Wednesday, October 29, 2014

"அசல் கம்யூனிச" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின் 17 கேள்விகள்

உலகில் யாரை "தமிழ் தேசியவாதி, தமிழ் உணர்வாளர்" என்று அழைத்தாலும், அது தங்களை மட்டுமே குறிக்கும் என்று மே 17 இயக்கத்தினர் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழ் தேசியத்தின் பெயரால், சுப்பிரமணிய சாமியை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, சு.சாமி அங்கம் வகிக்கும் பாஜக வை ஆதரிக்கும் இரட்டை வேடம் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். (யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி! http://kalaiy.blogspot.nl/2014/10/blog-post_27.html

முகநூலில், Rathish Kumar எனும் ஒரு மே 17 ஆதரவாளர் (அல்லது உறுப்பினர்), பொங்கி எழுந்து பொரி கடலை சாப்பிட்டுக் கொண்டே, என்னை திட்டி எழுதி பதிவிட்டிருக்கிறார். என்னைப் போன்ற "போலி கம்யூனிஸ்டுகளின்" தொல்லையை தாங்க முடியாத "அசல் கம்யூனிஸ்டான" Rathish Kumar, நான் மே 17 பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக சீறியிருக்கிறார். கூடவே என்னிடம் ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். அது பின்வருமாறு:

 //ஈழப்போரின் இறுதியில் முளைத்த இந்த இயக்கங்கள் முளைக்காமல் இருக்க சில செயல்களையாவது செய்திருக்க வேண்டாமா? கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கொண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் இவர்கள் எந்த விதமான தொடர்பையும் ஏற்படுத்தி, தேச விடுதலையின் நியாயத்தை எடுத்துரைத்தது கிடையாது. குறைந்தபட்சம் இந்திய கம்யூனிஸ்ட் களின் நிலைபாட்டையாவது மாற்றியிருக்கலாம்.//

லத்தீன் அமெரிக்க நாடுகளில், கம்யூனிச சித்தாந்தம் கொண்ட நாடு கியூபாவைத் தவிர வேறெதுவும் கிடையாது. வெனிசுவேலா, பொலிவியா போன்றவை ஜனநாயக நாடுகள். ஆளும் கட்சிக்கும் கம்யூனிச சித்தாந்தத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவை மேற்கு ஐரோப்பாவில் இருப்பது போன்று, மக்கள் நலன்புரி அரசுக்களை உருவாக்கி உள்ளன.

மே 17 ஆர்வலர்களின் அரைவேக்காட்டு அறிவின் அடிப்படையில், சில மேற்கு ஐரோப்பிய, குறிப்பாக ஸ்காண்டிநேவிய நாடுகளையும், "கம்யூனிச சித்தாந்தம் கொண்ட நாடுகள்" என்று அழைக்கலாம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள "கம்யூனிஸ்ட்" கட்சிகள், தேர்தல்களில் போட்டியிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. அவற்றை பிற முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றாகத் தான் கருதலாம். "போலிக் கம்யூனிஸ்ட்" என்றால் யார் என்று கேட்டால், அத்தகைய பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை சுட்டிக் காட்டலாம்.

அதே நேரம், தமிழ் நாட்டில் மே 17 இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (அது ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது குறிப்பிடத் தக்கது.) வன்னியில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்தி இருந்தது. தேர்தலில் போட்டியிடாத கம்யூனிஸ்ட் கட்சிகள், இயக்கங்கள் பல, ஈழத் தமிழர் ஆதரவு பேரணிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டன. தாமாகவே முன்வந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்களை செய்தன.

இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, "கம்யூனிஸ்டுகள் ஈழ விடுதலைக்கு ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடவில்லை" என்று பொய்யுரைப்பது ஏன்? அங்கே தான், மே 17 இயக்கத்தின் போலித் தமிழ் தேசிய அரசியல் பல்லிளிக்கிறது. அது வெறும் மேட்டுக்குடி வர்க்க அரசியல், தமிழ் தேசியம் அல்ல.

தமிழ்நாட்டில் நடந்த ஈழ ஆதரவு போராட்டத்தின் இடை நடுவில் புகுந்த மே 17 இயக்கத்தினர், அதனை வலதுசாரி சார்பானதாக மாற்றும் அயோக்கியத்தனத்தை செய்தனர். இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். மேட்டுக்குடி அரசியலால் வழிநடத்தப் படும் மே 17 இயக்கம், இடதுசாரியம், கம்யூனிசம் போன்ற சொற்களைக் கேட்டாலே அலறித் துடிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. தமிழ் தேசியம் பேசினாலும், வர்க்கக் குணாம்சம் மாறுமா?

மே 17 தோன்றுவதற்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே, தமிழ் தேசியப் "பொதுவுடைமைக்" கட்சி என்றொரு சுத்த தமிழினவாத அமைப்பு தீவிரமாக செயற்பட்டு வந்தது. முழுக்க முழுக்க தமிழ் தேசியவாதம் அல்லது தமிழ் இனவாதம் பேசிக் கொண்டே, கட்சியின் பெயரில் "பொதுவுடைமை" என்று வைத்துக் கொள்பவர்கள், "போலிக் கம்யூனிஸ்டுகள்" என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

மே 17 ஆர்வலர்கள், முதலில் "அசல், போலி" என்ற சொற்களிற்கு அர்த்தத்தை தேடி அறிந்து கொள்வது நல்லது. அரசியல் கலைச் சொற்களுக்கு அர்த்தம் தெரியாமல் கட்சி நடத்துவதால், மக்களுக்கு எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை.

மே 17 ஆர்வலர்கள், மற்றவர்களை "போலிக் கம்யூனிஸ்டுகள்" என்று கூறுகின்றனர் என்றால், அவர்கள் ஒன்றில் "அசல் கம்யூனிஸ்டுகளாக" இருக்க வேண்டும், அல்லது கம்யூனிசத்தை கரைத்துக் குடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த விடயம் எனக்குத் தெரியாமல், மே 17 ஒரு தமிழ் தேசியவாத இயக்கம் என்று கூறியிருந்தால், அது ஒரு "பொய்யான குற்றச்சாட்டு" தான்.

"மே 17 ஒரு தமிழ் தேசிய இயக்கம் அல்ல. அது தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்துவதற்காக உருவான, கம்யூனிஸ்ட் சித்தாந்த இயக்கம்(?)" என்றே நினைத்துக் கொள்வோம். அதனால் தான், "கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கொண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் தொடர்பு ஏற்படுத்தி தேச விடுதலையின் நியாயத்தை எடுத்துரைத்தீர்களா?" என்று தைரியமாகக் கேட்கிறார்.

அதாவது, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியை, "தமிழர்களின் பிடல் காஸ்ட்ரோ அல்லது ஹியூகோ சாவேஸ்" என்றெல்லாம் புகழாதது எங்களது தவறு தான். "தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் கம்யூனிஸ்ட் நாடுகளாக மாற்ற விரும்பும்" மே 17 போன்ற அசல் கம்யூனிச இயக்கங்கள் குறித்து, லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்டுகளிடம் எடுத்துரைக்காதது எங்களது தவறு தான். ஐயகோ... நாங்கள் எத்தனை பெரிய தவறிழைத்து விட்டோம்! பொறுத்தருள்வீர் ஐயன்மீர்!

மீண்டும் அந்தத் தவறு நடக்கக் கூடாது என்றால், மே 17 இயக்கத்தினர் தமது அரசியல் நிலைப்பாடுகளை எமக்கு தெளிவாக எடுத்துக் கூறினால் நல்லது. அதனால், மே 17 இயக்கத்தினரிடம், பகிரங்கமாக 17 கேள்விகளை வைக்கிறேன். இங்கேயுள்ள 17 கேள்விகளுக்கான பதில்களை, மே 17 தலைவர் திருமுருகன் காந்தியோ, அல்லது யாராவது ஒரு மே 17 இயக்க உறுப்பினரோ கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தமிழ் மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்:

1. தமிழ் நாடு/தமிழீழத்தில் மே 17 ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால், எத்தனை வருடங்களில் சோஷலிசத்தை கொண்டு வருவார்கள்? ஐந்து அல்லது பத்து வருடங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பொருளாதார நகல் திட்டம் கைவசம் இருக்கிறதா?

2. தமிழ் முதலாளிகள் முன்னரைப் போன்று இயங்க சுதந்திரம் இருக்குமா? அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா? சொத்துக்களுக்கு அதிகளவு வரி அறவிடப் படுமா? முதலாளிகள் உழைக்கும் வர்க்க மக்களின் எதிரிகள் என்ற கொள்கை தமிழ்நாடு/தமிழீழ அரசினால் கடைப் பிடிக்கப் படுமா?

3. சோஷலிச சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள், சமூகத்தில் எந்தளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், சிறைக்குள் தள்ளப் படுவார்களா? ஊழல் பேர்வழிகள், கந்துவட்டிக்காரர்கள், நிலவுடமையாளர்கள், பண்ணையாளர்கள், முதலாளிகள் போன்றோர், இதுவரை காலமும் செய்த குற்றங்கள், மக்கள் நீதிமன்றங்களில் விசாரிக்கப் படுமா?

4. கூலித் தொழிலாளியாக இருந்தாலும், பட்டதாரியாக இருந்தாலும், சம்பளத்தில் அதிக வித்தியாசம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப் படுமா? சம்பள உச்சவரம்பு நிர்ணயிக்கப் படுமா?

5. சாதாரண அடித்தட்டு தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப் படுமா? அந்தத் தொகை வாழ்க்கைச் செலவுகளை ஈடு கட்டுவதாக இருக்குமா? நாட்டில் உள்ள அனைத்து தொழிற்துறைகளிலும் தொழிற்சங்கங்கள் இயங்க அனுமதிக்கப் படுமா? பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப் படுமா?

6. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து, நிலவுடமையாளர்களின் அளவுக்கதிகமான நிலங்கள் பறிமுதல் செய்யப் படுமா? அவை நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப் படுமா?

7. தமிழ்நாடு/தமிழீழத்தின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப் படுமா? தொழிற்சாலைகளை தொழிலாளர்களே நிர்வகிக்கும் ஜனநாயக அமைப்பு உருவாக்கப் படுமா?

8. அந்நிய நாட்டு கடனுதவிகள் இரத்து செய்யப் படுமா? உலகவங்கி, IMF ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படுமா, அல்லது நிராகரிக்கப் படுமா? அந்நிய நாட்டு முதலீடுகள் வரவேற்கப் படுமா அல்லது ஒரேயடியாக தடுக்கப் படுமா?

9. தமிழ் நாடு/தமிழீழத்தில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படுமா? வேலையற்றோர் யாருமில்லை என்ற நிலை வருமா?

10. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேற்றுக் காலத்திலும் சம்பளம் தொடர்ந்து கிடைக்குமா? வரதட்சனை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்குமா?

11. அனைவருக்கும் அறுவைச் சிகிச்சை வரையில் இலவச மருத்துவ வசதி கிடைக்குமா?

12. அனைவருக்கும் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி கிடைக்குமா?

13. சேரியில் வாழ்பவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் அரசு செலவில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் படுமா?

14. சாதி/மத பேதம் பார்ப்பது கிரிமினல் குற்றமாக கருதப் பட்டு, மீறுவோர் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்களா? சாதி/மத மறுப்பு செய்து கொள்ளும் தம்பதியினருக்கு அரசு சலுகைகளை அள்ளிக் கொடுத்து, அவர்களது வாழ்க்கை வசதிகளை உயர்த்துமா?

15. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுடனான சர்வதேச தொடர்புகள் தொடர்ந்தும் பேணப் படுமா அல்லது படிப்படியாக துண்டிக்கப் படுமா?

16. சுதந்திர தமிழ் நாடு/தமிழீழம், ஈரான், ரஷ்யா போன்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகளையும் தனது புதிய நண்பர்களாக ஏற்றுக் கொள்ளுமா? வட கொரியா, கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் தமிழ் நாடு/தமிழீழம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுமா?

