Thursday, April 30, 2015

மயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்


"மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்" என்பதை, மீண்டும் பல "தமிழர்கள்" நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர்.

பல தசாப்த காலமாகவே மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வரும் மனிதநேய ஆர்வலர்கள் இந்தோனேசிய அரசை விமர்சிப்பது நியாயமானது. ஆனால், அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரையில் போதைவஸ்து கடத்தும் கிரிமினல்களுக்கு மரண தண்டனை வழங்குவதை, நேற்று வரையில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த பலர், இன்று திடீர் மனிதாபிமானவாதிகளாக மாறியுள்ளனர்.

ஒரு தமிழரும், சீனரும், தனது நாட்டு பிரஜைகள் என்பதால், மரண தண்டனையை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு பாடுபட்டுள்ளது. தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட படியால், தூதுவரை திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள இராஜதந்திர பிரச்சினைகளையும் மறைக்க முடியாது.

ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் இதே போதைவஸ்து கடத்தல் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அப்போது இந்தளவு கண்டனங்களும், ஊடக கவனமும் அவற்றிக்கு கிடைக்கவில்லை.

மரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசியவாதிகள் உதிர்க்கும் கருத்துக்கள் அரைவேக்காட்டுத் தனமானவை. "தமிழனுக்கு என்றொரு நாடு இருந்திருந்தால் பிரச்சினை இந்தளவு தூரம் வந்திருக்காது" என்று காமெடி பண்ணுகின்றனர்.

உலகில் மிகவும் செல்வாக்குள்ள, ஒரு பணக்கார மேற்கத்திய நாடான அவுஸ்திரேலியா, தனது பிரஜைகளை காப்பாற்ற முயற்சித்தும், மரண தண்டனையை தடுக்க முடியவில்லை. இந்த இலட்சணத்தில், தமிழ் தேசியவாதிகள் தனி நாடு கண்டிருந்தால் கிழித்திருப்பார்கள்.

முன்பு ஈழப்போர் நடந்த காலங்களில், வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், அல்லது கெரில்லாப் போர் நடத்திய பிரதேசங்களில், பல சமூகவிரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். தந்திக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில், அவர்கள் செய்த குற்றமும் எழுதப் பட்டிருக்கும். சில பத்துப் பேருக்காவது, போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்திருப்பார்கள்.

அப்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக, "தமிழர்கள்" யாரும் இரக்கப் படவில்லை. இன மான உணர்வு பீறிட்டுக் கிளம்பவில்லை. இத்தனைக்கும் கொல்லப் பட்டவர்களும் தமிழர்கள் தான். ஆனால், "வித்தியாசமான" தமிழர்கள். அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வறுமையில் வாழும், தாழ்த்தப் பட்ட சாதியினராக இருந்திருப்பார்கள். அதனால், அன்று அவர்களுக்காக யாரும் அழவில்லை.

ஓர் அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன், தனது வயிற்றுப் பசியை, அல்லது குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக போதைவஸ்து கடத்தியதாக தெரியவில்லை. அப்படி அவரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அவுஸ்திரேலியா "ஒரு வறிய நாடு, வேலையில்லாப் பிரச்சினை அதிகம், அதனால் மயூரன் வேறு வழியின்றி போதைவஸ்து கடத்தினான்..." என்று திடீர் மனிதநேயவாதிகள் யாரும் சொல்லவும் மாட்டார்கள். இங்கே பல "தமிழர்களுக்கு" மனிதாபிமான உணர்வு இனம் பார்த்து மட்டும் வருவதில்லை. அது வர்க்கம் பார்த்தும் வரும்.


மயூரன் சுகுமாரனின் மரண தண்டனையை கடுமையான வார்த்தைகளில் கண்டித்த, அவுஸ்திரேலிய அரசையும், ஊடகங்களையும் பற்றி, இன்று வரையில் பல தமிழர்கள் சிலாகித்துப் பேசியுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு, மற்றும் ஊடகங்களின் இரட்டை வேடம் பற்றி எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? 

இதே அவுஸ்திரேலிய அரசு தான், தமிழ் அகதிகளை நாட்டுக்குள் நுளைய விடாமல், தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது. அப்போது எங்கே போனது மனிதாபிமானம்? அவுஸ்திரேலிய விபச்சார ஊடகங்கள் என்ன குறைந்தவையா? 

போதைப்பொருள் கடத்தி பிடிபட்ட, மயூரனின், ஷான் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் மரண தண்டனை காரணமாக, இந்தோனேசியா அரசின் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தலையங்கம் தீட்டிய Daily Telegraph பத்திரிகை, சில வருடங்களுக்கு முன்பு என்ன எழுதியது? 

அதே Daily Telegraph பத்திரிகை, மரண தண்டனைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது. ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொண்ட போதைப்பொருளை கடத்தியவர்களின் உயிரைப் பறிப்பதற்கு கருணை காட்டக் கூடாது என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இவங்களை இன்னுமா இந்த உலகம் நம்புது? 

அவுஸ்திரேலிய ஊடகங்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் கட்டுரை: A tale of two headlines


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, April 29, 2015

அமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகை


இது தாண்டா அமெரிக்க பொலிஸ்! பால்டிமோர் நகரில், போலீஸ்காரர்களே முதலில் மக்கள் மேல் கல்லெறிந்து தாக்கினார்கள். பதிலுக்கு மக்களும் கற்களால் தாக்கத்தொடங்கியதும், புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.
(கீழேயுள்ள வீடியோவை பார்க்கவும்)


இது தான் அமெரிக்கா! இந்தப் படங்களை உங்களுக்கு எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை! அமெரிக்காவில் பால்டிமோர் நகரில், மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுடப்பட்டு மரணமடைந்தான். கொடுமை கண்டு பொங்கி எழுந்த ஆயிரக்கணக்கான மக்கள், இனவெறிப் பொலிஸின் அட்டூழியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளது. பொலிஸ் வாகனங்கள் தாக்கப் பட்டன.

25 வயதான Freddie Gray என்ற கருப்பின இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிசார், அவனை சுட்டுக் காயப் படுத்தி இருந்தனர். சம்பவம் நடந்த அன்று முதலுதவி சிகிச்சை அளிக்காத படியால், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சில நாட்களின் பின்னர் மரணமடைந்தான். முதலுதவி சிகிச்சை அளிக்காதது தங்களது தவறு தான் என்று, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

August 9, 2014 பெர்குசன் நகரில் நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாகவே, பால்டிமோர் கலவரமும் நடந்துள்ளது. இரண்டிலும் இன அடிப்படையிலான பாகுபாடு மாத்திரமல்லாது, வர்க்க வேறுபாடும் கலவரங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. பெர்குசன் கலவரம் நடந்த போது, நான் எழுதிய குறிப்புக்கள் இவை. அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் எழுச்சிக்கான காரணங்களை புரிந்து கொள்ள அவை உதவும்.


பெர்குசன் நகர கலவரம்

அமெரிக்காவில் பெர்குசன் நகரில், காவல்துறையினர் ஒரு கருப்பினச் சிறுவனை சுட்டுக் கொன்றதன் பின்னர் ஏற்பட்ட மக்கள் எழுச்சி ஒரு புரட்சிக்கான ஆரம்பம் ஆகும். பெர்குசன் நகரில் வடக்குப் பகுதியில் கருப்பின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் ஏழைகள் அதிகம்.

