tag:blogger.com,1999:blog-37061961.post1832488172686826349..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: புதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி! Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-60373927781614056132013-03-16T20:34:27.250+01:002013-03-16T20:34:27.250+01:00நன்றி...நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-86527046857696634022013-03-16T17:31:47.598+01:002013-03-16T17:31:47.598+01:00நன்றி...நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3176333758313160802013-03-15T22:25:24.382+01:002013-03-15T22:25:24.382+01:00//இதுவரை கருப்பினத்தவர் யாராவது போப்பாண்டவராக வந்த...//இதுவரை கருப்பினத்தவர் யாராவது போப்பாண்டவராக வந்திருக்கிறார்களா ஐயா?//<br /><br />இல்லை. ஆனால், அதற்கு தகுதியான ஒருவர் இருக்கிறார். நான் முன்பு எழுதிய பதிவொன்றை பாருங்கள். <br />---------------<br />போப்பாண்டவர் பெனெடிக் பதவியை விட்டு விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதனால், கார்டினல்கள் என்ற வத்திக்கான் அரசாங்கத்தின் மந்திரிகள் ஒன்று சேர்ந்து, புதியதொரு போப்பாண்டவரை தம் மத்தியில் இருந்து தெரிவு செய்யவுள்ளனர். வத்திகான், அகில உலக கத்தோலிக்க பேரரசாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், இது வரை காலமும் இத்தாலி நாட்டவர்கள் மட்டுமே பாப்பரசராக தெரிவு செய்யப் பட்டனர். அண்மைக் காலமாக, மரபுக்கு மாறாக, ஒரு போலந்துக்காரரும், ஜெர்மன்காரரும் தெரிவு செய்யப் பட்டனர். ஆனால், அவர்களும் வெள்ளையின ஐரோப்பியர்கள் தான். இம்முறை ஒரு கறுப்பு போப்பாண்டவர் தெரிவு செய்யப் படுவாரா? அதன் மூலம், வெள்ளையரல்லாத கத்தோலிக்க மக்களையும் வத்திக்கான் பிரதிநிதித்துவப் படுத்துவதாக காட்ட முடியும். ஏற்கனவே ஒரு கறுப்பின கார்டினல், வத்திக்கான் அரசவையில் வீற்றிருக்கின்றார். அவர் பெயர் Peter Turkson. 63 வயது. Ghana நாட்டை சேர்ந்தவர். இவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில் இருந்து, ஒரு கடும்போக்காளர் என்று தெரிகின்றது. ஆகவே, வத்திக்கானின் மத அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஏற்ற நபர். இம் முறையாவது, வத்திக்கான் ஒரு கறுப்பின பாப்பரசரை தெரிவு செய்து, ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.<br />Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56509978442356014452013-03-15T18:24:01.565+01:002013-03-15T18:24:01.565+01:00இதுவரை கருப்பினத்தவர் யாராவது போப்பாண்டவராக வந்திர...இதுவரை கருப்பினத்தவர் யாராவது போப்பாண்டவராக வந்திருக்கிறார்களா ஐயா?Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75581964953327775952013-03-14T20:09:57.000+01:002013-03-14T20:09:57.000+01:00போர்க்குற்றம் என்பதை வரையறை செய்வதற்கு, அந்த நாட்ட...போர்க்குற்றம் என்பதை வரையறை செய்வதற்கு, அந்த நாட்டில் ஒரு யுத்தம் நடைபெற்றிருக்க வேண்டும், அல்லது ஆயுதமேந்திய குழுக்கள் மோதியிருக்க வேண்டும் என்றெல்லாம் அர்த்தம் உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. சட்டம் தெரிந்த யாராவது தெளிவு படுத்தினால் நல்லது. ஆர்ஜென்தீனாவின் இராணுவ ஆட்சியில் நடத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், நெதர்லாந்து ஊடகங்களினால் கவனமெடுத்து பிரசுரிக்கப் பட்டு வந்துள்ளன. அதற்கு காரணம், அடுத்த மாதம் நெதர்லாந்து அரசராக முடிசூட்டிக் கொள்ள இருக்கும் வில்லெம் அலெக்சாண்டரின் (பெண் கொடுத்த) மாமன் சொரெகியெத்தா, இராணுவ சர்வாதிகார ஆட்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். அவருக்கெதிராக போர்க்குற்ற வழக்கு போடுவதற்காக இங்கே நிறையப்பேர் காத்திருப்பதால், அவர் நெதர்லாந்து பக்கம் தலைகாட்டுவதில்லை. (இரகசியமாக வந்து சென்றதாக சொல்கிறார்கள்.) அடுத்த மாதம் முடிசூட்டு விழாவுக்கும் அவர் வருவாரா என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலும் விவாதம் நடந்து வருகின்றது. மேலும், ஏற்கனவே நெதர்லாந்து நாட்டில் வசிக்கும், இன்னொரு ஆர்ஜெந்தீன போர்க்குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு போலிஸ் ஆய்வாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே, ஆர்ஜென்தீனாவிலும், ஸ்பெயினிலும், "ஆர்ஜெந்தீன போர்க்குற்ற வழக்குகள்" நடந்து வருகின்றன. அதைப் பின்பற்றி, நெதர்லாந்திலும் போர்க்குற்ற வழக்கு தொடுக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களை பிரசுரித்த செய்தித்தாள்களில் "Oorlogsmisdadiger " (போர்க்குற்றவாளி) என்று தான் எழுதப் பட்டுள்ளது. அந்த செய்தியின் இணைப்பை இங்கே தருகிறேன்.<br />//De Nationale Recherche is sinds het voorjaar van 2006 bezig met een vooronderzoek naar een in Nederland wonende Argentijn die er van wordt verdacht oorlogsmisdaden te hebben gepleegd gedurende het militaire bewind tussen 1976 en 1983.// http://www.vn.nl/Standaard-Media-Pagina/Onderzoek-naar-Argentijnse-oorlogsmisdadiger-ligt-stil.htmKalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.com