17. தமிழ் மக்களுடன் "மிகவும் நெருக்கமாக இருக்கும்" மே 17 இயக்கத்தினர், தமிழ் தேச விடுதலை பெற்றுக் கொண்டால், மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப் படுத்தப் போவதாக, இப்போதே பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?

Monday, October 27, 2014

யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!


தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்காக, தம்மை ஆண்டவர் தேர்ந்தெடுத்தார் என்று நினைத்துக் கொள்ளும், போலித் தமிழ் தேசிய மாற்றுக் கருத்தாளர்கள், தங்களை மட்டுமே புனிதர்களாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கோடிக் கணக்கான பணம் கைமாறும். அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது. 

போலித் தமிழ் தேசியவாதிகள், தங்களை ராஜபக்ச கும்பலுக்கு சமமான வர்த்தகக் கூட்டாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணம் தவறானதும் அல்ல. கொழும்பு பங்குச் சந்தையில், கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக முதலிட்டு வருபவர்கள் தான், இந்த புலம்பெயர்ந்த தமிழ் தேசிய மாற்றுக் கருத்தாளர்கள். மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. 

இந்தியாவில் அரசியல் தரகு வேலை பார்க்கும், CIA உளவாளி சுப்பிரமணியசாமியுடன், Tom & Jerry மாதிரி ஒளித்துப் பிடித்து விளையாடுவார்கள். சகோதரர்களுக்கு இடையில் சண்டை வரும். ஒருவரை ஒருவர் திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், பாஜக தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்திருப்பார்கள். அதனால் தான், கடந்த பொதுத் தேர்தலில், "நரேந்திர மோடி - சுப்பிரமணிய சாமி கோஷ்டியை" ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். 

அந்த அரசியல் அலங்கோலங்களை, தமிழ் மக்கள் மறந்து விட வேண்டுமாம். போலித் தமிழ் தேசியத்தின் சித்தாந்தம் இந்துத்துவா மதவாதம் என்பது இரகசியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் என்தால் தான், சிஐஏ எஜன்ட் சுப்பிரமணியசாமிக்கும், போலித் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையில் ஓர் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலவுகின்றது.

யார் இந்த சுப்பிரமணிய சாமி?
தமிழ் (தேசிய) ஊடகங்கள், அவரை மக்கள் ஆதரவற்ற தனி நபர் போன்றும், அரசியல் கோமாளி போன்றும் சித்தரித்து வருகின்றன. அவர்களில் பலருக்கு சு.சாமி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது மட்டுமே பிடிக்கவில்லை. ஆனால், அதே சு.சாமி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் நேரத்தில் யாரும் கண்டிப்பதில்லை. 

சு. சாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விடயம் தான். ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் அது விபரமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சுப்பிரமணிய சாமி மட்டுமல்லாது, புலிகள், சி.ஐ.ஏ., மொசாட் ஆகிய அந்நிய சக்திகளும், ராஜீவ் கொலையில் சம்பந்தப் பட்டுள்ளதாக, ஜெயின் கமிஷன் எழுதி இருந்தது. ஆனால், தமிழினவாதக் குழுக்களும், தமிழ் ஊடகங்களும், சுப்பிரமணிய சாமி மட்டுமே ராஜீவ் காந்தியை கொலைக்கு காரணம் என்பது போல, கால்வாசி உண்மையை சொல்லிக் கொண்டிருந்தன.

சு.சாமிக்கும், சி.ஐ.ஏ.க்கும் இடையிலான உறவு, இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. எழுபதுகளில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, காங்கிரஸ் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக ஆண்டு கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அது பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். சர்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் கருதி, சோவியத் யூனியன் அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. அளவு கடந்த சோவியத் இராணுவ, நிதியுதவி பெற்று வந்த, சோஷலிச முகாமை சேராத நாடு இந்தியா ஆகும். 

இந்தியாவில் இந்திரா காந்தி நடைமுறைப் படுத்திய அவசர கால சட்ட ஆட்சியின் விளைவாக பாதிக்கப் பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்தன.  1977 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்ட நேரம், எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பான ஜனதாக் கட்சி உருவானது. சுப்பிரமணிய சாமி அதன் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இந்திரா காந்தியின் அவசரகால ஆட்சி, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி இருந்ததால், தேர்தலில் ஜனதாக் கட்சியை வெல்ல வைத்தனர். மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆனார். 

அமெரிக்காவில் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் Seymore Hersh, எழுதிய  The Price of Power எனும் நூலில், மொரார்ஜி தேசாய் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்று குறிப்பிடப் பட்டிருந்தது. மொரார்ஜி தேசாய் அந்த எழுத்தாளருக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆரம்பத்தில் அதனை அலட்சியப் படுத்தியதாக காட்டிக் கொண்ட சி.ஐ.ஏ., ஜனதாக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்த சு.சாமிக்கு ஒரு டெலேக்ஸ் அனுப்பியது. சி.ஐ.ஏ. யின் மும்பைக் கிளை அலுவலகத்தில் இருந்து, மொரார்ஜி தேசாயின் கட்சியை தொடர்பு கொண்ட விபரம் கூட சு.சாமி மூலம் தான் வெளியானது. (ஆதாரம் : CIA: Club der Mörder, Kunhanandan nair, Michael Opperskalski)

எழுபதுகளில் ஜனதாக் கட்சியை ஆதரித்து வந்த சி.ஐ.ஏ., பின்னர் அதன் தேவை முடிந்ததும் கை விட்டு விட்டது. தொண்ணூறுகளின் பின்னர், பாஜக என்ற குதிரையின் மேல் பந்தயம் கட்டி வந்தது. அதனால், சி.ஐ.ஏ.யின் நம்பிக்கைக்குரிய முகவர் சுப்பிரமணிய சாமி, 2013 ஆம் ஆண்டு, ஜனதாக் கட்சியை கலைத்து விட்டு, பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து விட்டார். 

2009 ஆம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில் திடீரென முளைத்த "நாம் தமிழர்", "மே 17" போன்ற தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், "தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது தான் தமது இலட்சியம்" என்று பகிரங்கமாகவே சொல்லி வந்தன. அதற்காக, வெளிப்படையாகவே நரேந்திர மோடியையும், பாஜக வையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தன. 

இதிலே வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் இயங்கும் தமிழின பிழைப்புவாத இயக்கங்கள், தம்மை "புலி ஆதரவாளர்கள்" போன்று காட்டிக் கொண்டன. சுப்பிரமணிய சாமி தன்னை ஒரு "புலி எதிர்ப்பாளர்" போன்று காட்டிக் கொண்டார். ஆனால், இரண்டு தரப்பினரும், பாஜக வின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டார்கள். இன்று, "புலி ஆதரவாளர்களின்" தயவில், ஒரு "புலி எதிர்ப்பாளர்" மோடியின் அரசாங்கத்தில் வீற்றிருக்கிறார்! உலகில் வேறெந்த நாட்டிலும், இப்படி ஒரு வினோதமான கூட்டணியை காண முடியாது.

இதிலே முரண்நகை எதுவும் கிடையாது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கின் விடை சரியாகத் தான் வருகின்றது. பல உலக நாடுகளிலும் உள்ள, குறுந் தேசியவாத, மதவாத அரசியல் சக்திகள், சும்மா பாசாங்குக்குக் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசுவதில்லை. இந்தியாவில் இன்னும் எத்தனை பேர் சி.ஐ.ஏ. சம்பளப் பட்டியலில் இருக்கிறார்கள் என்ற விபரம், விக்கிலீக்ஸ் மாதிரி, யாராவது அமெரிக்க தூதரக கேபிள்களை வெளியிட்டால் தான் தெரிய வரும். 

Thursday, October 23, 2014

ஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரிட்டனின் காலனிய சூழ்ச்சியும்


ஹாங்காங்கில் நடக்கும் மாணவர் போராட்டத்தை, "ஜனநாயக மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்" போன்று சித்தரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், அதன் பின்னணி பற்றி விபரிப்பதில்லை. ஹாங்காங் ஆசியாவில் ஒரு முதலாளித்துவ அதிசயம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, அங்கு நடந்த காலனிய எதிர்ப்பு போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. ஹாங்காங் பிரிட்டனின் காலனிய அடிமை நாடாக இருந்த காலத்தில், அது அமைதியாக இருந்ததாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி நடந்தது என்பதையும், பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் அதனை ஈவிரக்கமின்றி அடக்கியது என்பதையும் அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

நூறு வருடங்களாக ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்திருந்தாலும், ஆரம்பத்தில் அது ஒரு பணக்கார நாடாக இருக்கவில்லை. ஆசியாவில் இருந்த பிற ஐரோப்பியக் காலனிகள் போன்று கடுமையான சுரண்டலால் பாதிக்கப் பட்டிருந்தது. வசதி வாய்ப்புகளை விட, வறுமையும், பிணியும் அதிகமாக காணப்பட்டது. பிரிட்டனின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த சீனர்கள் மட்டும் ஹாங்காங் பிரஜைகள் ஆகவில்லை. சீன பெருநிலப் பரப்பில் இருந்து காலங்காலமாக குடியேறிகள் வந்து கொண்டிருந்தார்கள். சீன - ஜப்பான் போரின் பொழுதும், கம்யூனிஸ்ட் - குவாமிந்தாங் போரின் பொழுதும், பல்லாயிரக் கணக்கான சீனர்கள், அகதிகளாக வந்து சேர்ந்திருந்தனர். அவர்களின் வம்சாவளியினர், 21 ம் நூற்றாண்டில் வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றமை நகைப்புக்குரியது.


ஹாங்காங் மாணவர் போராட்டம் "ஜனநாயகத்திற்கானது" என்று கூறப் பட்டாலும், அதற்குள் சீன குடியேற்றத்தை எதிர்க்கும் இனவாத சக்திகளின் ஆதிக்கமும் காணப் படுகின்றது. 2012 ம் ஆண்டு, "வெட்டுக்கிளி எதிர்ப்பு இயக்கம்" ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. தீவிர வலதுசாரிகளின் அமைப்பு, பெருநிலப் பரப்பில் இருந்து வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்புப் நாளேடு ஒன்றில், "வெட்டுக்கிளி ஹாங்காங் மீது படையெடுக்க காத்திருப்பது" போன்றதொரு கருத்துப் படம் போட்டு, அதற்கு கீழே பின்வருமாறு எழுதி இருந்தது: "சீனாவில் இருந்து வரும் கர்ப்பிணிப் பெண்கள், ஹாங்காங்கில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம், ஹாங்காங்கின் மக்கள் நல கொடுப்பனவுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள்...."

பொதுவாகவே, ஹாங்காங் சீனர்கள், பெருநிலப்பரப்பில் வாழும் சீனர்களை கீழானவர்களாக பார்ப்பதுண்டு. காலனிய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை மறக்காமல், அவர்களை "நாகரிமைடையாத சீனர்கள்" என்று கருதிக் கொள்வார்கள். "ஹாங்காங் சீனர்கள் காண்டனீஸ்-சீன மொழி பேசுவார்கள். சீனாவில் உள்ள சீனர்கள் மாண்டரின்-சீன மொழி பேசுவார்கள்." என்று யாராவது இதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஹாங்காங்கில் மாண்டரின் - சீன மொழி பேசுவபவர்கள் மீதான துவேஷம் சற்று அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், ஹாங்காங் தீவுகளுக்கு அயலில் உள்ள சீன மாகாணங்களிலும் காண்டனீஸ் மொழி தான் பேசுவார்கள் என்பதை மறந்து விடலாகாது. ஹாங்காங்கில் குடியேறியுள்ள பெரும்பாலான சீனர்கள், காண்டனீஸ் சீன மொழி பேசுவோர் தான்.