தெற்குப் பகுதியில் வெள்ளையின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் பணக்காரர்கள் அதிகம். ஏழைகளின் பகுதியில் மருத்துவ வசதி இல்லை, கல்வி கற்பதற்கு பல மைல் தூரம் செல்ல வேண்டும். பணக்கார குடியிருப்புகளில் எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளன. கருப்பு - வெள்ளை எனும் இனப் பாகுபாடு மட்டுமல்லாது, வர்க்க வேறுபாடும் அண்மைய கலவரங்களுக்கு வித்திட்டுள்ளன.

பெர்குசன் நகரில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கலவரத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் குற்றஞ் சாட்டியது. அதற்குக் காரணம், அங்கு நடந்த சம்பவங்களை, வெறும் கலவரம் என்று சொல்ல முடியாது. எகிப்தில், துனீசியாவில் நடந்தது போன்ற மக்கள் எழுச்சி. இரவு நேரங்களில், பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. அதே இடங்கள், பகல் நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கும்.

எகிப்து, துனீசியாவில் நடந்ததைப் போன்று, சமூக வலையமைப்புகள் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டன. எல்லோரும் கைத் தொலைபேசி கொண்டு திரிந்து, படம் எடுத்து தகவல்களை இணையம் ஊடாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். காப்பரேட் ஊடகங்கள், அங்கு நடந்த கடைகளை சூறையாடிய சம்பவங்களை பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி பற்றி அவை எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தன.

பெர்குசன் நகரின் மத்தியில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்வலர்கள் ஒன்று கூடுவார்கள். எந்த வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பார்கள். போராட்டத் தலைவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல. சாமானியர்களின் பிரதிநிதிகள். மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப் பட்ட குழுவினர் முடிவுகளை எடுக்கின்றது.

பெர்குசன் நகரில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கலாம். கிறிஸ்தவ மதகுருக்களும், தீவிர இடதுசாரிகளும் தோளோடு தோள் சேர்ந்து, போராடும் மக்களை வழிநடத்தினார்கள். சில திபெத்திய பௌத்த பிக்குகளும் சேர்ந்து கொண்டார்கள். புதிதாக நிறுவன மயப் பட்ட கருப்பின மக்களின் விடுதலைக்கான கருஞ் சிறுத்தைகள் இயக்க உறுப்பினர்கள் முன்னரங்கில் நின்றார்கள்.

பெர்குசன் கருப்பின சமூகத்தை சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் ஒருவர், பணம் நிறைய வந்ததும், வெள்ளையின மக்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று வசித்து வந்தார். அவர் தனது சமூக மக்களை கண்டு பேசுவதற்கு வந்த நேரம், மக்கள் அவரை கூச்சலிட்டு விரட்டி விட்டார்கள்.

கலவரத்திற்கு முன்பு, கருப்பின மக்களின் பிரதேசத்திற்கு சாதாரண வெள்ளையின மக்கள் செல்ல மாட்டார்கள். "குற்றச் செயல்கள் அதிகமாக நடப்பதாக" ஒரு காரணம் சொல்வார்கள். அண்மைய மக்கள் எழுச்சியில் நிறைய வெள்ளையின ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகளுக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பெர்குசன் நகரில் குவிந்திருந்த கலவரத் தடுப்பு பொலிஸ் படையினர், ஓர் இராணுவம் போன்று நடந்து கொண்டனர். அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. எகிப்தில் நடந்தது போல, அமெரிக்கப் பொலிஸ் படையும் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது.

பெர்குசனில் பொலிசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, பல உலக நாடுகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சமூக வலையமைப்புகள் மூலமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக சில பாலஸ்தீன ஆர்வலர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

பெர்குசனில் நடந்தது ஒரு முழுமையான அமெரிக்கப் புரட்சி அல்ல. ஆனால், அதற்கான முன்னோட்டம். வருங்காலப் புரட்சியாளர்களின் பயிற்சிக் களம்.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, April 28, 2015

சோஷலிசத்தால் மட்டுமே எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் தம்பி!




கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. 
தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.


"உன்னால் முடியும் தம்பி!"

 ஒரு நாட்டில், சோஷலிசத்தால் மட்டுமே, எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் என்பது, மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சோஷலிச கொள்கைகளை பின்பற்றி வரும் ஏவோ மொராலேஸ்சின் பொலிவியாவில் எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டு விட்டதாக UNESCO அறிவித்துள்ளது. UNESCO அளவுகோலின் படி, ஒரு நாட்டில் எழுத்தறிவற்றவர்கள் விகிதாசாரம் 4% க்கும் கீழே இருக்க வேண்டும்.

எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காக கியூபா தயாரித்த விசேட கல்வித் திட்டமான "Yo, sí puedo" (என்னால் முடியும்) இதற்கு பெரிதும் உதவியுள்ளதாக UNESCO புகழாரம் சூட்டியுள்ளது. கியூபா ஒவ்வொரு வருடமும் கல்விக்க்காக பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதியை ஒதுக்கி வருவது தெரிந்ததே.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், சோஷலிச கொள்கையை பின்பற்றும், கியூபா, வெனிசுவேலாவை, பொலிவியா ஆகிய நாடுகளில் மட்டுமே எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

சோஷலிசத்தை ஆதரிக்கும் ஆட்சியாளர்களைக் கொண்ட எக்குவடோர், உருகுவே, ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளிலும் கியூபாவின் "Yo, sí puedo" கல்வித்திட்டம் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. வெகுவிரைவில் அந்த நாடுகளும் UNESCO பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Sunday, April 26, 2015

25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்க தினம்


ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில், 1974 ம் ஆண்டு, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி நடந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

அதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. பல தசாப்த காலமாக, பாசிஸ சர்வாதிகாரி சலசாரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்ற விடயமாவது தெரியுமா?

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் புரட்சிக்குப் பின்னர், சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, போர்த்துக்கல்லில் ஜனநாயக பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டன என்ற உண்மை தெரியுமா? இன்றைக்கும் மறைக்கப் பட்டு வரும் ஐரோப்பாவின் வரலாற்று உண்மைகளில் செவ்வரத்தம் பூ புரட்சியும் ஒன்று.

போர்த்துக்கல் இராணுவத்திற்குள் இருந்த கம்யூனிச, சோஷலிச அல்லது ஜனநாயக ஆதரவு சக்திகள், இரகசியமான சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். வெறும் நான்கு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டன. சலசாரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

படையினர் தமது துப்பாக்கி முனைகளில், செவ்வரத்தம்பூ செருகி வைத்திருந்த படியால், அது இன்றைக்கும் செவ்வரத்தம் பூ புரட்சி என்றே அழைக்கப் படுகின்றது. அதற்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்தது.

புரட்சிக்குப் பின்னர், அரசமைப்பு, பொருளாதாரம் தொடர்பாக, வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கியிருந்த சில இடங்களில் நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

அதே நேரம், போர்த்துக்கல் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக குற்றஞ் சாட்டி, நேட்டோ படையெடுக்கப் போவதாக மிரட்டியது. அட்லாண்டிக் கடலில் நேட்டோ கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

இறுதியில், 1976 ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து, சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், நேட்டோ அழுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது.


******


25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தில் குறிப்பிடத் தக்க சரித்திர தினம். இன்று அது இத்தாலியின் சுதந்திர தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. முசோலினியின் இருபதாண்டு கால பாசிஸ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இறுதிக்காலத்தில், ஜெர்மன் நாஸிப் படைகள் உதவிக்கு வந்த போதிலும், முசோலினியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இத்தாலியின் வட பகுதி மாகாணங்களை, தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்த கம்யூனிசப் போராளிகள், 25 ஏப்ரல் சுதந்திர தினமாக பிரகடனப் படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்திறங்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள், தென் இத்தாலி பகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

2ம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வத்திக்கானுடன் சேர்ந்து சதி செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போடுவோர், கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்கள். திரும்பவும் தேர்தல் நடத்தினார்கள். அதில் வத்திக்கான் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி வென்றது. அதற்குப் பிறகு இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை தலையெடுக்க விடவில்லை.

