தோற்கடித்த பின்பும், தமது உயிருக்கு உத்தரவாதம் இருக்கும் என்று சரணடைந்த புலிகளின் ராஜதந்திரமும் புல்லரிக்கிறது. அவர்கள் கொரில்லாப் போர் நடத்தாதது ஏனென்பது, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று திருவாய் மலர்பவர்களுக்கு மட்டுமே தெரியும். நெடுமாறன் என்பவரையும் இதில் சேர்க்கலாம். சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.com