ஹாங்காங் மாணவர்களின் போராட்டத்தை, ஹாங்காங் வர்த்தகர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு காரணம் உண்டு. வருடந்தோறும் ஹாங்காங் வரும் உல்லாசப் பிரயாணிகளில் 75% சீன பெருநிலப் பரப்பில் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, ஹாங்காங் அருகில் உள்ள ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையத்தில் ஹாங்காங் முதலாளிகள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர். ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையம் எண்பதுகளிலேயே இயங்கத் தொடங்கி விட்டது. அப்போதே சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான இரு தரப்பு போக்குவரத்து ஆரம்பமாகி விட்டது. அதாவது, ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே, சீனாவுடன் நல்லுறவு நிலவியது. ஆனால் அது பிற்காலத்தில் ஏற்பட்ட உறவு. அதற்கு முன்னர், காலனிய ஆட்சியாளர்களினால் ஹாங்காங் சீனாவிடம் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தது.

சீனாவில் தோன்றிய பொதுவுடமைப் புரட்சி, பெருமளவு சீனர்கள் வாழும் ஆசிய நாடுகளிலும் பரவியது. ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல. 1966 ஆம் ஆண்டின் இறுதியில், தொழிற்சாலைகளில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள், வெகு விரைவில் காலனிய நிர்வாகத்திற்கு சவாலாக மாறினார்கள். நகரத் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், அடிக்கடி காவல்துறையினருடனான மோதல்களில் முடிந்தது. 

பல நிறுவனங்களில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டங்களினால், ஹாங்காங் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. காலனிய படைகளில் கடமையில் இருந்த சீன இன போலிஸ்காரர்களை, தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நம்பினார்கள். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. சீனப் பொலிஸ்காரர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தனர்.

பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் நாட்டில், கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கப் படா விட்டாலும், அது பகிரங்கமாகவே இயங்கி வந்தது. கம்யூனிஸ்ட் செய்தித் தாள்கள் வெளியாகின. ஒரு வானொலி நிலையம் கூட இயங்கியது. அந்தளவுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. "மாவோவின் மேற்கோள்கள்" எனும் சிவப்பு நிற சிறிய கைநூல், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டது. சீனாவில் கலாச்சாரப் புரட்சி காலத்தில் நடந்தது போன்று, ஹாங்காங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களினால் எடுத்துச் செல்லப் பட்டது.

பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வனுமுறை பிரயோகித்தது. செய்தித்தாள்கள் தடை செய்யப் பட்டன. அச்சகங்கள் மூடப் பட்டன. கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். அரச ஒடுக்குமுறை காரணமாக, கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் தலைமறைவாக இயங்கத் தொடங்கினார்கள். காலனிய ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் குண்டு வீச்சுக்கு இலக்காகின. 1967 ஆம் ஆண்டு, ஒரு வருடத்திற்குள், ஹாங்காங் முழுவதும் நூற்றுக் கணக்கான குண்டுகள் வெடித்தன. காலனிய அதிகாரிகள், பொலிஸ்காரர்கள் மட்டுமல்லாது சில பொது மக்களும் குண்டு வெடிப்புகளுக்கு பலியானார்கள். அனேகமாக, பொது மக்களின் உயிரிழப்புகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு குறைந்திருக்கலாம்.

ஹாங்காங் கம்யூனிஸ்ட் கிளர்ச்சி முறியடிக்கப் பட்டமைக்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

  1. ஆயிரக் கணக்கான குண்டுகள் செயலிழக்க செய்யப் பட்டன அல்லது வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. 
  2. நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இரகசிய மறைவிடம் கண்டுபிடிக்கப் பட்டது. 
  3. கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள். ஆயிரக் கணக்கானோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அதை விட, ஆயிரக் கணக்கானோர் சீனாவுக்கு நாடுகடத்தப் பட்டனர். 
  4. எல்லாவற்றிற்கும் அப்பால், செஞ்சீனத்தின் ஆதரவு கிடைக்காமல் விட்டமை ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது. 


உண்மையில், மாவோ தலைமையிலான செஞ்சீனம், ஹாங்காங் புரட்சியை ஆரம்பத்தில் வரவேற்று ஆதரித்திருந்தது. ஹாங்காங் ஆதரவு போராட்டங்களையும் நடத்தி இருந்தது. ஆயினும், கிளர்ச்சி உச்சகட்டத்தை அடையும் நேரம், சீனப் படைகள் ஹாங்காங்கை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது. சிலநேரம் சீனத் தலைமையிடம் அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தாலும், பின்னர் கைவிடப் பட்டது. பிரிட்டனுடன் நேரடியாக மோதும் நிலையை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹாங்காங் சீனாவுக்கு திரும்பக் கிடைக்க இருந்தது என்பதையும் மறந்து விடலாகாது. இன்னொரு ஐரோப்பிய காலனியான மாக்காவ், போர்த்துக்கேயரின் பலவீனம் காரணமாக, ஏற்கனவே சீன ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது.

1967 கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் விளைவாக ஹாங்காங் ஒரு வகையில் நன்மை அடைந்தது என்றே கூற வேண்டும். ஏனென்றால், அது வரைக்கும் ஒரு வறிய நாடாக இருந்த ஹாங்காங், அதற்குப் பிறகு தான் பணக்கார நாடாக மாறியது. மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி உண்டாவதை தடுக்கும் நோக்கில், பிரிட்டிஷ் நிர்வாகம் பல விட்டுக் கொடுப்புகளை செய்தது. ஹாங்காங் சீனர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. பிரிட்டனில் இருப்பதைப் போன்று, சமூக நலத்துறை உருவாக்கப் பட்டது.

பிரிட்டிஷ் நிர்வாகம், புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி,  வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தது மட்டுமல்லாது, ஊதியமும் உயர்த்தப் பட்டது. ஹாங்காங் துறைமுகம் ஆசியாவில் மிகவும் முக்கியமான துறைமுகமாக மாறியது. இன்றைக்கும் ஹாங்காங்கின் பெருமளவு வருமானம் துறைமுகத்தில் இருந்து கிடைக்கின்றது. மொத்தத்தில், ஹாங்காங் ஆசியாவில் வளர்ந்து வரும் (முதலாளித்துவ) பொருளாதார அதிசயமாக மாற்றிக் காட்டப் பட்டது. கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்திரா விட்டால், ஹாங்காங் இன்றைக்கும் ஒரு வறிய நாடாகவே தொடர்ந்தும் இருந்திருக்கும்.

ஹாங்காங்கில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், 1997 ஆம் ஆண்டு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆசியாவின் "புலிப் பாய்ச்சல் பொருளாதார வளர்ச்சி" அத்துடன் முடிவுக்கு வந்தது. ஹாங்காங் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. 1997 நெருக்கடியில் இருந்து மீண்டு வருகையில், 2007 ஆம் ஆண்டு இன்னொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது ஹாங்காங்கில் வேலையில்லாப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

உயர்கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும், குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். அதை விட மாதாந்த ஊதியத்தில் அரைவாசி வீட்டு வாடைகைக்கு செலவிட வேண்டும். சுருக்கமாக, பொருளாதார நெருக்கடி காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஹாங்காங்கில் ஏற்பட்டன.

உலகில் பல இயக்கங்கள், தாங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக போராடுவதாக சொல்லிக் கொள்வதில்லை. ஹாங்காங்கின் ஜனநாயக இயக்கமும் அப்படித் தான். வெளிப்பார்வைக்கு மட்டும் தான் அது ஜனநாயகத்திற்கான இயக்கம். உள்ளே அது இனவாதிகள், பிரதேசவாதிகள், தீவிர வலதுசாரிகளின் ஆளுமைக்குள் உள்ளது. அது மட்டுமல்ல, முன்னாள் பிரிட்டிஷ் காலனிய எஜமானான பிரிட்டனின் பங்களிப்பும் உள்ளது. ஜனநாயகம் கோரும் மாணவர்கள் சிலர், வெளிப்படையாகவே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை ஆதரிக்கின்றனர்.

1967 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முடிவில், பிரிட்டிஷ் நிர்வாகம் பெரியதொரு சமூக சுத்திகரிப்பை செய்திருந்தது. காலனிய எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்டுகள் போன்றோரை பிடித்து சிறையில் அடைத்தது அல்லது சீனாவுக்கு நாடு கடத்தி இருந்தது. சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சிகளை மட்டும் இயங்க அனுமதித்தது. மேலும், தீவிர வலதுசாரிகள், காலனிய விசுவாசிகள் போன்றோரை வளர்த்தெடுத்தது. அன்று பிரிட்டிஷ்காரர்கள் நடைமுறைப் படுத்திய திட்டங்கள், இன்று பலன் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு, காலனிய கடந்த காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலதிக தகவல்களுக்கு:

Tuesday, October 21, 2014

கம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற்கு...


ஒரு முதலாளித்துவ நாட்டில் மனிதர்கள் வேலை தேடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் வேலை மனிதர்களை தேடும். 

முன்னாள் சோஷலிச நாடுகளில், "மக்களை வருத்திய, கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கொடுங்கோன்மைகள்" இவை:


  1. ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை, அனைவருக்கும் இலவச கல்வி. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி. 
  2.  சாதாரண காய்ச்சல் முதல் சத்திர சிகிச்சை வரையில், அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி. 
  3. வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள். 
  4.  மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தை சுற்றி வரலாம். 
  5. ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும், சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுலாப் பயணம். 
  6. ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் அறவிடப் பட மாட்டாது. 
  7. அனைவருக்கும் இலவச வீட்டு வசதி அல்லது வீட்டு வாடகை மிக மிகக் குறைவு. மின்சார, எரிவாயு செலவினங்களும் மிக மிகக் குறைவு. அதனால், மாத முடிவில் சம்பளத்தில் பெருந்தொகை பணம் மிச்சம் பிடிக்கலாம். 
  8. சொந்த வீடு, சொந்த வாகனம் வாங்க விரும்புவோர், அதற்காக பெருந்தொகைப் பணம் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டி அவதிப் படத் தேவையில்லை. அரசாங்கமே செலவை பொறுப்பேற்கும்.


இதைப் பற்றி கேள்விப் பட்ட பிறகும், ஒருவர் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார் என்றால், நிச்சயமாக அவர் ஒரு சமூக விரோதியாகத் தான் இருப்பார்.


  • ஒரு சந்தேகம். மக்கள் வரிப்பணம் இருந்தால்தான் அரசை இயக்க முடியும். அது இல்லாமல் எப்படி மேல் கூறியவற்றை இலவசமாக வழங்க. முடியும் அரசுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்?


ஒரு முதலாளித்துவ நாட்டில், உற்பத்தி சாதனங்கள் யாவும் முதலாளிகளின் சொந்தமாக இருக்கும். பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்பது அவர்களது கொள்கை. முதலாளிகள் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். மக்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால், முதலாளித்துவ பொருளாதாரம் நிலவும் எல்லா நாடுகளிலும், அரசு வரி அறவிடுகிறது. அனைத்துப் பிரஜைகளிடமும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி எடுக்கிறது. 

ஆனால், சோஷலிச நாடுகளின் பொருளாதாரம் வேறு விதமாக இயங்குகின்றது. அங்கே முதலாளிகளின் ஆதிக்கம் கிடையாது. சோஷலிச நாட்டில் பெரும்பான்மை பொருளாதார உற்பத்தி, அரசுடமையாக இருக்கும். அதை விட கூட்டுறவு அமைப்பு பொருளாதாரமும் இருக்கும். அரசு நிறுவனமாக இருந்தாலும், கூட்டுறவு நிறுவனமாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒரு சராசரி நிறுவனம், தனது உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்திய பின்னர் கிடைக்கும் இலாபத்தை பொதுவாக இரண்டாகப் பிரிக்கும். ஒரு பகுதி அரசு செலவினங்களுக்காக கொடுக்கப் படும். மறு பகுதி மீள முதலீடு செய்வதற்கு அல்லது தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு செலவிடப் படும். 