மேலும், மேற்குலகின் கடுமையான ஸ்டாலின்/ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தற்போது இருப்பது சீர்திருத்தப்பட்ட, சமூக- ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி.

Saturday, April 25, 2015

கெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா? அல்லது மக்கட்படுகொலையா?

Genocide (கெனோசீடே) என்ற சொற்பதத்தினை தமிழில் இனப்படுகொலை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அது பல தடவைகள் சரியான அர்த்ததுடன் பயன்படுத்தப் படுவதில்லை.

Genos (கெனோஸ்) என்ற கிரேக்க சொல்லுக்கு நிகரான சமஸ்கிருத சொல் "கணம்". அதையொத்த தமிழ்ச் சொல் ஜனம் (மக்கள்) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

Genocide என்பது பெரும்பான்மையான உலகமொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப் பட்டாலும், தமிழ் போன்று பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து பாவிக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் Völkermord. டச்சு மொழியில் Volkerenmoord, சுவீடிஷ் மொழியில் Folkmord. டேனிஷ் மொழியில் Folkemord / Folkedrabet.

ஜெர்மன் சொல்லான völk ஆங்கிலத்தில் folk, அதாவது மக்கள் என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது. சிங்கள மொழியில் கூட, "மக்கள் அழிப்பு" (ජන සංහාරය - ஜன சங்காரம்) என்று தான் மொழிபெயர்த்துள்ளனர்.

ஆகவே, இதனை தமிழில் "மக்கட்படுகொலை" என்று மொழிபெயர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

//இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.

இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும். இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.//
அது தொடர்பான என்னுடைய கருத்துக்கள்:
ரஃபேல் லெம்கின் பெருந்திரளான மக்கள் படுகொலையை குறிப்பதற்கு தான் அதைப் பயன்படுத்தினார். ஏற்கனவே யூதப் படுகொலையானது, pogrom (ரஷ்யா), holocaust (ஜெர்மனி) போன்ற ஹீபுரு மொழிச் சொற்களால் அழைக்கப் பட்டு வந்துள்ளன. அதை யூதர்கள் தமக்குரிய சொல்லாக மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

ஜேர்மனியர்களும், யூதர்களும் தனிதனி இனமாக இருக்கவில்லை. ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் தான். சியோனிஸ்டுகளும், நாஸிகளும் யூதர்களை தனியான இனமாகக் உருவகித்துக் காட்ட முனைந்தனர். ஆயினும், இன்றைய நாகரிக உலகில் அந்தக் கருத்துக்கள் இனவாதமாக கருதப் படுகின்றன.
பொஸ்னியாவில் சேர்பியர்களினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களும் தனியான இனம் அல்ல. நிறத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், செர்பியர்களுக்கு நெருக்கமானவர்கள். மதம் மட்டுமே வேறு வேறு.

மேலும், இந்தோனேசியாவில், குவாத்தமாலாவில், அரசியல் கொள்கை வேறுபாடு காரணமாக நடந்த genocide பற்றி பெரும்பாலான தமிழர்கள் பேசுவதில்லை. கம்போடியாவில் நடந்த genocide பற்றி விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் அமைக்கப் பட்டது. ஆனால், அது கூட கம்போடியர்களை கொலை செய்த கம்போடியர்களுக்கு எதிரான நீதிமன்றம் தான். ஒரே மொழி பேசும், ஓரின மக்களுக்கு இடையில் நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.

"ஒரே மொழி பேசும் மக்களுக்குள் படுகொலை நடந்திருந்தால், அது இனப்படுகொலை ஆகாது" என்று சில தமிழ் அறிவுஜீவிகள் வாதாடுகிறார்கள். அது தவறு. யூதர்களும், ஜெர்மனியர்களும் ஒரே மொழி பேசினார்கள். சேர்பியர்களும், பொஸ்னியர்களும் ஒரே மொழி பேசினார்கள். ஆனால், அவை எல்லாம் genocide என்று தான் அழைக்கப்பட்டன.

Genocide என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கலைச்சொல். genos என்ற கிரேக்கச் சொல்லையும், cide என்ற லத்தீன் சொல்லையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. அப்போது எந்த ஐரோப்பிய மொழியிலும் அப்படி ஒரு சொல் இருக்கவில்லை. genocide என்பது பெருந்தொகையான அளவில் மக்களை படுகொலை செய்வதைக் குறிக்கும். ஐ.நா. வில் அதற்கான வரைவிலக்கணம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்த பொழுது கூட பல நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

குறிப்பாக தமிழில் " இனப்படுகொலை" என்று சொல்லும் அர்த்தத்தில்பயன்படுத்துவதை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே காலனிகளில் இருந்த பூர்வகுடி இனங்களை அழித்தொழித்து விட்டிருந்தன. 

அதனால், தமிழில் புரிந்து கொள்ளப்படும் "இனப்படுகொலை" என்ற அர்த்தத்தில், மேற்குலகில் பயன்படுத்தப் படுவதில்லை. Genocide என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்குள் இனம் என்ற அர்த்தம் வரக்கூடாது என்று அமெரிக்கர்கள் பிடிவாதமாக மறுத்து வந்தனர். ஏனென்றால் செவ்விந்தியர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படும் என்ற அச்சம் காரணம்.

நாகரிக உலகின் போக்கிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் திருத்தங்கள் கொண்டு வருவது புதுமை அல்ல. வன்புணர்ச்சி, பாலியல் தொழிலாளி, திருநங்கையர், மாற்றுத் திறனாளி போன்ற பல புதிய சொற்கள், ஏற்கனவே இருந்த விரும்பத்தகாத அர்த்தம் தரும் சொற்களுக்கு மாற்றாக வந்துள்ளன. அதே மாதிரி, இனப்படுகொலை என்பதை மக்கட்படுகொலை என்று திருத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!
http://kalaiy.blogspot.nl/2014/04/blog-post.html
மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_30.html
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2013/03/blog-post_8.html
அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு
http://kalaiy.blogspot.nl/2013/04/blog-post_17.html
கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள் http://kalaiy.blogspot.nl/2014/06/blog-post_4.html
இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள் http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_13.html 
உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் http://kalaiy.blogspot.nl/2014/03/blog-post_11.html 
ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_21.html 
இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
http://kalaiy.blogspot.nl/2012/08/blog-post_6.html

Friday, April 24, 2015

சம்பளம் கொடுக்காத முதலாளியை பிடித்து கூண்டுக்குள் அடைத்த தொழிலாளர்கள்


இது தான் முதலாளித்துவத்தின் கெட்ட கனவு. உண்மையில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால், முதலாளிகளுக்கு தமது பாதுகாப்பு குறித்து அச்சமேற்படுவது இயல்பு.

2013 ம் ஆண்டு, சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க தொழிலதிபரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், சில நாட்களாக தமது முதலாளியை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப் படாததால், கொதிப்புற்ற தொழிலாளர்கள் கம்பனி நிர்வாகியை பிடித்து அடைத்து வைத்தார்கள். பலர் பணி நீக்கம் செய்யப் படலாம் என்ற அச்சமும், அவர்களை இந்த நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது.