உதாரணத்திற்கு, தொழிலாளர்களின் கல்வி, குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வூதியம், விடுமுறையில் சுற்றுலா ஸ்தலங்களில் தங்குவதற்கான செலவுகள் போன்றவற்றை சம்பந்தப் பட்ட நிறுவனம் பொறுப்பெடுக்கும். நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து, பொது மருத்துவம், பொதுக் கல்வி போன்ற செலவுகள் அரசின் பொறுப்பு. முதலாளித்துவ நாடுகளில் ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தின் பெரும் பகுதி முதலாளிகளின் சுகபோக வாழ்வுக்கு செலவிடப் படுகின்றது. ஆனால், சோஷலிச நாடுகளில், அந்தப் பணம் மக்களின் நன்மைக்காக செலவிடப் படுகின்றது. 


  •  அவை எந்தெந்த நாடுகள். அந்த நாடுகளின் இன்றைய நிலைமை என்ன? 


முன்னாள் சோவியத் யூனியன் உட்பட, பல ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. இதை நான் சொல்லவில்லை. உலகவங்கி, IMF அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகள் அளவு இல்லா விட்டாலும், அவற்றை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்த படியால் அவை இரண்டாம் உலக நாடுகள் என்று அழைக்கப் பட்டன. (மேற்கத்திய நாடுகளின் மூலதன திரட்சியை மறந்து விடலாகாது.) ஆனால், மூன்றாமுலக நாடுகளில் இருந்த சோஷலிச நாடுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளாக கருதப் பட்டன. 

ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளின் பொருளாதாரம், தொண்ணூறுகளுக்கு பிறகு முதலாளித்துவத்திற்கு மாற்றப் பட்டது. தேசம் முழுவதும் விற்பனைக்காக திறந்து விடப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் தாம் விரும்பிய நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கினார்கள். அனேகமாக அடி மாட்டு விலை என்பது போல, பெறுமதிக்கு குறைவாக பணம் கொடுத்தார்கள். குறைந்தளவு தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பினார்கள். அதனால், ஒரே காலத்தில் ஆயிரக் கணக்கானோர் வேலை இழந்தனர். 

அது மட்டுமல்ல, எந்த முதலாளியும் வாங்க விரும்பாத நிறுவனங்கள் பல கை விடப் பட்டன. அவற்றின் உற்பத்தி நின்று போனது. இயந்திரங்கள் துருப் பிடித்தன. அங்கே வேலை செய்து வந்தவர்களும், வேலை இழந்து வீட்டில் தங்க வேண்டிய நிலைமை. வேலையில்லாதவர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. முதலாளித்துவ அரசு அவர்களைப் பொறுப்பெடுக்கவில்லை. இதனால் நாட்டில் வறுமை அதிகரித்தது.



இது முன்னாள் சோவியத் யூனியனின் மிகப் பெரிய கார் உற்பத்தித் தொழிற்சாலை VAZ (Volzhsky Avtomobilny Zavod). வோல்கா நதிக்கரையில் உள்ள தொல்யாத்தி நகரில் அமைந்துள்ளது. (தொல்யாத்தி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் பெயர்.) VAZ, முழு ஐரோப்பாக் கண்டத்திலும் உள்ள மிகப் பெரிய கார் தொழிற்சாலைகளில் ஒன்றாக கருதப் படுகின்றது. தொழிற்சாலைக் கட்டிடங்களை கீழேயுள்ள படத்தில் காண்கிறீர்கள். 

மேலிருந்து இடது புறமாக: 
முதலாவது படம்: VAZ தொழிற்சாலையில் இளம் குடும்பஸ்தர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பையும் தொழிற்சாலை எடுத்துக் கொண்டது. 

இரண்டாவது படம்: முடிந்த அளவுக்கு விரைவாக, தொழிலாளர்களுக்கு புது வீடு எடுத்துக் கொடுக்கும் பொறுப்பை தொழிற்சங்கம் ஏற்கின்றது.

மூன்றாவது படம்: தொழிற்சாலையின் கல்வி நிலையம்: ஒவ்வொரு வருடமும் குறைந்தது முப்பதாயிரம் தொழிலாளர்கள் கல்வி கற்கின்றனர். 

நான்காவது படம்: வாசிக சாலை. தொழிலாளர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, VAZ தொழிலகத்தினுள் மொத்தம் 58 நூலகங்கள் இயங்கி வந்தன.

(நன்றி: De Vakbonden in de USSR (சோவியத் யூனியனில் தொழிற்சங்கங்கள்), நோவொஸ்தி பதிப்பகம், மொஸ்கோ, 1984)

Sunday, October 19, 2014

அனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா "கம்யூனிச சர்வாதிகாரம்"!


ஜெர்மன் மொழிப் படமான "Barbara", முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், எண்பதுகளில் நடக்கும் கதை ஒன்றை சொல்கின்றது. பெர்லின் நகரில் கடமையாற்றிய இளம் பெண் மருத்துவரான பார்பரா, விசாவுக்கு விண்ணப்பித்த காரணத்தால், புலனாய்வுத்துறையின் (Stasi)  சந்தேகத்திற்கு ஆளாகின்றார். அதனால், தொலைதூரத்தில் உள்ள பால்ட்டிக் கடலோரம், ஒரு நாட்டுப்புற மருத்துவமனைக்கு இடம் மாற்றப் படுகின்றார்.

 "சோஷலிச சர்வாதிகாரத்தை" வெறுக்கும் பார்பரா, மேற்கு ஜெர்மனியில் இருந்து வர்த்தக நோக்குடன் வந்து செல்லும் ஒருவனைக் காதலிக்கிறாள். காட்டிலும், ஹோட்டலிலும் இரகசியமாக சந்தித்து, விலை உயர்ந்த மேற்கத்திய பாவனைப் பொருட்களை பரிசாகப் பெற்றுக் கொள்கிறாள். எப்படியாவது அவனுடன் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லத் திட்டமிடுகிறாள். இரகசியமாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக பயணம் செய்யத் தயாராகும் நேரத்தில், ஓர் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.

பார்பரா வேலை செய்யும் மருத்துவமனையில், சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட பெண் கைதி ஒருவரை அனுமதிக்கிறார்கள். பார்பரா அந்தக் கைதியின் நன்மதிப்பை பெற்ற வைத்தியர் ஆகிறார். வருத்தம் குணமானவுடன் மீண்டும் சிறை முகாமுக்கு கொண்டு செல்லப்படும் அந்தப் பெண் கைதி, எதிர்பாராத விதமாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடுகிறாள். பார்பராவின் வீட்டிற்கு வரும் அவளை, இரகசியமாக கொண்டு சென்று தன்னை கூட்டிச் செல்ல வரும் பயண முகவரிடம் ஒப்படைக்கிறாள். பார்பரா இறுதியில் மனம் மாறி, கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுவது தான் கதை.

மருத்துவமனையில் தலைமை மருத்துவரான அன்ட்ரே ரைசர், பார்பராவின் கடமை உணர்ச்சி மீது நன்மதிப்பு வைத்திருக்கிறார். காலப்போக்கில் அவரை விரும்புகிறார். ஆனால், பார்பரா நாகரிகமாக ஒதுங்கிக் கொள்கிறார். இதற்கிடையே, அன்ட்ரே ரைசர் புலனாய்வுத்துறைக்கு தகவல் அனுப்பும் உளவாளி என்ற உண்மை தெரிய வருகின்றது. அதற்காக அன்ட்ரே கூறும் காரணத்தை நம்ப மறுக்கிறாள். 

சோஷலிச அமைப்பிற்கு விசுவாசமான அன்ட்ரே, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மருத்துவரின் கடமை உணர்ச்சி பற்றி, அடிக்கடி பார்பராவுக்கு அறிவுறுத்துகிறார். அவரது கருத்துக்கள் மட்டுமல்லாது, நோயாளிகளுக்கு சேவை செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும், பார்பராவின் மனதை மெல்ல மெல்ல மாற்றுகின்றது. அதனால், இறுதியில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓடாமல், அன்ட்ரேயுடன் கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுகிறார்.

பார்பரா, கிழக்கு ஜெர்மன் அரசையும், வாழ்க்கையையும் வெறுப்பதை, படம் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார். ஓரிடத்தில், சோஷலிச அரசாங்கம் தனது இட மாற்றத்திற்கு தெரிவித்த காரணத்தை விரக்தியுடன் கூறுகின்றார்: "உனது மருத்துவப் படிப்புக்கு தொழிலாளர்களும், விவசாயிகளும் செலவு செய்துள்ளனர். நீ அந்தக் கடனை அடைக்க வேண்டும்..." அதைக் கேட்கும், தலைமை மருத்துவர், "அந்தக் காரணம் தவறானது அல்லவே!" என்று பதிலளிக்கிறார்.

இந்தத் திரைப்படம் சோஷலிச ஜெர்மன் அரசுக்கு சார்பானது அல்ல. (2012 ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டு வெளியானது.) மேலைத்தேய பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில், "கம்யூனிச சர்வாதிகாரத்தைக்" காட்டும், பல எதிர்மறையான காட்சிகள் உள்ளன. இருப்பினும், ஒரு நகரத்தில் பணியாற்றிய மருத்துவரை, நாட்டுப்புற மருத்துவ மனைக்கு இடம் மாற்றிய காரணம், படத்தில் அப்படியே பதிவு செய்யப் பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது.

குறிப்பாக, இலங்கையில் பல மருத்துவர்கள் மக்களின் வரிப் பணத்தில் படித்து முடித்தவுடன், நகர்ப்புறங்களில் தங்கி வேலை செய்கின்றனர். இந்தியாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எத்தனை மருத்துவர்கள், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்கின்றனர்?

ஒரு சோஷலிச நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு கடமைப் பட்டுள்ளதை உணர்த்துகின்றனர். அவர்களை வசதியான நகரங்களில் தங்க விடாது, வசதி குறைந்த கிராமங்கள், நாட்டுப்புற மருத்துவ மனைகளுக்கு அனுப்புகின்றனர்.

முன்னாள் சோஷலிச நாடுகளின் "சர்வாதிகாரம்" பற்றி, மேட்டுக்குடியினர் அழுது புலம்புவது இதனால் தான். இந்தியா, இலங்கை போன்ற வறிய நாட்டு மக்களின் வரிப் பணத்தில் படித்த மருத்துவர்கள், அந்த மக்களுக்கு சேவை செய்யாமல், அமெரிக்கா சென்று டாலர்களுக்காக வேலை செய்கின்றனர். அப்படிப் பட்ட அயோக்கியர்கள், கம்யூனிசத்தை வெறுப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?


திரைப்படத்திற்கான இணைப்புகள்:

Saturday, October 18, 2014

புதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆடைத் தொழிற்சாலை

தமிழினப் படுகொலை நடந்த புதுக்குடியிருப்பில், ஏகாதிபத்திய தரகு முதலாளிகளின் சுரண்டல் ஆரம்பம். தமிழ்ப் பெண் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, அமெரிக்கர்களின் பாவனைக்கான மலிவு விலை ஆடைகளை தயாரிப்பதற்கு, வன்னியை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம் உதவி வருகின்றது.

தமிழர்களுக்கு எதிரான, சிங்கள பேரினவாத அடக்குமுறைக்கும், தரகு முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் என்ன தொடர்பு? "இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டுமே.... முதலாளித்துவ/ஏகாதிபத்திய பிரச்சினை அல்ல..." என்று பல படித்த மேதாவிகள் கூட நம்புகிறார்கள். அவர்கள் தேசியவாதம் என்ற வரட்டு சூத்திரத்தை நம்பி, தாங்களும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

ஹிர்டாரமணி குரூப் (The Hirdaramani Group), இலங்கையின் மூன்றாவது பெரிய ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனம். கடந்த பல தசாப்தங்களாக, மலிவு விலை ஆடைகளை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இது வரை காலமும் தென்னிலங்கை தொழிலாளர்களை சுரண்டிக் கொழுத்த தரகு முதலாளிய நிறுவனம், ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் வட இலங்கைத் தொழிலாளர்களையும் சுரண்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் போட்டுள்ள தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது புதுக்குடியிருப்பில் புதிதாக இன்னொரு தொழிற்சாலையை கட்டவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்மையான ஆட்சியாளர்களான இராணுவ அதிகாரிகளே, புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி உள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை, அடுத்த வருடம் அளவில் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப் படுகின்றது. முதற் கட்டமாக, 450 தமிழ்ப் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அடுத்த சில வருடங்களில், ஆயிரக் கணக்கான தமிழ் யுவதிகள் அங்கே வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஹிர்டாரமணி குரூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் டோனி நடராஜா என்ற ஒரு தமிழர் தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

முல்லைத்தீவில், சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ், புதிய தொழிலாளர்களுக்கான தொழிற்பயிற்சி இப்போதே ஆரம்பமாகி விட்டது. வெகு விரைவில், ஈழத் தமிழ்ப் பெண்களிடம் சுரண்டப் பட்ட உழைப்பு, அமெரிக்கக் கடைகளில் மலிவுவிலை ஆடைகளாக விற்பனை செய்யப் படும்.