ஒரு கூண்டுக்குள் அடைக்கப் பட்ட விலங்கு போன்ற நிலையில் உள்ள முதலாளிக்கு, படுப்பதற்கு ஒரு படுக்கை மட்டுமே கொடுத்திருந்தார்கள். அணைக்கப் படாத மின்குமிழ் வெளிச்சம், சுற்றியுள்ள தொழிலாளரின் கூச்சல் காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என்று அந்த நிர்வாகி குறைப் பட்டார்.

அவர் தப்பியோட முடியாதவாறு, வெளியே 60 அல்லது 70 தொழிலாளர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆறு நாட்களாக, உடுத்த உடுப்புடன் காலம் கழிக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் அவருக்கு மூன்று வேளை உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்த முதலாளியை விடுவிப்பதற்கு, அமெரிக்க தூதுவராலயம் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டார். 

உலகம் முழுவதும் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கும், இரக்கமற்ற முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும்  அமையும்.


மேலதிக விபரங்களுக்கு:
American boss held hostage by Chinese workers in Beijing - video 

Tuesday, April 21, 2015

சுதந்திரமான கியூபா தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி


கியூபாவில் பொதுத் தேர்தல்கள் நடப்பதே வெளியில் பலருக்குத் தெரியாது. அது சரி, கியூபா ஒரு "சர்வாதிகார நாடு" என்றல்லவா,  மேற்குலக எஜமானர்கள் எமக்குப் போதித்தார்கள்? இந்த லட்சணத்தில் அங்கே தேர்தல் நடப்பது எவனுக்குத் தெரியும்? அதிலும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் போட்டியிடுவதாவது. காதிலே பூச் சுற்றுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். 

நம்பினால் நம்புங்கள், 19 ஏப்ரல் 2015 நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான பொதுத் தேர்தலில், இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள், அமெரிக்காவிலும் பலருக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வந்திருந்தார்கள்.

இடது: சாவியானோ, வலது: லோபெஸ் 
ஹில்டபிராண்டோ சாவியானோ (Hildebrando Chaviano, வயது 65), யூனியல் லோபெஸ் (Yuniel Lopez, வயது 26) ஆகியோரே அந்த இரு எதிக்கட்சி வேட்பாளர்கள் ஆவர். சாவியானோ ஹவானா நகரில் உள்ள Plaza de la Revolución தொகுதியில் போட்டியிட்டார். லோபெஸ் Arroyo Naranjo தொகுதியில் போட்டியிட்டார். கியூபாவில் 168 உள்ளூராட்சி சபைகள் (Asambleas Municipales del Poder Popular) உள்ளன. அவற்றிற்கு மொத்தம் 27.300 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் செயற்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கட்சி சார்பற்ற தனி நபர்களும் போட்டியிடலாம். அவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு மக்கள் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பார்கள்.

வேட்பாளர்கள் யாரும் கூட்டம் கூட்டி பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள், மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அதைத் தவிர வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தனக்கு ஓட்டுப் போடுமாறு கேட்க முடியும். வாக்குரிமை பெற்றுள்ள எட்டு மில்லியன் வாக்காளர்களில், பெரும்பான்மையானோர் தவறாமல் தேர்தல் அன்று தமது வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவார்கள்.

சாவியானோ முன்னொரு காலத்தில், உள்துறை அமைச்சில் வேலை செய்து வந்தார். அரசுக்கு எதிராக விமர்சனம் செய்த படியால் வேலையை விட்டு நீக்கப் பட்டார். அவர் இன்று வரையில், பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளை குறை கூறியும் பேசி வருகிறார். இதனால், அவரைப் பற்றிய துண்டுப் பிரசுரத்தில், "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க தூதரகத்தில் நடந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தன.

சாவியானோ அதனை சாதகமாக எடுத்துக் கொண்டார். அதாவது, காஸ்ட்ரோ அரசின் மேல் வெறுப்புற்று இருக்கும் மக்கள், தனது அமெரிக்க தொடர்பை நன்மையாகக் கருதி ஓட்டுப் போடுவார்கள் என்று நம்பினார்.  லோபெஸ் பற்றிய பிரசுரத்திலும் அதே மாதிரியான வசனங்கள் இருந்துள்ளன. "எதிர்ப்புரட்சியாளர்", "அமெரிக்க நிதி பெற்றுக் கொள்பவர்" என்றெழுதி இருந்தன.

லோபெஸ், தனியாக ஒரு வர்த்தக நிறுவனத்தை (குழந்தைகள் பராமரிப்பு நிலையம்) நடத்தி வருகிறார். அதே நேரம், அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி உள்ளார். அதன் அங்கத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனினும், ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் கியூபாவும் கையெழுத்து இட்டுள்ளதை சுட்டிக் காட்டி, தனது கட்சியின் இருப்பை நியாயப் படுத்தி வருகிறார்.

அண்மையில் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டுள்ள படியால், பல வெளிநாட்டு ஊடகங்களும் தேர்தலை கண்காணிக்க வந்திருந்தன. இரண்டு காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தால், அந்த தகவல் உலகம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து தெரிவிக்கப் பட்டிருக்கும். ஆனால், மேற்கத்திய கண்காணிப்பாளர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

சாவியானோ போட்டியிட்ட தொகுதியில், நான்கு வேட்பாளர்களில் கடைசியாக வந்தார். (138 votos para Chaviano; http://www.14ymedio.com/nacional/votos-Chaviano_0_1764423541.html) லோபெஸ் கொஞ்சம் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருந்தார். ஆயினும், அரசு ஆதரவு வேட்பாளருக்கு அடுத்ததாக இரண்டாம் இடமே கிடைத்தது. தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் போட்டதாக யாரும் குற்றஞ் சாட்டவில்லை. ஏனெனில், தேர்தல் நடந்த இடத்தில் மட்டுமல்ல, வாக்குகள் எண்ணும் இடத்திலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்களது தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக, இரண்டு அரச எதிர்ப்பு வேட்பாளர்களும் அறிவித்துள்ளனர். "வாக்கெடுப்பில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. நேர்மையான வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சாவியானோ தெரிவித்தார்.

லோபெஸ் போட்டியிட்ட Arroyo Naranjo தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் "புரட்சி வாழ்க!", "பிடல் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு அருகிலேயே, லோபெஸ் ஆதரவாளர்களும் "லோபெஸ் வாழ்க!" என்று கோஷம் எழுப்பிய படி குழுவாக சென்றுள்ளனர். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 

"எதற்காக நீங்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடவில்லை?" என்று, அமெரிக்க ஊடகவியலாளர்கள் கியூபர்கள் சிலரை விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் "அந்த வேட்பாளர்கள் பல வருட காலமாகவே உங்களது (அமெரிக்க) அரசிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள்!" என்று கூறினார்கள்.  

மேலதிக தகவல்களுக்கு:
 14ymedio; 
http://www.14ymedio.com/
Two Cuban Opposition Candidates Lose Election Bids;
http://www.voanews.com/content/two-cuban-opposition-candidates-lose-election-bids/2726321.html


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
கியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை
கியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?
கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

Sunday, April 19, 2015

கம்யூனிச விரோதிகளுக்கு பிடிக்காத சோஷலிச நாட்டுக் குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் !


Pat a Mat (இரண்டு அயலவர்கள்): சோஷலிச செக்கோஸ்லாவிக்கியாவில் தயாரிக்கப் பட்ட, சிறுவர்களுக்கான "கம்யூனிச பிரச்சார கார்ட்டூன் படம்"!

(எச்சரிக்கை: வலதுசாரி "அறிவு"ஜீவிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும் இந்த குழந்தைகளுக்கான கார்ட்டூன் படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது!)

முன்னாள் சோஷலிச நாடுகளில், கம்யூனிச சித்தாந்தத்தால் சிறுவர்களை மூளைச்சலவை செய்து வந்தனர் என்ற பொய்யை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு "Pat a Mat" என்ற சிறுவர் கார்ட்டூன் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். 1976 ம் ஆண்டு, செக்கோஸ்லாவிக்கியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் தயாரிக்கப் பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆரம்பத்தில் செக்கோஸ்லாவிக்கியா குழந்தைகள், சிறுவர்கள் பார்த்து இரசித்த கார்ட்டூன் படங்கள், இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளன. நெதர்லாந்தில் Buurman Buurman (அயலவனும் அயலவனும்) என்ற பெயரில் பிரபலமானது. இன்றைக்கும் அதிகமாக விற்பனையாகும், பார்த்து இரசிக்கப் படும் கார்ட்டூன் படங்களில் அதுவும் ஒன்று.

இந்தக் கார்ட்டூன் படத்தில் உரையாடல் எதுவுமில்லை. Pat, Mat ஆகிய இரண்டு பொம்மை மனிதர்கள் அயலவர்கள். சாமானிய மனிதர்களின் பிரதிநிதிகள். குறைந்த வசதிகளை கொண்ட வீட்டில் வசிக்கும் அவர்கள், பல விசித்திரமான ஐடியாக்களை யோசித்து, பல அரிய கண்டுபிடிப்புகளை செய்கின்றனர். அதன் மூலம், தமது வாழ்க்கையில்  வசதிகளை  பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆனால், நடைமுறைச் சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளால் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் நகைச்சுவையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தவறாகிப் போகும் பொழுது, அதை வேறொரு விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். "கண்டுபிடிப்புகள்" திருப்திகரமான விளைவைத் தந்த பின்னர் ஒருவருக்கொருவர் A je to! என்று சொல்லிக் கொள்வார்கள் (செக் மொழியில்: அது அப்படித்தான்).

இரண்டு அயலவர்களின் குறும்புத்தனங்கள் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து இரசிக்கும் வகையில் உள்ளன. அவற்றைப் பெரியோரும் பார்த்து மகிழலாம் என்பது ஒரு சிறப்பம்சம். செக்கோஸ்லாவிக்கியாவின் "கம்யூனிச பிரச்சார வீடியோ(?)" பார்ப்பவர்கள், அதை நிச்சயம் தமது குழந்தைகளுக்கும் பரிந்துரைப்பார்கள் என்பது நிச்சயம்.

இவை எனது ஐந்து வயது மகன் அகரன் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் படங்கள். அவ்வாறு தான், எனக்கும் அவைஅறிமுகமாகின. நம்பமுடியாத ரோபோத்தனமான சாகசங்களைக் காட்டும், அமெரிக்க கார்ட்டூன் படங்களுக்கு மத்தியில் இது வித்தியாசமாகத் தெரிந்தது. சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.

1976 தொடக்கம் 2011 வரை, இதுவரையில் 86 வெளியீடுகள் வந்துள்ளன.

Pat a Mat தயாரிப்பாளர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளம்: Pat a Mat





Friday, April 17, 2015

ஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி



ஹிட்லர் அனுதாபிகளான அனைத்து பாசிஸ்டுகளுக்கும்: 
"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். தவழவும் முடியா விட்டால் தற்கொலை செய்து கொள்ளுங்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது."


ஜெர்மன் நாஸிகள் "ஊழலற்ற ஆட்சி" நடத்தியதாக புளுகித் திரியும், தமிழ் பேசும் நாஸி அபிமானிகள் பலர் இருக்கின்றனர். "வெள்ளை ஐரோப்பியர்கள் ஊழல் செய்வதில்லை" என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்கள் அதை நம்பலாம்.

ஜெர்மன் வரலாற்றிலேயே நாஸிகளின் ஆட்சிக் காலம் தான் ஊழல் மலிந்திருந்த காலகட்டம். ஹிட்லர் முதல் அடிமட்ட அதிகாரி வரையில் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர்.

 ஹிட்லர், 1933 ம் ஆண்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நேரம், ஜெர்மன் அரசுக்கு பல இலட்சம் வரி இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவரது "மைன் கம்ப்" நூலுக்கான வரியே கட்டப் படாமல் இருந்தது. பதவிக்கு வந்த ஹிட்லர், வருமான வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வரியை இல்லாதாக்கினார். அது மட்டுமல்ல, அடுத்து வந்த வருடங்களில் விற்கப் பட்ட மைன் கம்ப் நூல் பிரதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அந்தப் பணத்தை எல்லாம் ஹிட்லர் தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

ஐரோப்பாவில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், நாஸி அதிகாரிகள் ஊழலில் திளைத்தார்கள். போர்முனையில் நின்ற ஜெர்மன் படையினருக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோல், உணவுப் பொருட்களை திருடி கறுப்புச் சந்தையில் விற்றார்கள். 1944 ஆம் ஆண்டு, நார்மாண்டி கடற்கரையில் நின்ற யுத்த தாங்கிகளுக்கு பெட்ரோல் இல்லாத காரணத்தால், படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், பாரிஸ் கள்ளச் சந்தையில் பெட்ரோல் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது.

யூதர்கள் அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்ட நேரம், யூதர்களின் சொத்துக்களை திருடுவதில் ஜெர்மன் அதிகாரிகள் மும்முரம் காட்டினார்கள். தமது வாழ்நாளில் இது போன்ற தளபாடங்களை காணவில்லை என்று, அவற்றை தமது வீடுகளுக்கு திருடிச் சென்ற அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

ஹிட்லரின் வலதுகரமாக விளங்கிய இராணுவத் தளபதி ஹெர்மன் கெரிங், ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்து வந்தார். பிரைசன் மாநில முதலமைச்சர், பொருளாதார அமைச்சர், பாராளுமன்றத் தலைவர்... இப்படிப் பல பதவிகள் காகிதத்தில் மட்டும் இருந்துள்ளன. அதற்கெல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். 

அது மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களான BMW, Benz நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைத்திருந்தார். கெரிங்கின் அன்றைய வருட வருமானம் 1250000 மார்க்குகள். அதே நேரம், ஜெர்மனியில் ஒரு தொழிலாளரின் வருடாந்த வருமானம் 5000 மார்க்குகளுக்கு மேலே கூடவில்லை.

ஜெர்மன் அரசாங்கத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்குத் தான் அரசுப் பதவிகள் கொடுக்கப் பட்டன. ஜெர்மனி முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டுமானால் மேலிடத்தில் உள்ளவரைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

(நன்றி : Historia, Nr.1/2015)



கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் எப்படியானவர்கள்? 
- பாசிஸ்டுகள் 
 - நாஸிகள் 
 - இனவெறியர்கள் 
 - மதவெறியர்கள் 
 - இனப்படுகொலையாளிகள் 
 - போர்க்குற்றவாளிகள் 
அல்லது அப்படியானவர்களை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்.

Thursday, April 16, 2015

சிலி இனப்படுகொலை : வர்க்கத் துவேஷிகளும் ஆபத்தான தீய சக்திகள் தான்


வர்க்கத் துவேஷம் என்பது, இனத் துவேஷத்திற்கு சற்றிலும் குறைவில்லாத தீய குணம் தான். அதனால், வர்க்க விரோதிகளும், இனவெறியர்கள் போன்றே ஆபத்தானவர்களாக கருதப் பட வேண்டும். 