ஈழப் போர் - சிங்கள பேரினவாதம் - அமெரிக்க ஏகாதிபத்தியம், இவற்றுக்கு இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள், கண்களை மூடிக் கொண்டிருக்கலாம். "ஏகாதிபத்தியம் எங்கே இருக்கிறது? இலங்கையில் இருப்பது இனப் பிரச்சினை மட்டும் தான்..." என்று ஒரே பல்லவியை திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கலாம்.

எதற்காக மூலதனமும், தரகு முதலாளிய நிறுவனங்களும் வன்னியை தேர்ந்தெடுத்தன? சீனாவில் உள்ள ஆடை ஏற்றுமதித் தொழிற்துறைக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, வட இலங்கைக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. தென்னிலங்கையில், கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் இடதுசாரிக் கட்சிகளின் தூண்டுதல் காரணமாக, சிங்களத் தொழிலாளர்கள் தமது உரிமைகளை கேட்டுப் போராடி வருகின்றனர். தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமைகளை அரசே மறுத்து வந்த போதிலும், தொழிலாளர்களின் இடையறாத போராட்டம் காரணமாக உத்தியோகபூர்வமற்ற தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின.

வட இலங்கையில் இடதுசாரிகளின் தொல்லை கிடையாது. தமிழ்த் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு, இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம். மேலும், முதலாளியத்திற்கு ஆதரவான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்கள் தேசியவாத மாயைக்குள் கட்டுண்டு கிடக்க உதவுகின்றனர். இது போன்ற அரசியல் நிலைமை, ஏகாதிபத்தியத்திற்கும், சிங்கள தரகு முதலாளித்துவத்திற்கும் மிகவும் உகந்தது. 

தமிழினப் படுகொலை நடந்த வன்னிப் பிரதேசம், வருங்காலத்தில்  தரகு முதலாளிகளின் சொர்க்கபுரியாக மாறப் போகின்றது. அன்று நடந்தது தமிழினப் படுகொலை, இனிமேல் நடக்கப் போவது தமிழின சுரண்டல். புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாது, கிளிநொச்சியிலும் ஆயத்த ஆடைத் தொழிலகங்கள் உருவாகி வருகின்றன. அதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டன. 

வன்னியில் தரகு முதலாளிகளின் ஊடுருவல் காரணமாக தொழிற்துறை வளர்ச்சி அடையும் பொழுது, அங்கே தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கமும் பெருகும். காலப்போக்கில், தமிழ்த் தொழிலாளர்களும் தமது உரிமைகளை கேட்டுப் போராடுவார்கள். அப்போது அந்த உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு தயாராக, அருகிலேயே இராணுவ முகாம்கள் இருக்கின்றன. ஈழப் போரின் முடிவில், வட இலங்கையை ஆக்கிரமித்த சிங்கள இராணுவம் வெளியேற்றப் பட வேண்டும் என்று, ஏகாதிபத்தியம் பாசாங்குக்கு கூட முணுமுணுக்காத காரணமும் அது தான்.

மேலதிக தகவல்களுக்கு: 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Friday, October 17, 2014

அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்!


அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்! உங்களது பொது எதிரிகளான உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாது, மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரித்து வைத்திருப்பீராக! இனவாதிகளும், தேசியவாதிகளும் ஆண்டவரால் இரட்சிக்கப் படுவீர்கள். ஆமென்!

போப்பாண்டவர் பிரான்சிஸ், ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச அதே மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. "தேர்தலில் உதவுபவனே உண்மையான நண்பன்!"

வத்திக்கான் திருச்சபையின் வரலாறு நெடுகிலும், போப்பாண்டவர்கள் சர்வாதிகாரிகளுடன் ஒத்துழைத்து வந்துள்ளனர். ராஜபக்சவுக்கு வத்திகானின் ஆசீர்வாதம் கிடைப்பதை எதிர்த்து, எந்தவொரு போலித் தமிழ் உணர்வாளரும் முணுமுணுக்கக் கூட இல்லை. "ஆண்டவரின் மண்ணுலக பிரதிநிதியை" பகைத்துக் கொள்ள விரும்பவில்லை போலும்.

போப்பாண்டவரின் இடத்தில், காஸ்ட்ரோ, ஏவோ மொராலேஸ், அப்பாஸ் இருந்திருந்தால், இந்நேரம் அதைப் பற்றி ஊரெல்லாம் தண்டோரா போட்டு சொல்லித் திரிந்திருப்பார்கள். என்னதான் தமிழ் தேசியவாதி வேடம் போட்டாலும், முதலாளிய வர்க்க பாசம் அவர்களை அறியாமல் தலை காட்டி விடுகின்றது.

கம்யூனிஸ்டுகளை கண்டியுங்கள் என்று சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கேட்கின்றனர். அப்படியே செய்யலாங்க... ஆனால் ஒரு பிரச்சினைங்க... "தொண்ணூறுகளில் கம்யூனிசம் இறுதி மூச்சை விட்டது. புதைகுழிக்குள் சென்று விட்டது..." என்று மெத்தப் படித்த அறிவாளிங்க சொன்னாங்க... அதை எல்லோரும் நம்பிட்டோமுங்க... இப்போது "கம்யூனிச ஆவிகள் நடமாடுகின்றன" என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க... அது எப்படி என்று அறிவுஜீவிகள் மக்களுக்கு விளக்கி சொன்னா நல்லதுங்க...

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி இவற்றைப் பற்றி யாரும் பேசக் காணோம். முழு இலங்கையிலும், வட-கிழக்கு மாகாணங்கள் தான் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையும் அங்கே அதிகம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு தமிழ் உணர்வாளரும் பேசுவதில்லை. போலி சிங்களதேசியவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அதிகாரத்தை பங்கு போடுவதை பற்றிப் பேசும் பல மணி நேரத்தில், ஒரு துளியாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு செலவளிப்பதில்லை.

தனது நலன்களை மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கும், மத்தியதர வர்க்கத்தின் பூர்ஷுவா அரசியலால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு எந்தப் பிரயோசனமுமற்ற வெற்று அரசியல் கோஷங்கள், காலப்போக்கில் அதே மக்களால் நிராகரிக்கப் படும்.

அனைத்து வகை அதிகாரங்களையும், தமிழ் உழைக்கும் மக்கள் கைக‌ளில் குவிப்பதற்காக போராடுவதே உண்மையான தமிழ் தேசியம். அதற்கு மாறாக, தமிழ் முதலாளிகளின் ஆட்சியை கொண்டுவர விரும்புவது போலித் தமிழ்தேசியம் ஆகும்.

Monday, October 13, 2014

குர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச் சாலை


ஐரோப்பிய நகரங்களில், புலம்பெயர்ந்த குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னர், மேற்கத்திய நாடுகளின் துரோகம் அம்பலப் பட்டது. ஏற்கனவே, ஈழப்போரின் இறுதியில், மேற்கத்திய நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இளைத்திருந்தன. ஆயினும், அமெரிக்க விசுவாசிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்களின் கோபாவேசம் மேற்குலகிற்கு எதிராக திரும்பி விடா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.

குர்து மக்களைப் பொறுத்தவரையில், மேற்கத்திய நாடுகளைப் பற்றிய பிரமை எதுவும் அவர்களிடம் இல்லை. ஜெனீவாவில் குர்திஸ்தான் கிடைக்கும் என்று யாரும் நம்பவில்லை. அதற்குக் காரணம், குர்து விடுதலை இயக்கமான PKK தலைவர் ஒச்சலானின் கைதுக்குப் பின்னர், தேசியவாதக் கருத்தியலில் வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டது.

தொண்ணூறுகள் வரையில், PKK மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது. ஆயினும், தேசியவாதத்தின் பிற்போக்குக் கூறுகள், இயக்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊறி இருந்தன. தற்போது சிறையில் இருந்து கொண்டு சுய விமர்சனம் செய்து வரும் ஒச்சலான், அதை தனது கடிதப் பரிமாற்றங்களில் குறிப்பிட்டுள்ளார்.

சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் தோன்றிய சர்வதேச நெருக்கடி PKK இலும் உணரப் பட்டது. மறைமுகமான சோவியத் உதவி நின்ற பின்னர், அது தன்னை வெறும் தேசியவாத இயக்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. ஆயினும், இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த இயக்கம் என்பதால், அதனுள்ளே சித்தாந்தம் தொடர்பாக பல விவாதங்கள் நடைபெற்றன.

இடையில் பல வருடங்களாக நடந்த சித்தாந்தப் போரின் விளைவாக, லிபர்ட்டேரியன் அனார்க்கிச கொள்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இந்த விடயம், உலகின் பிற நாடுகளில் வாழும் பெரும்பாலான அனார்க்கிஸ்டுகளுக்கு தெரியாது. பல வருடங்களாக, PKK இந்த விடயத்தை வெளியில் விடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

துருக்கி, ஏகாதிபத்திய நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக, நேட்டோவில் மிகப் பெரிய இராணுவத்தை கொண்டுள்ள நாடு துருக்கி ஆகும். அதனால், குர்து மக்களின் போராட்டம், ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு நேரடியாகவே முகம் கொடுக்கும் நிலையில் உள்ளது.

தங்களை மார்சிஸ்டுகளாக, அல்லது அனார்க்கிஸ்டுகளாக காட்டிக் கொண்டால், தம்மை அழிக்க முற்படுவார்கள் என்று PKK நினைத்திருக்கலாம். அதனால், PKK இனர் தொடர்ந்தும் தேசியவாதிகள் போன்றே நடித்து வந்தனர். குர்து மக்கள் மத்தியிலும் தேசியவாதப் போக்குகளை ஊக்குவித்து வந்தனர். உண்மையில், PKK தேசியவாதத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தி, திரை மறைவில் சோஷலிச பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தது.

சிரியாவில் PKK கட்டுப்பாட்டில் வைத்திருந்த குர்து மக்களின் பிரதேசம், ஜனநாயக பரிசோதனைச் சாலையாக இருந்தது. மக்கள் நேரடியாக பங்கேற்கும் உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப் பட்டன.(https://www.academia.edu/3983109/Democratic_Confederalism_as_a_Kurdish_Spring_the_PKK_and_the_quest_for_radical_democracy) ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும், சுய சார்புப் பொருளாதாரம் கொண்ட தனித் தனி நாடுகளாக வடிவமைப்பது அவர்களது நோக்கம். (PKK தனிநாட்டுப் பிரிவினைக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதற்குப் பதிலாக குர்திஸ்தான் சமஷ்டி அதிகாரத்திற்காக போரிடுகின்றது.)

அமெரிக்க அனார்க்கிஸ்டும், சூழலியல்வாதியுமான புக்சின் (Murray Bookchin) அவர்களது தத்துவ ஆசிரியராக இருந்தார். உண்மையில் அது, கடிதத் தொடர்புகள், மின்னஞ்சல்கள் மூலமான வழிகாட்டுதலாக இருந்தது. (புக்சின் 2006 ம் ஆண்டு காலமானார்.) அவரது தத்துவமான Libertarian municipalism, "குர்திஸ்தான் சமூகங்களின் அமைப்பு" என்று, மண்ணுக்கேற்றவாறு மாற்றப் பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நடந்த அனார்க்கிஸ்ட் ஒன்றுகூடல்களில், குர்திய ஆர்வலர்களும் பங்குபற்றியுள்ளனர்.