1973 ஆம் ஆண்டு, சிலியில் பினோச்சேயின் சர்வாதிகார ஆட்சி வரும் வரையில், அங்கே எந்தவொரு இடதுசாரி தீவிரவாத அமைப்பும் ஆயுதப் போராட்டம் நடத்தவில்லை. சிலி கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஜனநாயக சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய அய்யேண்டே ஆட்சிக் காலத்தில், வலதுசாரிகள், முதலாளிய ஆதரவாளர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. 

ஆயினும், இராணுவ ஜெனரல் பினோச்சே தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய, CIA மற்றும் வலதுசாரி சதிப்புரட்சியாளர்கள், இடதுசாரி, கம்யூனிச சக்திகள் மீது கொலைவெறி கொண்டு பாய்ந்தார்கள். ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்தார்கள். சமுதாயத்தில் நிலவும் வர்க்கத் துவேஷம் கூட, இனப்படுகொலைக்கு வழிவகுக்கலாம் என்பதை சிலியில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன. 

ஜனநாயகப் பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிச ஜனாதிபதி அய்யேண்டே ஆட்சி நடத்திய காலத்திலேயே, CIA அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டி விட்டது. வெனிசுவேலாவில் நடந்ததைப் போன்று, சிலியிலும் மத்தியதர வர்க்க மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். முகாம்களில் இருந்த படையினரை உசுப்பி விடுவதற்காக, மத்தியதரவர்க்க பெண்கள் முகாம்களுக்குள் தானியங்களை வீசினார்கள். படையினர் கோழைகள், கோழிகள் போன்றவர்கள் என்று சீண்டுவதே அதன் நோக்கம். அரசுக்கு எதிராக இராணுவத்தை திருப்பி விட இது போதாதா?

இராணுவ சர்வாதிகார அரசு, அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. பிரஜைகளுக்கான சட்டப் பாதுகாப்பை இரத்து செய்தது. சோஷலிசம் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்கள் கூட கைது செய்யப் பட்டு துன்புறுத்தப் பட்டனர். அவர்களை அடைத்து வைப்பதற்கு நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான தடுப்பு முகாம்கள் உருவாகின.

தலைநகரில் உள்ள மிகப் பெரிய விளையாட்டு மைதானமான Estadio Nacional இல், சதிப்புரட்சிக்கு அடுத்த நாள் மட்டும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களான 600 பேர் கொண்டு வரப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உயிரோடு திரும்பிச் செல்லவில்லை. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த 17 வருட காலங்களில், குறைந்தது 40000 பேர் அங்கு கொண்டு வரப் பட்டுள்ளனர்.

அய்யேண்டே பதவிக்கு வருவதற்கு தேர்தலில் ஒட்டுப் போட்ட, பெருமளவு வாக்காளர்கள் வாழ்ந்த இடங்களின் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப் பட்டது. பினோச்சேயின் நேரடி உத்தரவின் பேரில், நூற்றுக்கணக்கான கைதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். படையினர் அங்கு அவர்களை துண்டு துண்டாக வெட்டினார்கள். சிலரை உயிரோடு கொளுத்தினார்கள். பலரது கால் எலும்புகள் முறிக்கப் பட்டன. கண்கள் தோண்டியெடுக்கப் பட்டன. உயிரற்ற உடல்கள் குப்பைக் குவியல்களுடன் வீசப் பட்டன. அன்று பலியானவர்கள் செய்த ஒரேயொரு குற்றம், சோஷலிச மாற்றத்திற்காக ஒரு ஜனநாயக அரசை ஆதரித்தது தான்.

நிச்சயமாக, எல்லா இராணுவ அதிகாரிகளும் மக்களுக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால், மறுத்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்யப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டனர். இரக்கமற்று கொலை செய்யப் பட்டனர். Carlos Prats என்ற இராணுவ அதிகாரி, சதிப்புரட்சியில் ஈடுபட மறுத்து ஆர்ஜெந்தீனாவுக்கு தப்பியோடினார். அங்கு வைத்து கார்க் குண்டுவெடிப்பு மூலம் கொலை செய்யப் பட்டார்.

மக்கள் மத்தியில் பயங்கரத்தை விதைப்பதற்காகவே DINA (Dirección de Inteligencia Nacional) என்றொரு புலனாய்வுப் பிரிவு உருவாக்கப் பட்டது. அந்தப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த Villa Grimaldi எனும் சித்திரவதை முகாமில் சொல்லொணா கொடுமைகள் நடந்துள்ளன. 

1978 ம் ஆண்டு முகாம் மூடும் வரையில், குறைந்தது 4500 இளைஞர்களும், யுவதிகளும் சித்திரவதை செய்யப் பட்டனர். வன்புணர்ச்சி, மின்சார அதிர்ச்சி கொடுத்தல், நீருக்குள் அமிழ்த்தல், போன்ற கொடுமைகள் தினந்தோறும் நடந்துள்ளன. பெண்கள் விசேடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டனர். பெண்ணுறுப்புக்குள் எலியை அல்லது சிலந்தியை பிடித்து விட்டார்கள். நாய்களுடன், ஆண் குடும்ப உறுப்பினருடன் உடலுறவு கொள்ள வேண்டுமென பலவந்தப் படுத்தப் பட்டனர்.

17 வருட கால இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், பினோச்சே இடதுசாரிகள் அனைவரையும் அழிக்க விரும்பினான். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் எல்லோரையும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட அழித்தொழிப்பதே நோக்கமாக இருந்தது. 

சிலியில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்த காலங்களில், குறைந்தது 82000 பேர் கைது செய்யப் பட்டனர். 30000 பேர் சித்திரவதை செய்யப் பட்டனர். 3000 பேர் கொல்லப் பட்டனர். சிலியில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள், Report of the Chilean National Commission for Truth and Reconcilliation இல் பதிவு செய்யப் பட்டுள்ளன.  

இராணுவ சதிப்புரட்சியின் பின்னர், அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் சிலி மறுசீரமைக்கப் பட்டது. தென் அமெரிக்காவின் நவ தாராளவாத கொள்கையின் பரிசோதனைச் சாலையாக பயன்படுத்தப் பட்டது. அதாவது, பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது. முதலாளிகளுக்கு வேண்டியளவு சுதந்திரம் வழங்கப் பட்டது. இதனை நிறைவேற்றிய நிபுணர் குழுவில், நோபல் பரிசு பெற்ற மில்ட்டன் பிறீட்மன் கூட அங்கம் வகித்திருந்தார். சிலி சதிப்புரட்சியிலும், அதற்குப் பின்னரான இனப்படுகொலையிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

வலதுசாரி இராணுவ சர்வாதிகாரி பினோச்சேயினால், இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்த முடிந்ததே தவிர, முற்றாக அழிக்க முடியவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டு வரப் பட்டது. அப்போது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட சிலி கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிசக் கட்சி என்பன தற்போது வளர்ந்து வருகின்றன. 2006 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு சோஷலிஸ்ட், சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப் பட்டார். 

2014 ம் நடந்த தேர்தலில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியான Michelle Bachelet, பினோச்சே சர்வாதிகாரத்தினால் பாதிக்கப் பட்டவர். அவரது தந்தை அல்பேர்ட்டோ படையினரால் கொலை செய்யப் பட்டார். அப்போது நாட்டை விட்டு வெளியேறிய Michelle Bachelet, 1979 ம் ஆண்டு திரும்பி வந்து அரசியலில் ஈடுபட்டார்.

சிலி தொடர்பான முன்னைய பதிவு:
9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

Tuesday, April 14, 2015

நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்


ஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune)

மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.

கனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது. 

பெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

பிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார். 

அன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.

பார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின. 

நடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது. 

ஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார். 

பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.

பெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune

Monday, April 13, 2015

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்


தமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.

புலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.

ஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே?

"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: "ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்!"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா?


பதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம்? ராஜபக்ச ஒரு "சிங்களப் பிரபாகரனாக" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.

பல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்ததில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. 

தமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

துரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்?

சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ? நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?குறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா? அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா?

வெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா? புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா?

"தமிழ் தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான "கம்யூனிச" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்?

Sunday, April 12, 2015

எச்சரிக்கை : சிறுவர்களை நல்வழிப் படுத்துவது "கம்யூனிச மூளைச்சலவை" ஆகலாம்!


"சோவியத் யூனியனில், முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள், மாணவர்கள் மீதும் கம்யூனிச போதனைகளை திணிப்பார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷமிகள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரையில், "தீமையின் வடிவமான" சோவியத் யூனியனில், "கொடுங்கோல் சர்வாதிகாரிகளினால்" சிறுவர்கள் "மூளைச்சலவை செய்யப் பட்டதை" காட்டும் சுவரொட்டிகள் இவை. "மூத்தோருக்கு உதவி செய்! வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்! பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!" என்றெல்லாம் சிறுவர் நன்னடத்தை போதிப்பது கம்யூனிச கொள்கைகள் ஆகலாம்! 
எச்சரிக்கை: உங்களது பிள்ளைகளை நல்வழிப் படுத்துவது கூட "கம்யூனிச சர்வாதிகாரம்" ஆகலாம்!

வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்!
பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!
வயதில் மூத்தோருக்கு உதவி செய்!


*******

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஐந்து மில்லியன் குழந்தைகள் பசியால் இறக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் சத்துணவு குறைபாடு காரணமாக எடை குறைவான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 146 மில்லியன் உள்ளன. ஆனால், "கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடப்பதாக" மேட்டுக்குடி அறிவுஜீவிகளால் வெறுக்கப்படும் கியூபாவில் மாத்திரம், சத்துணவு குறைபாடு கொண்ட குழந்தைகள் எதுவும் இல்லை. ஒரு சோஷலிச நாட்டில் எந்தக் குழந்தையும் பசியால் இறப்பதில்லை. சமீபத்திய UNICEF அறிக்கையில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. 

ஐ.நா. வெளியிட்ட Progress for Children, A Report Card on Nutrition என்ற UNICEF அறிக்கையை வாசிப்பதற்கு:
http://www.unicef.org/publications/files/Progress_for_Children_-_No._4.pdf

********

ருமேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், அதன் தலைநகர் புகாரஸ்ட் பற்றிய ஆவணப்படக் காட்சிகள். மேற்குலகில் பரப்பப் பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு மாறாக, சந்தையில் உணவுப்பொருட்கள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம். உள்ளூர் மக்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. அது மட்டுமல்ல, "பணக்கார" மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களைப் போல, சோஷலிச ருமேனிய மக்களும் தமது ஓய்வுநேரத்தை மகிழ்ச்சியாக களிப்பதைக் காணலாம். 

இது ருமேனிய கம்யூனிச அரசின் பிரச்சார வீடியோ அல்ல. மேற்கத்திய படப்பிடிப்பாளர்களினால் எடுக்கப்பட்டது.
மன்னிக்கவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களை ஏமாற்றமடைய வைத்தமைக்காக வருந்துகிறேன்.

 

Thursday, April 09, 2015

மாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம்


சீனா ஒரு முதலாளித்துவ நாடான பின்னர், அங்கு பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மேற்கத்திய ஊடகங்களில் வெளிவருவதில்லை.

குவாங்டோங் (Guangdong) நகரில் உள்ள பொலிஸ் நிலையமும், பொலிஸ் கார்களும் மக்களால் அடித்து சேதப் படுத்தப் பட்டன. 

"சீனாவில் சுதந்திரம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது" என்றெல்லாம் எமக்குப் போதிக்கும் மேற்கத்திய ஊடகங்கள், இது போன்ற தகவல்களை தெரிவிக்காமல் மறைக்கும் காரணம் என்ன? தங்கள் நாட்டு மக்களும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சமா?


குவாங்டொங் நகர சபை அனுமதியுடன், அங்கு ஒரு கழிவுப் பொருட்களை எரிப்பதற்கான உலை (incinerator) கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தது. அயலில் உள்ள லங்க்தாங் (Langtang) நகர சபை "China Resources Cement Holdings" நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

குறிப்பாக, லங்க்தாங் நகரவாசிகள், தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மையாக, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆலை கட்டப் படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசடைய வைத்துள்ளது. அதற்கும் மேலாக புதிய உலை சூழலை இன்னும் அதிகமாக மாசு படுத்தும் என்று நம்பினார்கள்.


அயலில் உள்ள இன்னொரு நகரமான லுவோடிங் (Luoding) வாசிகள், உள்ளூர் பாடசாலைகளோடு சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் சீமெந்து ஆலை ஏற்கனவே தமது நீர் நிலைகளையும், வளிமண்டலத்தையும் மாசு படுத்தி விட்டதாக குறைப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை வந்தால், அதனால் தமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஏப்ரல் 6 ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அடக்குமுறை பிரயோகித்துள்ளது. கவச உடை அணிந்த பொலிஸ் படையினர், தடியடிப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், இருபது பேரை கைது செய்துமுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டத்தில், பொலிசார் வன்முறை பிரயோகித்த செயலானது பொது மக்களை ஆத்திரமடைய வைத்தது. பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் சிறுவர்களும் பாதிக்கப் பட்டனர்.

முதலாளிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள பொலிஸ் நடவடிக்கை, தமது நியாயமான போராட்டத்தை உதாசீனப் படுத்தியதை கண்டு பொறுக்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து, பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணில் கண்ட பொருட்களை அடித்து நிர்மூலமாக்கினார்கள்.

மக்கள் எழுச்சி காரணமாக, தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. இது மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப் பட வேண்டும்.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக, சீன சமூக வலைத் தளங்களில் பிரசுரமான படங்களை இங்கே இணைத்துள்ளேன்.




Wednesday, April 08, 2015

9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி! ரஷ்யா ஆதாரங்களை வெளியிட்டது!

9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன.


9/11: RUSSIA PRESENTS EVIDENCE AGAINST US, UK AND ISRAEL CO-CONSPIRATORS & 9/11 WAS AN INSIDE JOB!


********* 


அமெரிக்காவில் அளவுக்கு அதிகமான (கருத்துச்) சுதந்திரம் இருக்கிறதாமே? நியூ யார்க் நகரில் உள்ள புரூக்ளின் பூங்காவில், ஸ்னோவ்டனுக்கு சிலை வைக்கப் பட்டிருந்தது. இனந்தெரியாத சிற்பக் கலைஞர்களினால் இரவோடிரவாக வைக்கப் பட்டிருந்த சிலையை தற்போது பொலிசார் அகற்றி விட்டனர். அதனால், ஸ்னோவ்டன் ஆதரவாளர்கள், முன்பு சிலை இருந்த இடத்தில் ஸ்னோவ்டனின் விம்பம் விழும் ஒளிப்படக் கருவியை பொருத்தியுள்ளனர். 

THERE’S A MASSIVE, ILLICIT BUST OF EDWARD SNOWDEN STUCK TO A WAR MONUMENT IN BROOKLYN
http://animalnewyork.com/2015/theres-a-massive-illicit-bust-of-edward-snowden-stuck-to-a-war-monument-in-brooklyn/


Tuesday, April 07, 2015

ஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டிக்கவில்லை?