"PKK உண்மையிலேயே ஜனநாயக - சோஷலிசத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது என்றால், அது முதலில் ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும்..." என்று ஈராக்கிய குர்திஷ் அனார்க்கிஸ்ட் ஆர்வலர் ஒருவர் கூறினார். இருப்பினும், முன்பிருந்ததை விட, தற்போது PKK பெருமளவு மாறி விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், PKK குர்திஷ் பிரதேசங்களில் மாற்று இயக்கங்களை இயங்க அனுமதிக்கவில்லை. ஆயினும், சில வருடங்களின் பின்னர், துருக்கி கம்யூனிஸ்டுகளின் ஆதரவு காரணமாக, குர்திஷ் கம்யூனிஸ்டுகளை இயங்க அனுமதித்தார்கள்.

சிரியாவில், YPG என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு, சிரிய குர்து மக்களின் விடுதலை இயக்கம் போன்று இயங்கியது. வெளியுலகம் அவ்வாறு நினைக்க வைக்கப் பட்டது. உண்மையில் YPG என்பதன் அர்த்தம் "மக்கள் பாதுகாப்புப் பிரிவு". அதே மாதிரி YPJ என்ற "மகளிர் பாதுகாப்புப் பிரிவு" சமாந்தரமாக இயங்கத் தொடங்கியது. சிரியாவில், மதச்சார்பற்ற, பெண்களுக்கும் சம உரிமை வழங்கிய சமூகக் கட்டமைப்பானது, ISIS போன்ற மதவாதிகளின் கண்களை துருத்திக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.

உண்மையில், சிரியாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சோஷலிச அடிப்படையிலான ஜனநாயக சமூகம், மேற்கத்திய முதலாளிய நாடுகளுக்கும் எரிச்சலூட்டி இருக்கலாம். அதனால், ISIS படையினர் குர்திஸ்தான் சுயாட்சிப் பிரதேசத்தை கைப்பற்றுவதை தடுக்கவில்லை. சிரியா குர்திஸ்தானில் ஒரு இனப்படுகொலை நடக்குமாக இருந்தால், அதற்கு மேற்குலகமும் பொறுப்பேற்க வேண்டும். மேற்குலகம் குர்து மக்களுக்கு துரோகம் இழைப்பது, இனிமேலும் நடக்கலாம்.

Sunday, October 12, 2014

போலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே!

போலித் தமிழ்தேசியவாதிகள், போலி சிங்களதேசியவாதிகள், போலி இஸ்லாமியவாதிகள்... இவர்கள் தமக்குள் கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரே ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், முதலாளிகளின் கைக்கூலிகள் தான் என்பதை, கடைசியில் எப்படியோ நிரூபித்து விடுவார்கள்.



தமிழினவாதிகள் போன்று, இஸ்லாமிய மதவாதிகளும், கம்யூனிஸ்டுகள் எனப் படுவோர் "செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்து குதித்த வேற்றுக் கிரக வாசிகள்" என்பது போல நினைத்துக் கொள்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், ஆப்கானியர்கள் தான் கம்யூனிஸ்டுகளாக இருந்தார். ஆப்கான் கம்யூனிஸ்டுகளின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகத் தான், சோவியத் யூனியன் படைகளை அனுப்பியது.

"ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்திருந்தது" என்பது ஒரு அமெரிக்காவின் பிரச்சாரம். சோவியத் இராணுவம் வருவதற்கு முன்னரே, மத அடிப்படைவாத முஜாகிதீன் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. அந்த இயக்கங்களுக்கு சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் கிடைத்து வந்தன.

அரபு நாடுகளிலும், அரபு கம்யூனிஸ்டுகள் அல்லது சோஷலிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தனர். சிரியா, தென் யேமன், எகிப்து போன்ற சில நாடுகளைக் குறிப்பிடலாம். அவ்வாறு தான், சோவியத் யூனியனுக்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளுடன் நட்புறவு ஏற்பட்டது. இன்றைக்கும், ஈராக் முதல் மொரோக்கோ வரையில், அரபு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இங்கே சில போலி இஸ்லாமியவாதிகள் கேட்டுள்ள அபத்தமான கேள்விகளும், அவற்றிற்கான எனது பதில்களும்.

  • கேள்வி: முஸ்லிம் நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளும் இஸ்லாமியவாதிகளும் இணைந்து செயற்பட முடியாமைக்கான காரணங்களாக நீங்கள் எவற்றைக் காண்கிறீர்கள்?

பதில்: இணைந்து செயற்படவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? சில பொதுவான பிரச்சினைகள், கோரிக்கைகளின் கீழ் ஐக்கிய முன்னணி அமைத்த உதாரணங்கள் பல உண்டு. ஆயினும், கொள்கை வேறுபாடுகளும் இருப்பதை மறுக்க முடியாது. அரபு முஸ்லிம் நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், தங்களை மாதிரியே சிந்திக்க வேண்டும் என்று இஸ்லாமியவாதிகள் எதிர்பார்ப்பது ஒரு பாசிஸ மனப்பான்மை. தமிழினவாதிகளிடமும் இதே மாதிரியான போக்கு காணப் படுகின்றது. அவர்களும், எல்லாத் தமிழர்களும் தங்களை மாதிரி பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதலில் சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

  • கேள்வி: அரபு முஸ்லிம் நாடுகளிலுள்ள இஸ்லாமியவாதிகள் (முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர்) அமெரிக்க - மேற்கு நலன் பேணுபவர்களல்லர். கம்யூனிஸ்டுகளும் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள். எனவே, இந்தப் புள்ளியில் இணையும் இந்த இரு குழுவினரும் முரண்படும் புள்ளிகள் எவை?


பதில்: இப்படி கருப்பு-வெள்ளையாக பார்க்க முடியாது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை உருவாக்கியதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது. பாகிஸ்தானிலும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் பின்னால் பிரிட்டன் இருந்தது. அண்மையில் சிரியாவில் நடக்கும் போரில், இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், மேற்குலகின் உதவி பெற்றுப் போராடுவதற்கான ஆயிரக் கணக்கான ஆதாரங்கள் உள்ளன. காயப் பட்ட போராளிகளுக்கு இஸ்ரேல் மருத்துவ உதவி செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், ஆரம்பத்தில் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் உதவியைப் பெற்று இயங்கி வந்தன. இஸ்லாமிய நாடுகளில் தோன்றிய கம்யூனிஸ்ட் இயக்கங்களை அழிப்பதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவாத இயக்கங்களை வளர்த்து விட்டன. அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

  • கேள்வி: கம்யூனிஸ்ட்களின் ஆக்கிரமிப்புகளை விடுதலைக்காக எனவும், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பை எண்ணெய்க்கெனவும் கூறுவது நகைமுரண் இல்லையா, கம்யூனிஸ்ட்கள் ஆக்கிரமிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர் இதை பயன்படுத்தி இதன் எதிர் வினையாக கடும் போக்கு கொண்ட மிதவாதிகள் மக்கள் ஆதரவை பெருகிறார்கள் அவர்களுக்கு உதவுவதுபோல் கம்யூனிச எதிர்ப்பால் மேற்குலகம் அவர்களை வளர்த்துவிடுகிறது, இவர்களது பனிப்போர்க்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தேவைப்படுகிறது?


பதில்: கம்யூனிஸ்டுகள் தங்களைத் தாங்களே ஆக்கிரமித்தார்களா? என்னய்யா அபத்தம் இது? முதலில் ஒன்றைப் பற்றி விவாதிக்கும் பொழுது சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உங்களது சகோதரர்கள், சமூகத்தினர் கூட கம்யூனிஸ்டுகளாக இருக்கலாம். 

விளக்கமாக கூறிய பிறகும்.... "விடிய விடிய இராமர் கதை, விடிந்த பிறகு இராமனுக்கு சீதை என்ன முறை" என்று கேட்டது மாதிரி இருக்கிறது உங்களது கேள்வி! "கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு" என்பதற்கு எதிர்ப் பதமாக,  "முதலாளிகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறாமல், அதை "மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறுவதன் காரணம் என்னவோ? உங்கள் மனதில் உள்ள முதலாளித்துவ சார்புத் தன்மை இப்படியான தருணங்களில் தான் அம்பலமாகின்றது.

"முஸ்லிம் நாடுகளில்" உள்ள கம்யூனிஸ்டுகளும், மதத்தால் இஸ்லாமியர்கள் தான். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்த நாடுகளில், "இஸ்லாமியர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக" நீங்கள் கூறுவது ஓர் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம். பிற்போக்காளர்களான மதவெறியர்கள் மட்டும் தான் அடக்கப் பட்டனர். சாதாரண இஸ்லாமிய மக்கள் அல்ல. 

அது வரை காலமும் அதிகாரத்தில் இருந்த பழமைவாதிகள், நிலப்பிரபுக்கள், "இஸ்லாமியர்" என்ற பெயரைச் சொல்லித் தான், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அனைத்து அட்டூழியங்களையும் செய்து வந்தனர். அவர்களை இஸ்லாமிய மக்கள் தான் அடித்து விரட்டினார்கள். கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அதனை "அடக்குமுறை" என்று சொல்வதில் இருந்தே, நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்து விடுகின்றது. நீங்கள் உண்மையில், இஸ்லாமிய மக்களை சார்ந்து சிந்திப்பவர் என்றால், இப்படியான அபத்தமான கருத்துக்களை கூற மாட்டீர்கள்.

  • கேள்வி: சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி தான் நடக்கிறது. அங்கே ஏன் ஜின்ஜியாங் மாநிலத்திலே இஸ்லாமியர்கள் மேல் கொடூரமான தாக்குதல் நடக்கிறது? நோன்பு இருந்தால் பொலிஸ் வலுக் கட்டாயமாக பிடித்து குடிக்க வைப்பார்கள். ஹஜ்ஜுக்கு போனால் வேலை போய் விடும். இதெல்லாம் பார்த்தால் கம்யூனிஸ்டுகள் மேல் வெறுப்பு தான் வருகிறது. காட்டுமிராண்டிகள் அவர்கள்...


பதில்: சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவில் மட்டுமே உள்ளது. அது ஒரு முதலாளித்துவ கட்சியாக மாறி இருபாதாண்டுகள் கடந்து விட்டன. சீனா இன்று முழுக்க முழுக்க ஒரு முதலாளித்துவ நாடு. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும், மனதில் உள்ள கம்யூனிச வெறுப்பின் காரணமாக, அதை உதாரணமாகக் காட்டுகின்றீர்கள். மாவோ காலத்தில், சீனா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், உய்குர் முஸ்லிம்களின் நிலைமை எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு வார்த்தை பேசாததில் இருந்தே, உங்களது போலி இஸ்லாமிய சகோதரத்துவம் அம்பலமாகின்றது.

மேலும், சீனாவில் உய்குர் மாநிலத்தில் மட்டும் இஸ்லாமியர்கள் வாழவில்லை. பிற மாநிலங்களிலும் பெருமளவு இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். சீன மொழி பேசும் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்களும் மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை சந்தித்து உள்ளனரா? இல்லையே. எங்காவது அப்படி நடந்ததாக, நீங்கள் கூட சொல்லவில்லை. அண்மைக் காலமாக, உய்குர் மாநிலத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரை மறந்து விட்டுப் பேசுவது அழகல்ல. 

தீவிரவாத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகளில், சீனப் பொலிஸ் செய்த மனித உரிமை மீறல்களை தான் நீங்கள் பட்டியலிட்டு உள்ளீர்கள். இது போன்ற கொடுமைகள் ஒரு முஸ்லிம் நாட்டில் நடக்க மாட்டாதா? சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமியவாதிகள் பள்ளிவாசல்களை குண்டு வைத்து உடைத்த நேரம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள். சன்னி, ஷியா என்று பிழையான மதப்பிரிவில் பிறந்த காரணத்திற்காக, இஸ்லாமியவாதிகள் அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவித்த நேரம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதை எல்லாம் பார்த்தால், உங்களுக்கு இஸ்லாமியர் மேல் வெறுப்பு உண்டாகியிருக்க வேண்டுமே?

  • கேள்வி: இஸ்லாமிய நாடுகளில் சென்று பாருங்கள். அங்கே யாரும் மற்ற மதத்துக் காரர்களை துன்புறுத்துவது இல்லை.


பதில்: இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்காதீர்கள். பாகிஸ்தான், ஈராக்கில் நடக்கும் சன்னி - ஷியா கலவரங்கள், அதனால் பலியான ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பற்றி எதுவும் கூறாத காரணம் என்ன?

எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப் பட்ட கதைகளை நீங்கள் கேள்விப் படவில்லையா? எத்தனை கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்கள் உடைக்கப் பட்டன என்று தெரியுமா? எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லப் பட்டனர் என்று தெரியுமா? இஸ்லாமியவாதிகளின் ஆட்சி நடக்கும் லிபியாவில், கருப்பின மக்கள் மேல் நிறவெறித் தாக்குதல்கள் நடக்கும் காரணம் என்ன? அந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போன மர்மம் என்ன?

நீங்கள் உண்மைகளை மறைத்து, ஒரு பக்கச் சார்பாக பேசுகின்றீர்கள். இஸ்லாமிய நாடுகளில் எந்த அடக்குமுறையும் கிடையாது என்று நினைப்பது அறியாமை. துருக்கி, ஈராக், ஈரானில் வாழும் குர்து மக்களும் இஸ்லாமியர்கள் தான். அங்கு அரசாங்கத்தில் இருப்பவர்களும் இஸ்லாமியர்கள். குர்து இஸ்லாமியர்களுக்கு எதிராக, இஸ்லாமிய அரசுகள் புரிந்த கொடுமைகள் எத்தனை? அந்தக் கொடூரங்களுடன் ஒப்பிட்டால், சீனாவில் நடந்தவை சிறு பிள்ளை விளையாட்டுப் போல தோன்றும். இஸ்லாமியருக்கு எதிரான இஸ்லாமிய அரசுக்களின் காட்டுமிராண்டித்தனத்தை மறந்து விட்டுப் பேசும் காரணம் என்ன? அவற்றை மறைப்பதன் நோக்கம் என்ன? ஏனென்றால் நீங்கள் ஒரு போலி இஸ்லாமியவாதி.



Saturday, October 11, 2014

இன்னொரு மலாலா : "கம்யூனிஸ்டுகளுக்கு" நோபல் பரிசு கிடைப்பதில்லை!

இந்த வருடம் (2014) சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்த மலாலா பற்றி, உலகம் முழுவதும் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பாகிஸ்தானிய சிறுமியை விட, மகளிர் கல்விக்கு அதிகளவு பங்களிப்புச் செய்த இன்னொரு மலாலா பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. அவருடைய பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் இருக்கும்: மலாலை ஜோயா! பெயரில் மட்டுமல்ல, அரசியல் செயற்பாடுகளிலும் ஒற்றுமை உண்டு. அவர் இன்றைக்கும் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

பாகிஸ்தானிய மலாலா, தாலிபானால் சுடப் பட்ட காரணத்திற்காக மட்டும், மேற்குலக நாடுகளினால் அரவணைக்கப் படவில்லை. அவர் ஒரு சிறுமி. அதனால், மேற்குலக அரசியல் அபிலாஷைகளை அவரின் தலைக்குள் இலகுவாக திணிக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டிஷ் மகாராணி என்று உலகின் மிகப் பெரிய தலைவர்கள் எல்லோரும் சிறுமி மலாலாவை சந்தித்துப் பேசி விட்டார்கள். கடைசியில் நோபல் பரிசும் கொடுத்தாகி விட்டது. இனிமேல் அவர் மேலைத்தேய "அபிவிருத்தி" திட்டங்களின் உள்ளூர்ப் பிரதிநிதியாக கௌரவிக்கப் படுவார். அடுத்த பல தசாப்தங்களுக்கு, பாகிஸ்தானில் மேற்கத்திய கொள்கைகளை நடைமுறைப் படுத்த உதவுவார்.

ஆப்கானிஸ்தானி மலாலா, மேற்குலக அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். வயது முப்பதுக்கு மேலே இருக்கும். ஏற்கனவே இடதுசாரி அரசியல் நிறுவனங்களில் சுறுசுறுப்பாக செயற்பட்டு வருபவர். அதனால், அப்படியான ஒருவர் தனது கொள்கைகளை இலகுவில் மாற்றிக் கொள்ள மாட்டார். ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு உதவ மாட்டார். 

நோபல் கமிட்டி மட்டுமல்ல, சர்வதேச சமூகம் இன்னொரு மலாலாவை கண்டுகொள்ளாமல் விட்டமைக்கு காரணம் இருக்கிறது. மத அடிப்படைவாத தாலிபான்கள் மட்டுமல்ல, ஜனநாயகவாதிகளான மேற்குலக கனவான்களும், "கம்யூனிஸ்டுகள்", "சோஷலிஸ்டுகள்", "இடதுசாரிகள்" போன்றோரை விரும்புவதில்லை. "கம்யூனிஸ்டுகளுக்கு" சர்வதேச அங்கீகாரமும், நோபல் பரிசும் கிடைப்பதில்லை. 

ஆப்கானிஸ்தான் ஒரு காலத்தில் சோஷலிச நாடாக இருந்தது என்பதையும், அங்கு சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்தது என்பதையும், இன்று பலர் மறந்து விட்டிருக்கலாம். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறை, அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கவும் மாட்டார்கள். ஆனால், அந்தக் காலங்களில் பெண்களுக்கு பெருமளவு சுதந்திரம் இருந்தது. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் ஊக்குவித்தார்கள். முக்காடு அணியாத, முகத்தை மூடாத பெண்கள், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று, பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தப் பொற்காலம் இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. 

சோஷலிச அரசாங்கத்தை பாதுகாத்து வந்த சோவியத் இராணுவம் வெளியேறியதும், கடும்போக்கு மதவாதிகளான முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியைப் பிடித்தன. முஜாகிதீன்கள் பிற்போக்குவாத மதவெறியர்களாக மட்டும் இருக்கவில்லை. கிரிமினல்கள், போதைவஸ்து கடத்தல்கார்கள், போன்ற சமூக விரோதிகள் தம்மை புனிதப் போராளிகளாக காட்டிக் கொண்டார்கள். அவர்களுடன் ஒப்பிடும் பொழுது, பிற்காலத்தில் வந்த தாலிபான்களுக்கு ஒரு அரசியல் சித்தாந்தம் இருந்தது என்பது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, தாலிபான் செய்ததையே, முஜாகிதீன்களும் செய்தார்கள். பெண்கள் கல்வி கற்பதை அவர்களும் தடை செய்திருந்தார்கள். 

பாகிஸ்தானில், ஆப்கான் அகதி முகாம்களில், சோஷலிச சிந்தனை கொண்ட பெண்கள் ஒன்று கூடி நிறுவனமயப் பட்டனர். RAWA (Revolutionary Association of the Women of Afghanistan) என்ற பெயரில் உருவான புரட்சிகரப் பெண்கள் அமைப்பு, அகதி முகாம்களில் வாழ்ந்த சிறுமிகளுக்கு கல்வி புகட்டுவதற்காக பாடசாலைகளை நடத்தியது. ஓர் உத்தியோகபூர்வமற்ற பள்ளிக்கூடத்தில் படித்த அகதிச் சிறுமி, பிற்காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவார் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானில் அந்த அதிசயம் நடந்தது. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்த நேரம், அவர்கள் பெண்களின் கல்வி உரிமையை மறுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மகளிர் பாடசாலைகள் அனைத்தும் மூடப் பட்டிருந்த காலத்தில், இரகசியமாக சில இடங்களில் பாடசாலைகள் நடந்து கொண்டிருந்தன. தாலிபான்களின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது, RAWA அமைப்பு, ஆப்கான் சிறுமிகளுக்கு கல்வி புகட்டி வந்தது. தாலிபான் ஆட்சிக் காலத்தில், இரகசியமாக இயங்கி வந்த பாடசாலை ஒன்றில், மலாலை ஆசிரியையாக பணியாற்றினார். 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக புரிந்த வன்முறைகளை, RAWA ஆவணப் படுத்தியது. இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள், பாகிஸ்தான் ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டன. அவற்றைத் தான், CNN தனது செய்திகளில் போட்டுக் காட்டி வந்தது. அதற்குப் பிறகு தான், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் கொடுங்கோன்மை பற்றி உலகம் அறிந்து கொண்டது. 

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தாலிபான்களை வெளியேற்றிய பின்னர், "லோயா ஜிர்கா" எனப்படும் ஆப்கான் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட மலாலை, மக்களால் தெரிவு செய்யப் பட்டு, பாராளுமன்ற பிரதிநிதியாக அமர்ந்திருந்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த முன்னாள் யுத்தப் பிரபுக்கள், மத அடிப்படைவாதிகள், பிற்போக்குவாதிகள் மத்தியில், மலாலை ஒரு துணிச்சலான, நேர்மையான அரசியல்வாதியாக அமர்ந்திருந்தார். 

மலாலை தாலிபான்களை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், முன்னாள் முஜாகிதீன் குழுக்கள், நிலப்பிரபுக்கள், மதத் தலைவர்கள், போன்ற பல ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடினார். "இங்கே அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், முஜாகிதீன் யுத்தப் பிரபுக்களாக இருந்த காலத்தில் புரிந்த போர்க்குற்றங்களுக்காக, சர்வதேச நீதிமன்றத்தினால் தண்டிக்கப் பட வேண்டும்..." என்று மலாலை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத பிற்போக்குவாதிகள், "மலாலை ஒரு கம்யூனிஸ்ட்!" என்று குற்றஞ்சாட்டினார்கள். 

முன்னாள் யுத்தப் பிரபுக்களை கிரிமினல்களாக குற்றம் சாட்டிய மலாலையின் பேச்சு, அதிகாரத்தில் இருந்த மத அடிப்படைவாதிகளை ஆத்திரமூட்டியது. பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலைப் பயமுறுத்தல் விடுத்தனர். அதனால், பாராளுமன்ற கூட்டங்களில் கூட கலந்து கொள்ள முடியாமல், வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐ.நா. படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், காபுல் நகரில், அடிக்கடி வீடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமையில் வாழ்ந்து வருகின்றார். 

ஆப்கானிஸ்தான் போன்றதொரு அபாயகரமான நாட்டில், இத்தனை பெரிய ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். ஒரு பெண்ணாக அத்தனை சவால்களையும் சமாளித்து அரசியல் நடத்துவது சாதாரண விடயம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய மலாலாவுக்கு பதிலாக, ஆப்கான் மலாலைக்கு நோபல் பரிசு கிடைத்திருந்தால், அந்தப் பரிசுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டிருக்கும். 

என்ன செய்வது? "கம்யூனிஸ்டுகள்" எந்தளவு நல்லவர்கள், வல்லவர்களாக இருந்தாலும், உலகம் அவர்களை கண்டுகொள்வதில்லை. "கம்யூனிஸ்டுகளுக்கு" நோபல் பரிசு கிடைப்பதில்லை. உண்மையிலேயே அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகளையும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளையும் மக்களின் எதிரிகளாக நம்பும் அனைத்து அரசியல் ஆர்வலர்களையும் உலகம் புறக்கணித்து வந்துள்ளது.

மாலாலை பல உலக நாடுகளில் நடந்த கலந்துரையாடல்கள், பொதுக் கூட்டங்களில் பங்குபற்றி வந்துள்ளார். ஆனால், ஒபாமாவோ அல்லது பிரிட்டிஷ் மகாராணியோ அவரைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லை. மேற்குலக நாடுகளில் மலாலையை அழைத்து வந்து, அவரை மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் இடதுசாரி அமைப்புகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 


மேலதிக தகவல்களுக்கு:
Revolutionary Association of the Women of Afghanistan

The brave and historical speech of Malalai Joya in the LJ 


Friday, October 10, 2014

யேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உதவும் அல்கைதா நண்பன்


அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் அப்படி என்ன நெருக்கமோ தெரியவில்லை. அடிக்கடி அமெரிக்காவுக்கு, ஆபத்தில் உதவும் நல்ல நண்பனாக அல்கைதா இருக்கின்றது. அதற்கு இன்னொரு உதாரணம், சானா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பும், அதிலே ஐம்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் பலியான சம்பவமும். அண்மையில் யேமனில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்காவுக்கு அல்கைதாவின் உதவி என்றென்றும் தேவைப்படும் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

யேமன் நாட்டில், கடந்த சில மாதங்களாக, ஷியா இஸ்லாமிய சமூகத்தின் விடுதலைக்காக போராடும் ஹூதி கிளர்ச்சிப் படைகள், பெருமளவு பகுதிகளை பிடித்துள்ளன. வட யேமனில் வாழும் செய்யிடி இஸ்லாமிய பிரிவினரின் இயக்கமான "அன்சர் அல்லா" (அல்லாவின் உதவியாளர்கள்), வெளிநாடுகளிலும், பொது மக்களாலும் ஹூதி கிளர்ச்சிப் படை என்று அழைக்கப் படுகின்றது. அதற்குக் காரணம், இறைதூதர் முகமது நபியின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்ளும் ஹூதி குலத்தை சேர்ந்தவர்களே, அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்குகின்றனர். செய்யிடி இஸ்லாமியர்கள், முன்னர் பல நூறாண்டுகளாக யேமனை ஆண்டு வந்தனர்.

உலகம் முழுவதும், சிரியா, ஈராக்கில் நடக்கும் யுத்தங்களை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஹூதி கிளர்ச்சிப் படையினர், தலைநகர் சானா வரையில் முன்னேறி வந்து விட்டனர். வெளிநாட்டு ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டாலும், யேமனில் நடக்கும் அரசியல் மாற்றங்களை, அமெரிக்கா பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. ஓர் அமெரிக்க எதிர்ப்பு இயக்கம், யேமனின் ஆட்சியை கைப்பற்றுவதா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தனது ஆதிக்கத்தை வைத்திருக்க விரும்பும் அமெரிக்கா அதனை எவ்வாறு அனுமதிக்கும்? அமெரிக்காவுக்கு அது ஒரு கெட்ட கனவாகவே இருக்கும்.

அமெரிக்கா திடுக்கிட்டு அலறித் துடித்தமைக்கு காரணம் இருக்கின்றது. கடந்த வாரம் தலைநகர் சானா, ஹூதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து, சானாவில் இருக்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் ஹூதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகரமெங்கும் ஹூதி போராளிகள் மட்டுமே ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். யேமன் இராணுவம் பெயருக்குக் கூட அங்கே இல்லை. அது மட்டுமல்ல, நகரில் எல்லா இடங்களிலும், அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களைக் கொண்ட சுவரொட்டிகள் முளைத்தன. "அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக!" போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

யேமனில் இன்னொரு ஈரான் உருவாகிக் கொண்டிருப்பதாக நினைத்து அமெரிக்கா அஞ்சியது. அதனால் ஐ.நா. வை அனுப்பி மத்தியஸ்தம் செய்து வைத்தது. ஐ.நா. ஆலோசனையின் படி, முன்பிருந்த யேமன் அரசாங்கம், ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்தது. முந்திய அரசுப் பிரதிநிதிகள், அன்சார் அல்லா இயக்கத்துடன் அரசு அதிகாரத்தை பங்கிட்டுக் கொண்டனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள், யேமன் அரசில் பங்கெடுப்பது, பலருக்குப் பிடிக்கவில்லை. ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி வருவதால், யேமன் ஈரானின் செல்வாக்கு மண்டலத்திற்குள் வந்து விடும் என்று அஞ்சினார்கள். குறிப்பாக அமெரிக்காவும், அல்கைதாவும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இருவருக்கும் பொது எதிரி ஈரான். அதனால், அல்கைதாவும், அமெரிக்காவும் ஒன்று சேர்ந்ததில் வியப்பில்லை.

அல்கைதா முழுக்க முழுக்க சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த, ஒரு சில மதவெறியர்களின் இயக்கமாக உள்ளது. யேமனில் அல்கைதா என்பது வெளிநாடுகளுக்கு தெரியப் படுத்துவதற்கான பெயர் மட்டுமே. உள்ளூர் மக்கள் அவர்களை "சலாபி தீவிரவாதிகள்" என்று அழைக்கின்றனர். அனேகமாக எல்லா அரபு நாடுகளிலும் நடக்கும் சமூக விடுதலைப் போராட்டத்தை, மதவாத கலவரங்களாக திசைதிருப்பி விடுவது தான், அல்கைதாவின் குறிக்கோள். அந்த விடயத்தில், அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் இடையில் புரிந்துணர்வு நிலவுகின்றது.

கடந்த சில நாட்களாக, ஐ.நா. அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை குழப்புவதற்கு, அமெரிக்கா சதி செய்து வந்தது. அந்த சதியின் விளைவாக Ahmed Awad bin Mubarak பிரதமராக நியமிக்கப் பட்டார். ஆனால், ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பின் முபாரக் ஓர் அமெரிக்கக் கைக்கூலி என்பதால், அந்நிய தலையீடு அதிகரிக்கும் என்ற காரணத்தைக் காட்டி நிராகரித்து வந்தது.

தலைநகர் சானாவில், பின் முபாரக்கிற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதனால், (அமெரிக்காவால்) பிரதமராக நியமிக்கப்பட்ட பின் முபாரக் பதவி விலகி உள்ளார். அந்த சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலம் கூட ஆகவில்லை. சானாவில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நடுவில் நுளைந்த அல்கைதா தற்கொலைக் கொலையாளி, ஒரு கார்க் குண்டை வெடிக்க வைத்துள்ளார். அந்தக் குண்டுவெடிப்பில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். யேமனில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது. அனேகமாக, சிரியாவில் நடப்பதைப் போன்று, யேமனில் ஒரு உள்நாட்டுப் போரை கொண்டு வருவது, அமெரிக்காவினதும், அல்கைதாவினதும் நோக்கமாக இருக்கலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்
2.யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்
3.அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்
4.வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!
5.ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

Thursday, October 09, 2014

கொபானி : சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்"


சிரியாவில் "குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படக் கூடிய, கொபானி பிரதேசம் ISIS படையினரிடம் வீழ்ந்துள்ளது. துருக்கி எல்லையில் உள்ள கொபானி, கடந்த சில வாரங்களாக ISIS படையினரின் முற்றுகைக்குள் இருந்தது. அங்கிருந்து குர்து மக்கள் வெளியேறுவதை, துருக்கி படையினர் தடுத்து வந்தனர். அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள், ISIS எதிர்ப்புப் போரைத் தொடங்கிய பின்னர் தான், கொபானி மீதான தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய நாடுகளின் ISIS எதிர்ப்புப் போர், குர்து சிறுபான்மை மக்களை பாதுகாக்கத் தவறி விட்டது, ISIS முன்னேற்றத்தை தடுக்கத் தவறி விட்டது. "சிரிய முள்ளிவாய்க்காலில்" அகப்பட்டுக் கொண்ட மக்களுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நகரங்கள் எங்கும் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. திடீரென ஆயிரக் கணக்கான குர்தியர்கள், நெதர்லாந்து பாராளுமன்றத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்திலும் இதே மாதிரி பாராளுமன்றங்களை ஆக்கிரமிக்கும் போராட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. பெல்ஜியம், சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

நமது தமிழ் தேசியவாதிகளுடன் ஒப்பிடும் பொழுது, குர்திய தேசியவாதிகளை இடதுசாரிகள் என்று சொல்லலாம். ஆனாலும், அவர்கள் மனதிலும் தேசியவாதத்தின் குறைபாடுகள் காணப்படுகின்றன.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் குர்து தேசியவாதிகள், அந்தந்த நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் தேசியவாதிகளும் அப்படித் தான். ஆயினும், தமிழர்கள் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளையே அதிகம் ஆதரிக்கிறார்கள். அதற்கு மாறாக, குர்தியர்கள் தீவிர இடதுசாரிக் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.

நெதர்லாந்தின் சோஷலிசக் கட்சி (SP), அந்த நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சி ஆகும். அதிலே பெருந்தொகையான குர்து அரசியல் ஆர்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். "சிரிய குர்தியரின் முள்ளிவாய்க்கால்" என்று கருதப்படும் கொபானி பிரச்சினையில், கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் உருவாகின.

பெரும்பாலான குர்து அரசியல் ஆர்வலர்கள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் "ISIS பயங்கரவாத எதிர்ப்பு போரை" ஆதரிக்கின்றனர். நெதர்லாந்து அரசு அந்தப் போரில் பங்கெடுப்பதையும் ஆதரிக்கிறார்கள். அதற்கான காரணம் தெளிவானது. மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்பு போரை நடத்தினால், சிரியாவில் குர்து மக்களின் தாயகம் பாதுகாக்கப் படும் என்று நம்பினார்கள்.

அமெரிக்காவின் ISIS பயங்கரவாத எதிர்ப்புப் போரில், நெதர்லாந்து அரசும் பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விட்ட பொழுது, முதலாளித்துவ சார்புக் கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. சோஷலிசக் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. "2001 ஆம் ஆண்டு நடந்த அல்கைதா பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இன்னொரு வடிவம்" என்று கூறி, சோஷலிசக் கட்சி எதிர்த்து வாக்களித்தது.

முன்னாள் மாவோயிசக் கட்சியான சோஷலிசக் கட்சி, இன்று மார்க்சியம் பேசாத இடதுசாரிக் கட்சியாக உள்ளது. ஆயினும் அது, முதலாளியக் கட்சிகளுக்கு மாற்றீடான, மிகவும் கட்டுக்கோப்பான, கொள்கையில் உறுதியான கட்சி என்று, எதிராளிகளினாலும் பாராட்டப் படுகின்றது. அப்படியான ஒரு கட்சியில் முரண்பாடு தோன்றுவது எதிர்பாராத ஒரு விடயம்.

முன்பொரு தடவை, கொசோவோ பிரச்சினையில் யூகோஸ்லேவியா மீதான நேட்டோ இராணுவ நடவடிக்கையையும் SP எதிர்த்து வந்தது. ஆனால், புலம்பெயர்ந்த கொசோவோ அல்பேனியர்கள் பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள். அதனால், அது கட்சிக்கு எந்த நெருக்கடியையும் உண்டாக்கவில்லை.

நெதர்லாந்து சோஷலிசக் கட்சி, ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றது. அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி பொம்மல், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களுக்கு நன்றாகப் பரிச்சயமான ஒருவர். பல தடவைகள், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளார்.

ஆயினும், ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் குறித்து, உறுதியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் SP உள்ளது. கொசோவா என்றாலும், கொபானி என்றாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு, அந்த மக்களுக்கு சாதகமானதல்ல என்பது SP இன் நிலைப்பாடு. ஆயினும் இதைப் புரிந்து கொள்ளும் நிலையில், குர்து தேசியவாதிகள் இல்லை. அவர்கள், கொபானி பிரச்சினையில், அமெரிக்கா குர்து மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக நம்பினார்கள்.

கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்புப் போரை நடத்தி வருகின்றன. விமானக் குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும், ISIS படையினர் கொபானி பிரதேசத்தை முற்றுகையிட்டு கைப்பற்றி உள்ளனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் தான், ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் வேறு என்ற விடயம் குர்து தேசியவாதிகளுக்கு உறைத்தது. அதன் எதிரொலியாக, மேற்கு ஐரோப்பிய நகரங்களில் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. துருக்கியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், கலவரத்தில் முடிந்துள்ளன.

கொபானி நெருக்கடியை, ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நெருக்கடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டிலும் சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், இலங்கையை விட சிரியா சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியமான நாடு என்பது குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பான ஒரு விவாதம், தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் அவசியமானது. அத்தகைய விவாதங்கள் மூலம் தான் ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.