கென்யாவில் அல் ஷஹாப் தீவிரவாத இயக்கத்தினால், 147 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல், மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

அதே நேரத்தில், ஜெர்மன் விங்க்ஸ் விமான விபத்தில் கொல்லப் பட்ட பயணிகள் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டிருந்தன.

பாரிஸில் சார்லி ஹெப்டோ தாக்குதலில் கொல்லப் பட்டவர்களுக்காக, "Je suis Charlie" என்று பொங்கி எழுந்தவர்கள், கென்யா படுகொலைகள் பற்றி கவலைப் படவில்லை. எந்தவொரு உலக நாட்டின் தலைவரும் அனுதாபம் தெரிவிப்பதற்காக கென்யாவுக்கு செல்லவில்லை.

இத்தனைக்கும், அல் ஷஹாப் என்ற இஸ்லாமிய மதவெறிக் கும்பல், வேண்டுமென்றே கிறிஸ்தவ மாணவர்களை தெரிவு செய்து படுகொலை செய்திருந்தது. அதைக் கண்டித்து மேற்கத்திய கிறிஸ்தவர்கள் யாரும் பொங்கி எழவில்லை. சர்வதேச முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சீறிப் பாயவில்லை.

இந்த சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள். அதனால், அவர்களின் உயிர்கள் பெறுமதியற்றவை. இது "ஒற்றுமையற்ற" கருப்பர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சினை என்ற காரணத்தால், "சர்வதேச சமூகம்" (அதாவது வெள்ளையின மேலாண்மை நாடுகள்) பாராமுகமாக இருந்துள்ளன.

"ஏன் எந்தவொரு உலக நாடும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று அப்பாவி போலித் தமிழ்தேசியவாதிகள் கேட்கின்றனர். அதற்கும் இது தான் பதில். இலங்கையில் நடந்த ஈழப் போரில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள்.

சிங்கள - தமிழ் இனப் போரானது, ஒரே கருப்பின மக்களுக்கு இடையில், ஒற்றுமையில்லாத காரணத்தினால் நடக்கும் போராகவே மேற்குலகில் கணிக்கப் படுகின்றது. அதனால், வெள்ளையின மேலாண்மை நாடுகள் அது குறித்து கவலைப் படவில்லை. போலித் தமிழ்த் தேசியவாதிகள், இனிமேலாவது உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, April 05, 2015

சமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கிய பயங்கரவாதி!


இன்றைய இஸ்ரேல் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. 22 July 1946, ஜெருசலேம் நகரில் இருந்த கிங் டேவிட் ஹோட்டல் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. தொண்ணூறு பேர் கொல்லப் பட்ட குண்டுவெடிப்பில் பலியானவர்களில் 28 பேர் பிரிட்டிஷ்காரர்கள், 41 பேர் அரேபியர்கள், 17 பேர் யூதர்கள். 



அந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஹகனா என்ற யூத தீவிரவாத இயக்கம், பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாக மாறியது. அதன் தலைவர் மேனாகிம் பெகின் இஸ்ரேலின் ஆறாவது பிரதமரானார். சமாதானத்திற்கான நோபல் பரிசும் பெற்றுக் கொண்டார்! ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?

*******



இந்தப் படத்தில் உள்ள, மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்திய, சர்வதேச பயங்கரவாத இயக்கத்தின் பெயர் நேட்டோ(NATO). 12 April 1999, செர்பியாவில் பொது மக்கள் பயணம் செய்த ரயில் மீது நடந்த தாக்குதலில், பெண்களும் குழந்தைகளுமாக 14 பேர் கொல்லப் பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை நடத்திய குற்றவாளிகள், இன்று வரையில் சட்டத்தின் முன்பு நிறுத்தப் படவில்லை. மாறாக பதவியுயர்வு கொடுத்து கௌரவிக்கப் பட்டனர்.

*******


கொலம்பியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினரும், இராணுவ ஒப்பந்தக் காரர்களும், 54 பருவ வயது மகளிரை வன்புணர்ச்சி செய்துள்ளனர். பாலியல் வல்லுறவு கொள்வதை வீடியோவில் ஒளிப்பதிவு செய்து விநியோகித்துள்ளனர். ஒரு தடவை, 12 வயது சிறுமியும் அமெரிக்க படையினரால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார். கொலம்பியாவில் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

தற்போது கொலம்பிய அரசுக்கும், மார்க்சிய FARC இயக்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கொலம்பியாவில் நீண்ட காலம் நடந்த ஆயுதப்போராட்டம் பற்றி நிபுணர்கள் குழுவொன்று தயாரித்த “Contribution to the Understanding of the Armed Conflict in Colombia” என்ற ஆய்வறிக்கையில் மேற்படி தகவல் எழுதப் பட்டுள்ளது.

Wednesday, April 01, 2015

இஸ்தான்புல் நகரை அதிர வைத்த கம்யூனிச கெரில்லாக்களின் நீதிமன்ற பணய நாடகம்

31 March 2015
துருக்கி, இஸ்தான்புல் நகர நீதிமன்றத்திற்குள் நுளைந்த ஆயுதபாணி நபர்கள், அரச தரப்பு வழக்கறிஞர் Mehmet Selim Kiraz பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு, குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

Revolutionary People's Liberation Party Front (DHKP-C) என்ற கம்யூனிச கெரில்லா இயக்க உறுப்பினர்களே இந்தச் சம்பவத்தில் சம்பந்தப் பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக பொலிஸ் வன்முறை பிரயோகித்த நேரம், Berkin Elvan என்ற 13 வயது சிறுவன், கண்ணீர்ப் புகைக் குண்டு பட்டு காயமடைந்ததால் கொல்லப் பட்டான்.

தற்போது பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டுள்ள வழக்கறிஞர் அந்த வழக்கில் அரசுக்கு சார்பாக ஆஜராகியுள்ளார். சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யா விட்டால், பணயக்கைதியை கொன்று விடப் போவதாக, ஆயுதபாணிகள் எச்சரித்துள்ளனர். காவல்துறையை சேர்ந்த நான்கு குற்றவாளிகளின் விபரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவர்களை மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


அரச தரப்பு வழக்கறிஞர், கம்யூனிச கெரில்லாக்களினால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டிருக்கும் தகவலை கேள்விப் பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் மறியல் செய்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரின் Okmeydani பகுதியில், பெருமளவு இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Okmeydani பகுதியில், கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மணிநேரமாக அந்தப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பொலிஸ் வர விடாமல், தெருக்களை வழிமறித்து தடையரண்கள் போடப் பட்டிருந்தன.

பணயக் கைதியை விடுவிப்பதற்கு, பொலிஸ் ஆறு மணிநேரமாக பேரம் பேசியதாகவும், இறுதியில் பெரும் பொலிஸ் பட்டாளம் ஒன்று நீதிமன்ற கட்டிடத்தினுள் நுளைந்து ஆயுதபாணிகளை கொன்று விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பணயக்கைதியான அரச தரப்பு வழக்கறிஞர் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காரணமாக இறந்தார். நீதிமன்ற தாக்குதலை சம்பவம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த, DHKP-C ஆதரவு டிவிட்டர் கணக்குகள் தடை செய்யப் பட்டுள்ளன. 

துருக்கி பத்திரிகை ஒன்று, DHKP-C கம்யூனிச போராளிகளுடன் மேற்படி சம்பவம் பற்றி பேட்டி கண்டு எழுதியுள்ளது:
Interview with the militants: “Our barrels will bring justice”


இது  தொடர்பான முன்னைய பதிவுகள்:
துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்
"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி